Wednesday, January 21, 2009

தப்லீக் அன்றும் இன்றும் - யாவரும் அவசியம் படிக்கவும்.

தப்லீக் அன்றும் இன்றும்
ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா

தவிர்க்க முடியாத சில குறிப்புகள்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் உத்தம ஸஹாபாக்கள் துயர்ந்தோர் அனைவர் மீதும் யுக பரியந்தம் சொரியட்டும்.

'எவர்கள் மெய்யாகவே விசுவாசம் கொண்டு தங்கள் விசுவாசத்துடன் யாதோர் அக்கிரமத்தையும், கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு. அவர்கள் தாம் நேரான வழியிலும் இருக்கின்றனர். (6:82)

நீண்டகால எண்ணம் செயல்வடிவம் பெறுகின்றபோது மனம் நிறைகிறது. கடந்த ஏழு வருடங்களாக நாட்டின் பல்வேறு மஸ்ஜித்துக்களில் இமாமாக கடமையாற்றிய அனுபவத்தின் வெளிப்பாடு இச்சிறுநூல்,

தப்லீக் ஜமாஅத் முழுமையாக மஸ்ஜித்துக்களை தளமாகக் கொண்டியங்கும் ஓர் இயக்கம் என்பதாலும் அதனுடனான நெருக்கமான தொடர்பாலும் அதுபற்றிய நடுநிலையான விமர்சனத்தை என்னால் எழுத முடிகறது.

இலங்கையில் பல தஃவா இயக்கங்கள் இயங்கிவருகின்ற போது ஏன் தப்லீக் ஜமாஅத்தை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்ற ஆதங்கம் அதன் அபிமானிகளுக்கு எழலாம். பிற இயக்கங்களை விட, இஸ்லாத்தில் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் தப்லீக் ஜமாஅத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இருட்டறைக்குள் கூடி தப்லீக் ஜமாஅத்துப்பற்றி விமர்சிப்பதைவிட ஆராக்கியமான விமர்சனத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது சிறந்தது என்ற சிந்தனை ஏற்பட்டபின்புதான் இதை எழுதத் துணிந்தேன்.

எதார்த்தத்தில் தப்லீக் தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதும் இல்லை. விமர்சனங்களை அங்கீகரிப்பதுமில்லை. இந்தப்போக்கை அது மாற்றவேண்டும் என்பதே அறிஞர் அவா. விமர்சனங்களினால் பாதுகாக்கப்படுவதை விட, புகழ்ச்சியினால் அழிந்து போவதைத்தான் தப்லீக் பெரிதும் விரும்புகிறது.

தப்லீக்கின் பரிபாசையில் 'ஹிக்மத்' என்பது தந்திரத்துடன் இணைந்த தஃவா முயற்சியாகும். இது முற்றிலும் தவறான கணிப்பீடாகும்.

ஹிக்மத் என்பது நளினமுடன் கூடிய நாகரீகமுள்ள வார்த்தை மூலமாக இறைவழியில் அழைப்புவிடுக்கும் அல்லது தர்க்கிக்கும் இங்கிதத்தைக் குறிக்கின்றது. (6:125) ஷரீஅத்துக்கு முரண்பட்ட அனுஷ்டானங்களை மூடிவைத்து அல்லது அங்கீகரித்து செய்கின்ற எத்தகைய அணுகுமுறைக்கும் ஹிக்மத் என்ற பதத்தை பிரயோகிக்க முடியாது.

இது கபடத்தனமான 'தஃவா' முயற்சியாகும். ஹிக்மத் விரிந்த கருத்துப் பரிமாற்றத்தையும் ஆழமான பொருட்செறிவையும் கொண்ட வார்த்தையாகும். விரிவை அஞ்சி அவற்றைத்தவிர்த்து விஷயத்துக்கு வருகின்றேன்.

நான் 92 இன் இறுதிப் பகுதியில் கண்டி மாவட்டத்தின் பல்கும்புரை என்ற கிராமத்தின் கடமையாற்றிய போது தப்லீக்கின் நெருக்குதல்களை எதிர் கொள்ள ஆரம்பித்தேன்.

மூன்றுநாள் தப்லீக்கில் வெளிக்கிளம்பாதவர்கள் முழு மனிதனாக முடியாதென என்னை நோக்கி ஒருவர் கூறினார். இன்னொருவரோ, அரபு சஞ்சிகைகள், நூற்களை வாசித்தால், இதுவெல்லாம் வஹ்ஹாபிகள் எழுதிவைத்தது, வாசிக்கக் கூடாதென்பார்.

குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவயில் கடமையாற்றியபோதும் இவ்வாறானதோர் அனுபவத்தை எதிர் கொள்ள நேரிட்டது.

மிம்பரில், தஸ்லீமா, ஸல்மான் ருஷ்டி போன்ற இஸ்லாத்தில் வைரிகளை சாடியதற்காக, அங்குவந்த ஒருவர் குத்பாவில் இதுவெல்லாம் கூறக்கூடாதென்றார். அத்துடன் என்னை 'தப்லீக் விரோதி' எனப் பிரச்சாரப்படுத்தியும் வந்தார்
.
பின்பு அனுராதபுர மாவட்டத்தில் 'இக்கிரிகொல்லாவ' என்ற கிராமத்தில் கடமையாற்றிய காலத்தில் பல கசப்பான நிகழ்வுகளை எதிர் கொள்ள நேரிட்டது. அவை என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள்,

ஒருநாள் இரவு இஷாத் தொழுகைக்குப் பின் தஃலீம் தொகுப்பு வாசிப்பதற்கு பதிலாக, நபி பெருமானார் (ஸல்) தொழுகைக்குப்பின் ஓதிவந்த வாரிதான் அவ்றாதுகள் பற்றிய விபரங்களை கூறினேன். இதை சகித்துக் கொள்ள முடியாத ஒருவர், 'அஸா' வைத்தூக்கிக் கொண்டு குத்தி கிழித்து விடுவேன் எனப்பாய்ந்து வந்தார்.

காரணம் யாதெனில் தஃலீம் வாசிக்கப்படுவதற்குப் பதிலாக, பெருமானாரின் பொன் மொழிகள் விளக்கப்படுவதை அவர் விரும்பவில்லை என்பதை பின்பு அறிந்தேன். 'அது ஹதீது' வித்தியாசமாக வாசிக்கவில்லையே என்றேன். 'ஹதீதை தூக்கி அங்கால எறி' என்றார் இன்னொருவர்.

இதுபோன்ற அனேக கசப்பான அசௌகரியங்களை நேருக்குநேர் முகங்கொள்ள நேரிட்டது: நேரிடுகிறது. தனது ஜமாஅத்துக்கு ஒட்டுதல் இல்லாத ஒருவன் எத்தகைய அந்தஸ்துள்ளவனாக இருந்தாலும், அவனின் தன்மானத்திற்கும் சுயகௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துவதில் சில தப்லீக் அங்கத்தினர் பின்நிற்பதில்லை என்ற அழுத்தமான உண்மை இவற்றின் மூலம் எனக்கு கற்றுத்தரப்பட்டது.

