Sunday, January 27, 2013

தலைமுறையாய்த் தொடரும் துரோகங்கள்....

தலைமுறையாய்த் தொடரும் துரோகங்கள்....


தனது தகப்பனை பற்றிய நினைவுகளில்
எனது தாத்தா சொன்னார்....
எங்கப்பன் ஒரு மாறுபாட்டுக்காரன்...துரோகி என்று.....

 எனது தாத்தாவை பற்றிய நினைவுகளில்
எனது தந்தை சொன்னார்....
எங்கப்பன் ஒரு மாறுபாட்டுக்காரன்...துரோகி என்று.....
நான் கேட்டேன்....இறந்தவர்களை பற்றி பேசலாமா என்று...?

எங்கப்பனை பற்றி யார் கேட்டாலும் ....
இன்று நானும் சொல்கிறேன்.....
எங்கப்பன் ஒரு மாறுபாட்டுக்காரன்...துரோகி என்று.....

நாளை......
இதோ வரிசையில் ....எனது பிள்ளையும் .....
எனது சகோதரர்களின் பிள்ளைகளுமாய்.....

ஒற்றைச் சாளர வழியில்....
தலைமுறை .....தலைமுறையாய்த் தொடரும் துரோகங்கள்....
      
                                                                                                             - முகம்மது ரைசுதீன்

No comments: