Thursday, April 09, 2009

ம.ம.க வேட்பாளர்கள் அறிவிப்பு - பி.ஜே.பி யுடன் கூட்டணி???

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.


தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,

மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.

சலிமுல்லாஹ் கான்

தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா?

மேலே உள்ள செய்தியின் படி தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக தாங்கள் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளது. அப்படியானால் தமுமுக வின் நிலைப்பாடு என்ன?

ஒரு வேலை தவறுதலாக வெப்மாஸ்ட்டர் கட்சிபெயரை பிழையாக அடித்துவிட்டாரா? தெளிவுபடுத்தினால் சரி!!

பாஜக-வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி: சரத்குமார்

சென்னை, மார்ச் 23 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 15 இடங்களில் போட்டியிடப் போவதாகவும், சிவகங்கை தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : மக்கள் முரசு

8 comments:

சுட்டிப் பையன் said...

ஜார்ஜ் புஷ்ஷை ஷீவால் அடிக்கும் கணிணி விளையாட்டை இணையத்தில் சென்ற மாதம் வரையில் விளையாடினோம். இப்போது இவர்கள் மீது காறி துப்பும் கணிணி விளையாட்டை யாராவது தயாரித்தால், நம் ஆத்திரத்தை கொஞ்சமாவது தீர்த்துக் கொள்ளலாம்.

Anonymous said...

முத்திரி குட்டை முகவைத்தமிழன் நைனா

Anonymous said...

http://muthupet.wordpress.com/

Anonymous said...

மமக தலைவர்கள் தங்கள் சுகத்திற்க்காக எந்த வித கயவாளிதனும் துணிந்து செய்வார்கள் என்பது உண்மை, எவர்கள் தனித்து நின்றாலும் கூட்டணியாக இருந்தாலும் ஜெயிப்பது என்பது கனவில் கூட காண முடியாது மமக வில் தலை முதல் கால்வரை பொய் பித்தலாட்டம் நிறைந்து உள்ளது பிஜேபி உடன் கூட்டணி வைத்தமுதல் இது முற்றிலும் வெளிச்சமாகி விட்டது இவர்களக்கு மவ்லவி என்ற பொய் முகமூடி அணிந்து இருக்கும் முஜிபுர் ரஹ்மான் முழு முட்டுக்கட்டை கொடுக்கிறார் ஒரு வேலை இவரும் இந்த கொள்ளை கூட்ட தோடு இணைத்தால் சொஅதுக்கள் பெருக்கலாம் எஅன்ற ஒரு பேராசை போல் தெரிகிறது.

Anonymous said...

பிஜேபி தனித்து போட்டியிடும்


Friday, 10 April, 2009 01:21 PM
.
சென்னை, ஏப். 10: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பிஜேபி தனித்து போட்டி யிடுவதாகவும், 11 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியல் சில நாட்களில் வெளியிடப் படும் என்றும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ராமலிங்கம் கூறியிருக்கிறார்.
.
தேர்தல் பணிக்குழு தலைவராகவும் உள்ள அவர், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் காரணங்களால் பல்வேறுகட்சிகள் எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் 11 தொகுதிகளில் பிஜேபி தனித்து போட்டியிடுகிறது. அந்த 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் அந்த பட்டியல் வெளியிடப்படும்.
more details http://www.maalaisudar.com/newsindex.php?id=28177%20&%20section=19

அஹ்மத் said...

மேலுள்ள கட்டுரையில் செய்தி திரிக்கப்பட்டுள்ளது.

சரத்குமாரின் கட்சிக்கு ஆதரவு என்று த.மு.மு.கவிலிருந்து யாரும் இன்னும் அறிவிக்கவில்லை. 'ஆதரவு தெரிவிக்கும்' என கட்டுரை ஆசிரியரே தன் ய்யுகத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி அவரது சொந்தகருத்தைச் சொல்லிவிட்டு, தமுமுக ---> ச.ம.க---> பி ஜே பி, ஆகவே, தமுமுக ----> பி ஜே பி என்று தன் கணித அறிவை வெளிப்படுத்துகிறார்.

அஹ்மத் said...

மேலுள்ள கட்டுரையில் செய்தி திரிக்கப்பட்டுள்ளது.

சரத்குமாரின் கட்சிக்கு ஆதரவு என்று த.மு.மு.கவிலிருந்து யாரும் இன்னும் அறிவிக்கவில்லை. 'ஆதரவு தெரிவிக்கும்' என கட்டுரை ஆசிரியரே தன் ய்யுகத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி அவரது சொந்தகருத்தைச் சொல்லிவிட்டு, தமுமுக ---> ச.ம.க---> பி ஜே பி, ஆகவே, தமுமுக ----> பி ஜே பி என்று தன் கணித அறிவை வெளிப்படுத்துகிறார்.

முகவைத்தமிழன் said...

அன்பின் அஹ்மத்,

கட்டுரை திரிக்கப்படவில்லை, நீங்கள் தான் எதையும் படிக்காமல், பி.ஜே யிடம் இருக்கும் மூலை கழுவி விடப்பட்ட ததஜ காரனை போல புலம்பியுள்ளீர்கள். ஐயோ உங்கள் அறிவை என்னவென்பது?

தமுமுக வின் அதிகாரப்பூர்வ இணயைத்தளத்திலேயே இந்த செய்தி தெளிவாக உள்ளது.

http://tmmk.in/news/999368.htm

நன்றி