இச்சிறுநூலை படிப்போர் தப்லீக்கை ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றேன் என்றோ, தப்லீக் விரோதி என்றோ கருதிவிடக் கூடும். உண்மை அதுவல்ல,
அதன் நண்பகத்தன்மை, மக்கள் செல்வாக்கு, தியாகம் போன்ற குணாதிசயங்களை நானறிவேன்.

அல்குர்ஆன் தவிர்ந்த மற்றெல்லா அம்சங்களும் தீவிர விமர்சனத்திற்குட்படுத்த வேண்டியதே, ஆலோசனைகள், கருத்துப்பரிமாறல்கள் மூலம் ஓர் இயக்கம் தன்னை வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும்.

இதன் ஆதங்கமே இந்நூல். இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் குறைகளை விடுத்து நோக்கும் போது தப்லீக் ஒரு தூய்மையான இயக்கம் என்ற உண்மையை எவரும் நிராகரிக்க முடியாது.

மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் நோக்கத்திலிருந்து தப்லீக் நெறிதவறிச் செல்கிறது என்பதை விளக்குவதுதான் என் எண்ணம் மக்களின் பாமரத்தனத்தை பயன்படுத்தி, சிலமேட்டுக்குடி வியாபாரிகள் எங்ஙனம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்ற பேருண்மையை சாதாரண ஊழியனும் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படாமல் சமநிலை மனத்துடன் தூயசிந்தானையுடன் படிப்போருக்கு மட்டுமே தன் சொந்த இயக்கத்தின் சாதக பாதகங்களை எடைபோடமுடியும். தப்லீக்கின் சாதகமான விஷயங்களை விரிவை அஞ்சி தவிர்த்துள்ளேன்.

இதன் மூலம் தப்லீக் ஜமாஅத்தை தரம் தாழ்த்துவது என் நோக்கமல்ல. மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம், காலத்திற்கியைந்த சீர்திருத்தத்துடன், தன் தவறுகளை களைந்து தஃவாப்பாதையில் முன்னேற வேண்டுமென்பதே அவா.

அத்துடன் சகோதர இயக்க அன்பர்களிடம் நான் வினயமாய் வேண்டுவது தப்லீக் ஜமாஅத்தினரை இழிகண் கொண்டு நோக்காதீர்கள். அவர்களினால் நிகழும் தவறுகள் அறியாமையினாலும், பாமரத்தினத்தினாலுமே ஏற்படுகின்றது. இங்கிதமாக அணுகி, தவறுகளை சுட்டிக்காட்டும் போது, பெருமனத்துடன் ஏற்றுக் கொள்வோர் அங்குண்டு.

இது என்தனிப்பட்ட நீண்டகால அனுபவதும் கூட (எதிர்வாதம் புரிந்து தன்தவறை நிச்சயப்படுத்துவோர் விதிவிலக்கு) எனவே அவர்களுக்காக பரிதாபப்படுங்கள். மனிதாபிமானத்துடன் அணுகுங்கள்.

இறுதியாக, இருளை சபித்துக் கொண்டிருப்பதை விட விளக்கொன்றை ஏற்றிவைப்பது சிறந்தது, என்பதற்கேற்ப, இதன்மூலம் ஒருமெழுகுவர்த்தியை ஏற்றிவைத்த ஆத்மதிருப்தி எனக்கு ஏற்படுகிறது. அது இறை திருப்தியாகவும் அமைய வேண்டும் அல்லாஹ் நம் அனைவருக்கும் உயர் ஹிதாயத்தை தருவானாக!

பணிவுடன் அறபாத். 71, பஸீர் வீதி, மாவடிச்சேனை, வாழைச்சேனை

தப்லீக் அன்றும் இன்றும்
(நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிருப்போர் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான் (16:125)

தஃவாப் பணி என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல. இது அண்மைக்காலமாக ஆரம்பிக்கப்பட்ட வேலையுமல்ல. நபிமார்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பரியந்தம் தனிநபராகவும், ஜமாஅத்தாகவும் இப்பணி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

மறந்துபோன இத்தூதுத்துவச் செய்தியை மனித சமூகத்திற்கு நினைவூட்டி, இறைவழியில் நெறிப்படுத்த, காலத்திற்கு காலம் தனிநபர்களும் இயக்கங்களும் நிறுவன ரீதியாக தோன்றி செயற்பட்டு வருகின்றன.

தற்போது தஃவாப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள இயக்கங்களும் எதிர்காலத்தில் தோன்றவிருக்கின்ற அமைப்புக்களும் முஸ்லிம் உம்மத்திற்கு புதியதுமல்ல. சிறிய கருத்து வேறுபாடுகள், சந்தர்ப்ப சூழல் என்பன காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்கு காலம் பல இயக்கங்களும், அமைப்புக்களும் தோன்றுவதுண்டு. இவற்றில் அல்லாஹ்வுக்காக தோற்றுவிக்கப்பட்டவை மட்டுமே நின்று பிடிக்கும். ஏனையவை அல்குர்ஆன் கூறுவது போல் களங்கம் ஏற்படுத்திவிட்டு மறைந்து விடும்.

'தங்கள் இதயங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் இதயங்கள் துண்டு துண்டாகும் வரை அவற்றை உறுத்திக் கொண்டே இருக்கும்.

இப்பணியில் மனத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வெற்றிகண்ட மேதைகளின் வரலாறு தற்கால தாயிகளின் மன வலிமைக்கும் உத்வேகத்திற்கும் உரமூட்டுவதாய் உள்ளது. அவர்களின் தூய சிந்தனை, விடா முயற்சி, தாராள மனப்போக்கு, மென்மையான அணுகுமுறை, அக புறவாழ்வின் மாசுவறுவற்ற தொழிற்பாடு, இறையச்சம் போன்ற உயர் குணங்கள் அவர்களின் வெற்றிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டது.

சமூகத்தில் கொள்கை ரீதியாக ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மிகச்சில. ஏனையவை தனிப்பட்ட நோக்கங்கள் உடையன. ஆனால் ஆரம்பத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் நாளடைவில் அவற்றுக்கென்று சில கொள்கைகளை வளர்த்துக் கொள்வதுண்டு.

இதனால் சில சந்தர்ப்பங்களில் அவற்றால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கவும் முனைவதுண்டு. உண்மையில் இவ்வித கருத்து வேறுபாடுகளும் அமைப்புக்களும் அடிப்படையிலேயே கொள்கை ரீதியானவைகளாக அமைந்திருக்குமானால் அவை ஒவ்வொன்றும் தனித்துச் செயற்பட துணிந்திருக்காது. மாறாக ஏற்கனவே உள்ள இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றில் மிகவும் பொருத்தமான ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கும்.

கடந்த நூற்றாண்டில் சத்திய இஸ்லாத்தை சரிவரப்புரிந்து செயல்வடிவம் கொடுத்து உழைத்தவர்கள் பலர். அவர்களில் மௌலானா இல்யாஸ் (ரஹ்), மௌலானா அபுல்அஃலா மௌதூதி, ஹஸனுல் பன்னாஹ் போன்ற மேதைகளை குறிப்பிடலாம். எனினும் பாமர மக்களை நெறிப்படுத்தி அவர்களிடத்தில் இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களை பயிற்றுவித்ததில் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்ள் (ஹி 1303-1363) முதன்மை பெறுகின்றார்கள். தப்லீக்கின் வளர்ச்சியை ஆய்வுசெய்வோர் இவ்வுண்மையை புரிந்து கொள்ள முடியும்.

'தரீகே ஈமான்' என்ற பெயரில் இவ்வியக்கத்தை ஆரம்பித்த மௌலானா 1939 இல் தப்லீக் ஜமாஅத் என்ற பெயர் மாற்றத்தோடு மேவாத் பகுதியில் அத்தீவிர ஈடுபாட்டுடன் உழைக்கலானார்கள். இதுபற்றி மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது.....
....'இஸ்லாமிய சேவையில் பொதுமக்களையும் ஈடுபடுத்தி, அவர்களையும் இப்பணியில் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்ட இப்புதிய திட்டத்திற்குத்தான் 'தப்லீக்' என்று பெயர். இத்திட்டத்தை ஆதரித்து அமுல்படுத்துவதற்காக முன் வரக்கூடிய சகோதரர்களுக்கு தப்லீக் ஜமாஅத் என்றும் சொல்லப்படுகிறது.' நூல்: மௌலானா இல்யாஸ் (ரஹ்), பக்கம்: 24 பதிப்பு: 1955

இப்பணியில் முதற்கட்ட நடவடிக்கைகளை காந்தலா என்ற பின் தங்கிய கிராமத்தில் இருந்து ஆரம்பித்து நெறிப்படுத்திய பின் அயற்கிராமங்களுக்கும் பிராச்சாரப் பணியை விஸ்த்தாரமாக்கினார்கள்.

தனது இருபது வருடகாலப் பணியில் இதன் வெற்றிக்கு துணையாக உலமாக்களையும் கற்றறிந்த அறிஞர்களையும் அரவணைத்து அவர்களின் வழிகாட்டலின் கீழ், இப்பணியை செய்ததாக மௌலானா அவர்களே வாக்குமூலம் தருகிறார்கள்.

....'மதக்கல்வி கற்ற உலமாக்களை இவ்வியக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளச் செய்தால் தான் இவ்வியக்கம், பொது மக்களிடையே பரவி முன்னேற்றமடையும்'... நூல்: மௌலானா இல்யாஸ் (ரஹ்) பக்கம் : 64

மௌலாவின் இந்த அபிலாஷை, இலட்சிய வேட்கை, ஆகியவற்றை தற்கால தப்லீக் ஜமாஅத்தினர் அலட்சியப் படுத்துவதுடன், உலமாக்கள், தூய்மையான தீனை முன்வைக்கும் போது, அவற்றைப் புறக்கணிப்பதுடன், எதிராக செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இயக்கத்தின் உயர் வெற்றிக்குத் தகுதிவாய்ந்த உலமாக்களின் அணுசரணை கவனத்திற் கொள்ளப்படாமையும் பிரதான காரணமெனலாம்.

இயக்கத்திற்குள் தற்போது இருக்கும் சில உலமாக்கள் மேட்டுக்குடியினரின் தீர்மானங்களுக்கு தலையாட்டுபவர்களாகவும், தப்லீக் ஜமாஅத்தின் தவறுகளையும் வன்முறைசார் பண்புகளையும் அனுமதித்து, தார்மீக அங்கீகாரத்தை வழங்கக் கூடியவர்களாகவுமே இருக்கின்றனர். இவ்வுயர் இயக்கத்தின் இலட்சியக் கொள்கையை மௌலானா அவர்கள் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.

...'தப்லீக் இயக்கமானது மக்களை தொழுகைக்கு மாத்திரம் அழைக்கக் கூடிய இயக்கமென்று சிலர் நினைக்கிறார்கள். அறியாமை, அந்தகாரம், மௌடீகம், பிற்போக்கு, முதலியவைகளால் சீரழிந்து கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தை தட்டி எழுப்பி, இஸ்லாத்தின் உணர்ச்சியும் ஈமானின் ஜோதியும் ஆத்மீக சக்தியும் நிறைந்த வளங்கள் கூடிய ஒரு சிறந்த சமுதாயமாக சிருஷ்டிப்பதே தப்லீக் இயக்கத்தின் உயர்ந்த இலட்சியமாகும்' மௌலானா இல்யாஸ் (ரஹ்), பக்கம் : 83

தப்லீக் இயக்கத்தின் அதிஉயர் சாசனமாக இப்பிரகடனம் முழங்குகின்றது. எனினும் ஜமாஅத்தினரால் மேற்கூறிய எந்தப் பணியும் பிரச்சாரப்படுத்தப்படுவதில்லை.

தொழுகைக்கு அழைப்பது, இன்னும் பிற ஆத்மீக பயிற்சி என்பதுடன் தஃவாவை மட்டுப்படுத்தி வருகின்றனர்.

தப்லீக் ஜமாஅத்தின் மூலவேர் பாமரர்கள் தான். பள்ளிவாயிலை பிரதான தளமாகக் கொண்டியங்கும் இவர்களால் மூடிக்கிடந்த பள்ளிகள் அமல்களால் அலங்கரிக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மனந்திருந்தி வாழ தப்லீக் அரிய பங்களிப்பை நல்கியது. நல்கி வருகின்றது. ஐங்கால தொழுகை உட்பட, இன்னும் பிற மங்கிப் போன சுன்னத்துக்களும் உயிர் பெற்றன. தனது சொந்தப் பணத்தில் பாகுபாடின்றி கிராமந்தோறும் அலைந்து திரிந்து மக்களை இறை இல்லத்தின்பால் அழைத்து, தக்வாவையும் பக்குவத்தையும் ஊட்டியது.
படிப்பறிவே இல்லாத பலர் சிறந்த இஸ்லாமிய தாயிகளாக உருவாக்கியதில் அபரித வெற்றி கண்டது தப்லீக், இவற்றை எவரும் மறுத்து விடமுடியாது.

எனினும் இப்பணிகள் மட்டும் தான் இஸ்லாம் என்ற மாயையில் தஃவாவை சுருக்கிக் கொண்டது தான் வேதனைக்குரியது.

தப்லீக் சரியான விதத்தில் பரவவேண்டுமானால் கீழ் கண்ட திட்டங்களை அமுல் நடத்த வேண்டியது அவசியமென மௌலானாவே வாக்கு மூலம் தருகின்றார்கள்.

1. தப்லீக் இயக்கத்தின் திட்டங்களை பிரச்சாரம் செய்வதற்கு சிறந்த பேச்சாளர்களை, உலமாக்களை தயார் செய்து அவர்கள் மூலம் தப்லீக் பிரச்சாரம் செய்தல்.
2. தப்லீக் இயக்கத்தின் நோக்கங்களை அறிவிப்பதற்காக குறைந்த பட்சம் ஒரு சிறந்த வாரப்பத்திரிகையை நடத்துதல்.பக்கம் : 128

இந்த இலட்சியத்துடன் இன்றைய தப்லீக் முரண்பட்டு நிற்கிறது.

சஞ்சிகை, புத்தகம், பத்திரிகை மூலமாக தஃவாச் செய்வோரை தமது பயான்களில் சிலர் பரிகஷிப்பதும், அவற்றினால் பயனில்லை என்பதுடன் நின்று விடாமல், அவற்றை படிக்க தடை விதிப்பதையும் சில பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது.

ஓர் இயக்கமோ அமைப்போ நீண்ட காலம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் போது அதன் இலக்கு நோக்குடன் மற்றவையும் கலந்து விடுகின்றன.
பல்வேறு நோக்கங்கள், எண்ணங்கள் அதனுள் புகுந்து விடுகின்றன.

எனவே இயக்கத்தின் உடல் எஞ்சி நிற்க, அதன் உயிரோட்டம் காணாமல் போய்விடுகின்றது.

அதன் அமைப்பு விதிகளில் குறிக்கோளும் இலகும் தெளிவான வார்த்தைகளில் காணப்படும். அதேவேளை நடைமுறை வாழ்விலிருந்து அது அழிந்து விடுவதை அவதானிக்கலாம். இத்தகைய பாரிய அழிவை நோக்கியே தப்லீக் ஜமாஅத் சென்று கொண்டிருக்கிறது.

வெறும் கொள்கை முழக்கம், புறத்தோற்றம் மாற்றம், 'வக்தில்' செல்லுதல், தினசரி அமல்களில் ஈடுபடல் மட்டும் தான் தப்லீக் என்ற பிரமை அதன் அடிமட்ட, ஏன் சில உயர் மட்ட உறுப்பினர்களிடம் கூட, வேரூன்றி உள்ளது.

ஒரு கருத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லை, மிக அதிகமான மக்கள் கையாளும் போது அந்த சொல்லின் கருத்துக்கள் நாளடைவில் தேய்ந்து போகின்றன. தப்லீக்கிற்கும் இவ்வபாயம் தான் ஏற்பட்டிருக்கின்றது.

நீண்ட கால உழைப்பில் கட்டியெழுப்பப் பட்ட, இஸ்லாமிய இயக்கமொன்று வெறும் சடங்கு வாத சிந்தனைகளால் சிக்குண்டு, திணறுகின்றது. தனிப்பட்ட மனிதர்கள் தப்லீகில் தம் தனித்தன்மையை) வளர்த்துக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் தப்லீக் ஏகாதிபத்திய வாதிகளாகவும், தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள, தமது செயற்பாடுகளை நியாயப்படுத்த கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

மேலும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தில் வேரூன்றி வருகின்ற அபாயகரமான வியாதியாக 'ஜமாஅத்துவாதத்தை' குறிப்பிடலாம்.

சகோதர தஃவா இயக்கங்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும், அவர்களின் தஃவா நடவடிக்கைகள் பள்ளிவாயலை மையமாகக் கொண்டு செயற்பட தடை விதிப்பதும் வெள்ளிடை மலை. (சில இடங்களில் விதிவிலக்கு) சகோதர இயக்கமொன்றின் அனுகூலங்களை விடுத்து, குறைபாடுகளை மட்டும் விமர்சிக்கும் பண்பு தப்லீக் தவிர்ந்த பிற இயக்க உறுப்பினர்களிடமும் காணப்படுகின்ற பொதுக்குணமென்பதையும் ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இது இயக்கத்தை வணங்குவதன் உச்சக்கட்ட எதிர்வினையாகும். நாங்களே சரி, எங்கள் ஜமாஅத்தே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதென்ற முடிவுக்கு ஜமாஅத்துவாதிகள் வருவதற்குக் காரணம் மேல் மட்ட தலைமைத்துவம். இது குறித்து சரியான அறிவுறுத்தல்கள் கலந்துரையாடல்களை ஏற்படுத்தாமையே!

சகோதர இயக்கமொன்றுடன் கருத்துப் பரிமாற்றம் அல்லது அவர்களுடன் இணைந்து இஸ்லாத்தின் பொது விரோதிகளை எதிர்ப்பதில் ஒத்துழையாமை போன்ற இன்ன பிற செயற்பாடுகளால், தப்லீக் பிற இயக்கங்களுடன் தனக்குள்ள ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றது.

இவ்வராஜரகப் போக்கு மௌலானா இல்யாஸ் அவர்களின் காலப்பிரிவில் வாழ்ந்து பாமர 'ஜமாஅத்து வணங்கி'களிடமும் ஏற்பட்டது. எனினும் மௌலானா அவர்கள் அவற்றை எங்கனம் எதிர்கொண்டார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்

'தப்லீக் இயக்கத்திற்கும் ஜமா அத்து இஸ்லாமிய இயக்க அங்கத்தினர்களுக்குமிடையே ஒரு பிளவு ஏற்ப்பட்ட போது, மௌலானா அவர்கள் ஒழுங்குபடுத்தி ஒருவர் மீது ஒருவர் பாஸத்தோடும் பரிவோடும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள்.பார்க்க: மௌலானா இல் பக்கம்: 101

மௌலானாவிற்குப் பின் தப்லீக் பணிசெய்த புரிந்துணர்வற்ற பாமரரும் சில இயக்க எழுத்தாளரும் இப்பணியின் மகிமையையும் தாற்பரியத்தையும் சிதைக்க முற்பட்டதுடன் இயக்க வேறுபாட்டையும் தோற்றுவித்தனர்.

'இப்பணியில் ஈடுபடாதவர்கள் மிகவும் கேவலமாகக் கருதப்பட்டார்கள். சுருங்கக் கூறுமிடத்து, அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப்படாது போய் விட்டார்கள். மேற்படி நூல் பக்கம்: 89

என்றெல்லாம் எழுதி ஜமாஅத்துவாதம் வேரூன்றி வித்திட்டனர். இவ்வன்முறை சிந்தனைப் போக்குக் குறித்து மௌலானா அவர்கள் கூறுவதை நோக்கற்பாலது.

'.....எங்கு மக்களின் ஒத்துழையாமையும், வெறுப்பும் தெரிய வருமோ அங்கு அவர்களை நிரபராதிகள் என்று ருசுப்படுத்துவதற்காக அவர்களைப்பற்றி நல்ல வார்த்தை கூற வேண்டும். இன்னும் சன்மார்க்கம் பயனடையவும், அனுகூலங்களை அடையவும் எண்ணங்கொண்டு அவர்கள் சமூகத்திலே செல்ல வேண்டும். மணிமொழிகள் பக்கம்: 91

எந்த ஓர் இயக்கமாயினும் அதன் ஸ்தாபகரையும் அவருடன் தோள்நின்று உழைத்தோரையும் புகழ்வதென்பது தவிர்க்க முடியாதது.

எனினும் துரதிஷ்டவசமாக தப்லீக் ஜமாஅத்தினுள் குருபூசை ஊடுருவி, அவர்கள் அறியாமலேயே, ஈமானின் கோட்பாடு அம்சங்களை சிதைத்துக் கொண்டிருக்கின்றது.

மகான்கள், பெரியோர்கள் என்ற மாயைக்குள் அகப்பட்டு அவர்களின் மூலம் நடைபெற்றதாக இட்டுக்கட்டப்பட்ட சித்து விளையாட்டுக்களையும்
கதை கப்ஸாக்களையும், அவிழ்த்து விட்டு,

பயான்களில் ஹக்குடன், 'பாதிலை' இரண்டறக்கலந்து, வெறும் ஊகங்களுக்கும், வெளிக்கலாச்சார கப்பாஸ்களுக்கும், இஸ்லாமிய வடிவம் கற்பிக்க முயல்கின்ற தான் தோன்றித்தனமான, தீவிர போக்கையிட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும்.

மார்க்கத்தை பிரச்சாரப்படுத்த பொய்யும், புரட்டும் கற்பனைக் கதைகளும் தேவையில்லை. எண்ணிலடங்கா தூய்மையான வரலாறும், நபிமொழிகளும் நம் வசமுண்டு.

நபிகளார் கூறுவதை பாருங்கள்.
'உங்களை நான் மிக வெண்மையான வழியில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று வெளிச்சம் நிறைந்தது. எனக்குப் பின் நான் விட்டுச் சென்ற அந்த வழியை விட்டும் வழி தவறுகிறவன் தான் நாசமாகக் கூடியவன் என்கிறார்கள்.'இர்பான் இப்னுஸாரியா, இப்னுமாஜா
மேலும் நபி(ஸல்) அவர்கள், 'நான் சொல்லாததைச் சொன்னதாக எவன் சொல்லுகிறானோ அவன் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.' என்று நவின்றுள்ளார்கள்(முஸ்லிம்)

'நபியவர்கள் சொன்னார்கள், இது ஸஹீஹானரிவாயத்', என்று அப்பட்டமான போலி ஹதீதுகளையும், 'மௌலுஆன', நபிமொழிகளையும் மிக அழுத்திப் பிரசங்கம் செய்து வரும், தப்லீக் ஜமாத் நபிகளாரின் இன்னொரு எச்சரிக்கையையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மூன்று விடயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கிறான். அவை:
1. (இன்னார்) சொன்னார், (இப்படி) சொல்லப்பட்டது, என்று சொல்வதையும்,
2. பணத்தை வீணாக அழிப்பதையும்,
3. அதிகமாகக் கேள்வி கேட்பதையும், என நபியவர்கள் கூறுகிறார்கள். புஹாரி, முஸ்லிம்

இதில் வெறுக்கப்பட்ட, முதலாவது விடயம் தப்லீக் ஜமாஅத்தினரால் போற்றப்படும் பண்பெனக் கொள்ளலாம்.

அவர் சொன்னார், இவர் சொன்னார், ஒரு பெரியார் கூறினார், சொல்லப்பட்டது என்ற இறை வெறுப்பு வாசகங்களை தமது பயான்களில் ஒரு விதியாகவும், நழுவல் போக்காவும், தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.

நபிவழியே நம் வழி என்ற சித்தாந்தத்தில் உழைக்கும் ஓர் இயக்கம், அந்த நபியை இழிவுப்படுத்துமாற் போல், அவர் சொல்லாத செய்யாத விடயங்களை,
'பிரபல்யமான' பெயரில் செய்து வருவதை சர்வசாதாரணமாக அவதானிக்கலாம்.

இதில் வேடிக்கை என்னெவென்றால் விற்காத சரக்கிற்கு விளம்பரம் தேடமுனைவது போல், நியாஸ் மௌலவி, ரிஸ்விமுப்தி போன்ற பிரபலங்களை சொல்லி கப்சாக்களை அவிழ்த்து விடுவதுடன்,

இந்த இயக்கத்தில் டொக்டர், என்ஜினியர் போன்றோரும் இணைந்துள்ளனர் எனத்தனிநபர் துதிபாடி ஆள் சேர்ப்பதும், ஓர் அம்சமாகி விட்டது.

இல்யாஸ் ரஹ் அவர்களின் தஃவாப்பணியை நுணுகிப்படிக்கும் எவரும் இத்தகைய இழிபண்பினையையும், விளம்பரத்தையும் கண்டு கொள்ளல் சிரமமென்பதையும் காணலாம்.

வேதனை யாதெனில், கொள்கைக்கு முக்கியத்துவம் தராமல் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவர்களை மிதமிஞ்சிப் புகழ்தல், இவர்களின்
கருத்தும் முடிவும் மாற்றமுடியாதெனக் கருதல் இவ்வாறான தனிநபர் பூஜை அண்மையிற்தான் தப்லீக்கில் தொற்றிக்கொண்ட நோயெனலாம்.

பிரபலங்களின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுபவர்கள் 'ஜமாஅத் விரோதி' என ஒதுக்கப்படுகின்றனர். இது மௌலானாவின் தூய்மையான ஏகத்துவ கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டது.

தனிநபர் பூசையும் கண்மூடித்தனமான பின்பற்றதலும் இஸ்லாத்தின் தௌஹீத் கொள்கைக்கே வேட்டுவைக்ககூடிய அம்சங்களாகும்.

இது குறித்து மௌலானா அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை நோக்குங்கள்.
'நமது வேலை தீனுடைய அடிப்படை வேலை நமது இயக்கம் உண்மையில் ஈமானுடைய இயக்கம் தற்சமயம் பொதுப்படையாக கூட்டு முயற்சியுடன் நடைபெறும் வேலைகளில் எல்லாம் அவைகளைச் செய்யக் கூடியவர்கள் ஈமானுடைய அஸ்த்திவாரம் உறுதியாக இருப்பதாகக் கட்டடம் கட்டுகின்றார்கள்.' மழ்பூஜாத் : 92

சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எல்லாவகை சுதந்திரங்களையும் மார்க்கம் அனுமதிக்கின்றது.

மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட எதுவும் விமர்சனத்துக்குட்பட்டவைதான்.

குதர்க்கவாதம் பேசமுற்படும் இயக்க உறுப்பினர்களை நோக்கி மௌலானா இவ்வாறு சொல்கின்றார்கள்.'

மார்க்க மேதைகள் ஏதேனும் உங்களிடம் கேட்டால் மட்டும் பதில் கூறுங்கள். நீங்களாகவே, அவர்களிடம் பேச்சை வளர்த்து தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்.
தப்லீக் தோன்றிய வரலாறு பக்கம் : 76

உண்மையில் தப்லீக்கின் உன்னதம் குறித்து மௌலானா அவர்களினதும் அவர்களைப் பின் பற்றி இயக்கத்தை வழி நடத்திச் சென்ற மேதைகளினதும் இலட்சிய வேட்கையை முற்றாகப் புறக்கணித்து, ஒரு சடங்கு வாத தப்லீக் அமைப்பைத்தான் இன்று நாம் தரிசிக்க முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்களை மக்களிடத்தில் கூறுவதும் அதை எடுத்து நடப்பதும் தான் தப்லீக் ஜமாஅத்தின் வேலையின் நோக்கமென மௌலானா கூறுவதை தப்லீக் சிந்திக்க வேண்டும்.

இந்த உம்மத்தை எந்த நிலையில் நபிகளார் விட்டுப் போனார்களோ, அந்த நிலைக்கு இந்த உம்மத்தை உயர்த்துவதற்கு உழைப்பது தான் இப்பணியின் இலட்சியம் என்றார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இச்சித்தாந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஓர் இயக்கமாகவே தற்கால தப்லீக் மதிப்பிடப்படுகிறது.

தீன்பணி செய்யும் பிற இயக்க சகோதரகளை இழிவாக நோக்கல், காழ்ப்புணர்வு, இறுக்கமான கருத்துப் போக்கு அத்தஹிய்யாத்தில் விரலசைத்து, நெஞ்சின் மீது தக்பீர் கட்டுகின்ற சகோதரர்களை பள்ளயை விட்டே விரட்டல்,

அல்லது நோவினை செய்தல், தன் இயக்கத்திற்கு ஒவ்வாத நபர்களை 'வஹ்ஹாபி பூச்சாண்டி காட்டி மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் இருந்து தப்லீக் ஜமாஅத் விடுபடுவதென்பது கடின முயற்சியுமல்ல.

மௌலானா கூறுவதைப் போல 'தப்லீக் வேலையின் நோக்கம் வக்து கொடுப்பது அல்ல' (மல்பூஜாத்: 49) என்பதிலிருந்து இதன் நோக்கம் மனிதனை ஒழுக்க மாண்பு, தூய சிந்தனை, தாராள வாதம், இங்கிதம், அடக்கம், தயாள குணம் போன்ற உயர்நெறயாளனாக பயிற்றுவிப்பதே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, 'வக்து' செல்வதால் ஒருவன் பண்பாளனாக மாறிவிடுகின்றான் எனக் கருத முடியாது. அவன் புறச்சுழலில் ஏற்படுகின்ற தாக்கம் ஈமானியச் சுடர், அகச் சுழலை தூய்மைப்படுத்துகின்றதா என்பதே இங்கு முக்கியம். தப்லீக்கின் இலட்சியம் 'வக்தல்ல' மனிதனின் அகமிய எண்ணங்களில், தக்வா வடிவம் கொடுக்க வேண்டும். இதுவே, இந்த வேலையின் குறிக்கோள்.

இஸ்லாம் என்றால் தொழுகை, திக்ர் போன்ற அனுஷ்ட்டானங்களுடன் முற்றுப்பெறுகின்ற மார்க்கம் என்ற தவறான மனப்பிராந்தியை தப்லீக் ஜமாஅத் ஏற்படுத்த முனைகின்றது.

இது இல்யாஸ் (ரஹ்) அவர்களின் கொள்கைக்கே வேட்டு வைக்கும் முயற்சியாகும். இது இயக்க வழிபாட்டால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமாகும்.
பொதுவாக மனிதனுடைய பலஹீனம் இரண்டு வகைப்படும்.
1.அடிப்படை விபரங்களை அறியாதிருத்தல்
2. அறிந்திருந்தாலும் அதனைக் குறித்து அலட்சியமாக இருத்தல், அல்லது மறந்து விடுதல் சரியான அறிவு புகட்டாமலும், இயக்கத்தை சரிவர நடத்தாமலும், அழைப்பை சுலபமாக எடுத்துரைக்க முடியும் என்ற அபிப்பிராயத்தாலும் இத்தவறுகள் நடந்து விடுகின்றன.

அத்துடன், இலங்கை தப்லீக், ஜமாஅத், வளைகுடா போன்ற அரபு நாடுகளில், இருந்து வரும், ஜமாஅத்துக்குமிடையே, பாரிய கருத்து முரண்பாட்டை அவதானிக்க முடிகிறது. இந்தியா, பாகிஸ்த்தான், ஜமாஅத்துக்கள், இலங்கை தப்லீக் இயக்கத்தின் தீவிரத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்பட்ட அமைப்புக்களாக இயங்குகின்றன.

மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் ஜமாஅத்தினர், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதையும், நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவதையும் கூட்டுத்துஆ ஓதாமலிருப்பதையும் இங்குள்ள ஜமாஅத்தினர் அலட்டிக்கொள்வதில்லை.

அதே நேரம் இலங்கையர் ஒருவர் இதே கிரிகைகளை செய்யும் பட்சத்தில், அதைப் பிரச்சனைக்குரியதாக மாற்றி விடுகின்றனர். (அட்டுலுகம இஜ்திமாவின் போது ஹஜ்ரத்ஜீயின் மகன் ஜும்ஆ தொழுகை நடத்தி விட்டு, கூட்டுத்துஆ ஓதாமல் எழுந்து சுன்னத் தொழுதது ஈண்டு குறிப்பிடத்தக்கது)

இது குறித்து, தீர்க்கமான இணக்கப்பாடொன்றை தப்லீக் ஜமாஅத்தின் உலமாக்கள் கூட இதுவரை முன்வைக்கவும் இல்லை. இவ்வனுஷ்ட்டானங்கள் தொடர்பாக, போதிய சிந்தனைத் தெளிவை போதிக்க வேண்டிய சில அறிஞர்கள் எரியும் நெருப்பில் நெய்யூற்றும் கைங்கரியத்தைத்தான் கவனமாகச் செய்து வருகின்றனர்.

தமது உறுப்பினர்களை ஹதீதுடன் பரிச்சயப்படுத்தி இவ்வாறான, விடயங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் அவசியம் பற்றி வற்புறுத்த வேண்டும்.

நபியின் சுன்னத்தை உயிர்ப்பிக்கப்பாடுபடும் ஓர் இயக்கம் நபி வழிக்கெதிராக செயற்படுவதை அவ்வியக்கத்தின் அதி உத்தம உலமாக்கள் தடுக்காதிருப்பதும், விசனத்திற்குரியதாகும்.

இவ்வாறான பிணக்குகள் சமூகத்தில் ஏற்படும் போது, மௌலானா நடந்து கொண்ட இங்கிதமான பண்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மௌலானா கூறுகின்றார்கள்.

....'தனி நபர்களுக்கிடையிலும், கூட்டத்தார்க்கிடையிலும் ஏற்படுகின்ற பிணக்குகள் யாவும் அபிப்பிராய பேதங்களாலேயே ஏற்படுகின்றன. அபிவிருத்தியடைகின்றன. முஸ்லீம்களின் சகல கூட்டத்தார்களையும் தீனுடைய வேலையில் ஈடுபடுத்திவும், சன்மார்க்க சேவையே அவர்களின் மேலான நோக்கமாக ஆக்குவதற்கும், அவர்களின் உணர்ச்சிகளும், செயல் முறைகளும் ஒன்று படுமாறு முயற்சி செய்ய நாடுகின்றோம். இந்தக்காரியமே விரோதங்களை அன்பாக மாற்றிட இயலும் இருமனிதரிடையே நேஸபாவத்தை உண்டாக்கி வைப்பதில் எத்துணை பெரிய நற்பயனுண்டு என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.மல்பூஜாத் : 102

இலங்கை தப்லீக் ஜமாஅத் அவசரமாக புணர் நிர்மானம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி உள்ளது. அதன் எழுதப்படாத சித்தாந்தங்களை மீள்பார்வைக்குட்படுத்தி, சகோதர இயக்கங்களை அனுசரிக்கும் பண்பினை வளர்ப்பதற்கு உழைப்பதும், அதன் தஃவா வரலாற்றில், புறக்கணிக்க முடியாத அம்சங்களாகும்.

ஏனெனில் குர்ஆன் கூறுகின்றது. 'அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளைகளை கொடுக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.' (அல்குர்ஆன் 2:185)

உடம்பின் தேவைகளைப் பொருட்படுத்தாது அதனைத் துயருறுத்தி ஆன்மாவை தூய்மைப்படுத்தும் முனைவுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் விரும்புவதில்லை. ஆனால் ஏனைய தர்மங்கள், இவற்றைப்போதித்து வருகின்றன.

தப்லீக், இஸ்லாம் போதிக்காத இத்தகைய வெற்றுக் கோசங்களையும், உளுத்துப்போன மரபுகளையும் பேணி வருவதுடன், பள்ளியே கதி, அல்லாஹ்வே விதியென ஒரு மந்த வாழ்வை பயிற்றுவிக்கிறது.

குடும்பத்தை ஒழுக்க நெறியில் இட்டுச்செல்ல உழைத்தல், சமூக்கடமை, தார்மீகப்பொறுப்பு, சமூக நலன்களில் பங்கெடுத்தல் போன்ற கடமைகளும் ஓர் 'இபாதத்' என்பதை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் எந்த ஓர் அமைப்பாயினும் தலைமைத்துவம் என்பது ஒரே அமீரின் கீழ் இயங்கி வருவதுதான் சுன்னாவாகும். உயர்மட்ட ஆலோசனை குழுவுடன் அமீர் தன் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதுதான் மரபு. நபி அவர்கள் காலத்திலும் சரி, பிற்கால கலீபாக்களின் காலமாயினும் சரி இந்த மரபு தான் பேணப்பட்டது. பேணப்பட்டு வருகிறது.

தப்லீக்கின் ஒழுங்கமைப்பில் தற்போது ஐந்துபேர் அமீர்களாக செயற்பட்டு வருகின்றனர். ஏன் விட்டுக்கொடுத்து ஒருவரை தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யக்கூடாது.

அத்துடன் 'அமீர்பதவி' யில் இருப்பவர்களில் உலமாக்கள், புத்திஜீவிகள் எவரும் நியமனம் பெறவில்லை என்பதும் இங்கு நோக்கற்பாலது.

தகுதி வாய்ந்த உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சிலமோட்டுக்குடி, வியாபாரிகளே, அமீர்களாக நியமிக்கப்பட்டு, அம்மரபைத்தான் காலங்காலமாகப் பேணியும் வருகின்றனர்.

இஸ்லாமியப் பிரச்சார இயக்கமொன்றிற்கு தலைமை தாங்கும் ஒருவருக்கு ஷரிஆவின் நுனுக்கமான சட்டதிட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
குர்ஆனுடனும், நபிமொழியுடனும் ஆழமான பரிச்சயம் வேண்டும்.

கடந்த கால, நிகழ்கால பிக்ஹ் சட்டவாக்கம் வரலாற்று நிகழ்வுகள் தேசிய
சர்வதேச, நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் பேராற்றல் இவை எல்லாம் ஒருங்கே பெற்ற 'தக்வா' உள்ள ஒருவர் தான் தலைமைக்கு தகுதியானவர்
இவ்வனைத்து தகுதியினையும் இழந்த 'லேபல், அமீர்கள் தான் தப்லீக்கை தற்போது இழுத்துச் செல்கின்றனர்.

குறைந்த பட்சம் மஹல்லாக்களில் அமீராக இருப்பவர், நான்கு மாதம், அல்லது ஒரு 'சில்லா' (40 நாள்) முடித்தவராக இருக்க வேண்டுமென தப்லீக்கின் உயர்மட்டம் எதிர் பார்க்கின்றது. இதனால் அதிருப்தியுற்ற உலமாக்கள் தப்லீக்கை விட்டும் நழுவி, அதை விமர்சிக்கக்கூடியவர்களாக மனம் சோர்ந்துள்ளனர்.

அமீர் என்பவர் வெறுமனே இயக்கத்தை வழிநடத்தும் இழுவை மாடல்ல: அவரிடமிருந்து, சமூகத்திற்கு பல அரிய பணிகளை இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

'நவீன உலகுடன் ஒன்றி தஃவாவை செப்பனிடவியலா புராதன சிந்தனைப் போக்குடன் தான் தப்லீக்கின் அமீர் சாஹிப்புகள் இவ்வியக்கத்தை வழிநடத்திச் செல்கின்றனர்.

தஃலீத் தொகுப்புத் தவிர்ந்த பிற இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களைப் படிப்பதைக்கூட தடை விதிக்கும் சில பொறுப்பதிகாரிகள் இங்கு இல்லாமலில்லை.

எனினும் ஆரம்ப கால தப்லீக் ஜமாஅத்தினரிடம் தீனை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 1970 இல் இலங்கை வந்த பெங்களுர் இப்ராஹீம் மௌலானா அவர்கள் ஒரு ரமழானின் ஒவ்வொரு நாளும் சுபுஹுத் தொழுகையின் பின் வேகந்தபள்ளியில் குர்ஆன் விளக்கம் செய்தார்கள். 1962 இல் மக்h சென்ற ஸஈத்கான் மௌலானா மக்கா ஹரம் சரீபில் பிரதி அஸர் தொழுகையின் பின் குர்ஆன் வியாக்கினம் செய்துவந்தார்கள்.

ஆனால் இன்றைய தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கு குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் தெளிவுரை வகுப்புக்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கின்றது,

என்பதுடன் அவ்வாறு செய்பவர்களும் கடுமையாக தாக்கப்படுகின்ற அவலத்தையும் நாம் இலங்கையில் நிதர்சனமாகக் காண்கின்றோம் சகோதர இயக்கமொன்றின் எத்தகைய சொற்பொழிவுகளையும் செவிமடுக்கக் கூடாதென்ற இறுக்கமான விதிகளும் சில தாயிகளிடம் வேரூன்றியுள்ளது.

இவற்றின் மூலம் இஸ்லாத்தை சரிவரப்பின்பற்ற முனையும் ஒருவனிடம் ஆர்வத்தை முடக்குவதுடன், மீறிப்போவோர்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தப்லீக் தன்னிடமுள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள், ஆதரவாளர்களை நிரூபித்து தனது தவறான செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முனைவதானது, கண்டிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

குர்ஆன் கூட பெரும்பான்மையை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரை கண்டித்து எச்சரிக்கை விடுக்கின்றது. 2:243, 7:187, 11:17, 3:110, 5:103, 6:11 போன்ற இன்னும் அனேக வசனங்களிலும் இறை கோபம் தொனிப்பதை படித்துணரலாம்.

உண்மையில் இஸ்லாமிய பண்பாட்டினையும், அதன் கலாச்சார விழுமியங்களையும் ஆத்மீக லௌகீக வரையறைகளையும், இன்னும் தப்லீக் ஜமாஅத் உணராதிருப்பது வேதனைக்குரியது. இஸ்லாம் குறித்த மேலெழுந்த சிந்தனைப் போக்கே இந்நெறி பிறழ்வுக்கு காரணமெனலாம். எனவே தப்லீக் புணரமைக்கப்படுவதற்கு முன், அதன் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆரோக்கியமான தீர்மானத்திற்கு வரவேண்டும்.

தலை சிறந்த உலமாக்கள் இஸ்லாமிய தஃவாத்துறையில் அனுபவமும் பாண்டித்தியமும் பெற்ற புத்தி ஜீவிகள், மூலமாக இம்மாற்றம் நிகழவேண்டும்.
இன்னும் தெளிவாகக்கூறின், தூய்மையான தீன் செழிக்க தகுதி வாய்ந்த உலமாக்கள் கொண்ட 'மஸுராசபை'யே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். வழி தவறிச் செல்லும் தப்லீக் ஜமாஅத்தை நெறிப்படுத்த இது ஒன்றுதான் உகந்த வழியெனப்படுகின்றது.

இலங்கை வரலாற்றில் 1952-53 காலப்பகுதியில் தப்லீக் அறிமுகமானதாக குறிப்புகள் உள்ளன. தாவூத் மௌலானா மேவாத்தி என்பவர் 1953இல் ஒருஜமாஅத்துடன் இலங்கைக்கு வந்தார். அதற்குமுன் 1952இன் இறுதிப்பகுதியில் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு அப்துல் மலிக் மவுலானாவும், குழுவினரும் கொம்பனித்தெரு வேகந்த பள்ளியில் தங்கியிருந்து தப்லீக்கை அறிமுகப்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது
.இலங்கை தப்லீக் அமைப்பு 169 பிரதேசங்களாகவும், 12 கொத்தணிகளாகவும் பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.

இவ்வளவு பழமையும், திட்டமிட்ட ஒழுங்கும் உள்ள ஓர் இயக்கம்,

தன் இயக்கத்தை நம்பி, அதனை எதிர்கேள்வியின்றி, கண்மூடித்தனமாய் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான பாமர அப்பாவிகளை, ஏமாற்றிவருவது

அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும். தப்லீக்கின் தலைமையும், அதன்தலையாட்டி உலமாக்களும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மக்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி சத்தியத்துடன் அசத்தியத்தைக் கலந்து விற்கும் மட்டரக சரக்காக தப்லீக்கை சில மேட்டுக்குடி உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த எதேச்சதிகாரப் போக்கையிட்டு மௌலானா அவர்கள் மனங்குமுறுவதை இவர்கள் கவனிக்க வேண்டும்.

ஆரம்ப விஷயங்களை இறுதியென்றும் வழிவகைகளை குறிக்கோள்கள் என்றும் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. ஆழ்ந்து நோக்குவார்களாயின் தீனுடைய சர்வகிளைகளிலும் இந்த தவறு நுழைந்து விட்டிருக்கிறது என்பதும் இதுவே ஆயிரக்கணக்கான தீமைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதும் விளங்கும். மல்பூஜாத்: 104

இதே தொடரில் மௌலானா கூறுவதைக் கவனிக்க வேண்டும். குர்ஆன், ஹதீதின் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைக்கேற்ப விளங்கிக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் இன்ஷா அல்லாஹ் ஒருபோதும் தவறான விளக்கம் ஏற்பட்டுவிடாது.பக்கம்: 105

இன்று தவறான விளக்கங்களாலேயே தப்லீக் பரிணாமம் பெற்று வளர்கிறது.
இல்யாஸ் ரஹ் அவர்கள் தோற்றுவித்த தூய்மையான தப்லீக்பணி சந்தர்ப்பவாதிகளின் கைபட்டு அதன் பெறுமானத்தை இழந்து நிற்கின்றது

. சுயநலமிகளும் வன்முறையாளர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுமாக அதன் சடங்கு ரீதியான வடிவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. இங்கு வலியுறுத்தவிரும்புவதெல்லாம் தப்லீக் பழமைக்குத்திரும்ப வேண்டும் என்பதே!

பழமை என்பது மௌலானாவின் காலத்தில் எந்த உயிர்ப்பு நிலையில் பிரகாசித்ததோ, அந்த இயல்பான நபிவழிக்குத்திரும்ப வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்க வேண்டும்.

தஃலீம் தொகுப்பை பரிசீலித்து தூய்மையான நபிமொழிகளும் உணர்வுட்டும் ஸஹாபாக்களின் கலப்பற்ற வரலாறும் இணைக்கப்பட வேண்டும்.

பிற அறிஞர்களின் நூற்களை படிப்பதுடன் அது பற்றிய விவாதம் கருத்துப் பரிமாற்றம் என்பனவும் நிகழவேண்டும்.

தஃலீம் தொகுப்புக்கு குர்ஆனிய அந்தஸ்த்து வழங்கப்படுவதை விடுத்து, அதன் தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

அதில் தவறுகள் உள்ளதாக தப்லீக்கின் முக்கிய உலமாவான ரிஸ்விமுப்தியே ஏற்றுக் கொண்டுள்ளதை, ஜமாஅத்தினர் கவனிக்க வேண்டும்.வான்சுடர் ஆகஸ்ட்-செப்டம்பர் 97 பக்கம் 21

சிலசந்தர்ப்பங்களில் தன் தவறினை நியாயப்படுத்த இதே ரிஸ்விமுப்தி போன்ற உலமாக்கள் தஃலீம் தொகுப்பை ஆறு ஹதீஸ் கிரந்தங்களுக்குச் சமனாகத் தூக்கிப்பிடித்து வாதாட முற்படுவதையும் பார்க்கிறோம்.

தீனின் பாதுகாப்பை விட தனது சுயநலத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்க, எத்தகைய இழிசெயலையும் அவர்கள் செய்யப் பின் நிற்பதில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது.

1960 இல் இலங்கை வந்த அல்லாமா அபுல்ஹஸன் அலிநத்வி அவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலில் (அதுதான் அன்றைய மர்கஸ்) ஜுமைராத்தில் பேசும் போது'ஏ தப்லீக்காரரே! ஆறு நம்பருக்கு அப்பால் உள்ள விசயங்களையும் படியுங்கள்' என்றார்கள்.

இந்த அறிவுரையை அமுல் படுத்த தப்லீக்கின் உறுப்பினர்கள் தயாரில்லை

என்பதுடன் ஆறு நம்பர் என்ற பங்கருக்குள் விழுந்து, மூர்ச்சையுறும் 'லேபல் தீன் தவளைகளாகவே இறுதிவரை இருப்போம் என பிடிவாதமாகவும் இருக்கின்றனர்.

அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை இரவு தோறும் பிரதேச ரீதியான 'ஜுமேராத்' இரவுகளில் அங்கு குழுமியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எத்தகைய செய்தி சொல்லப்படுகின்றது என்பதையும் நோக்குவது சிறந்தது.

உண்மையில் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கப்சாக்களும் கீறல் விழுந்த

ஒலிப்பேழையாய் தூசிதட்டிய ஆதிகாலப் புராணங்களுமே,

அங்குமீட்டப்படுகின்றது. (சில உலமாக்களின் சொற்பொழிவு தவிர) அந்த

இரவுகளில் வந்து கூடும் சமூகத்திற்கு தப்லீக் புதிதாக எத்தகைய அறிவையும் தேடலையும் கொடுப்பதில்லை

என்பதுடன் அத்தகைய ஒன்று கூடலில் தான் சகோதர இயக்கங்களுக்கெதிராக சதியாலோசனைகளும் சிலரால் தீட்டப்படுகின்றது.

சுன்னத் என்றவுடன் குறிப்பிட்ட நடை, உடை, பழக்கவழக்கங்கள்தான் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

முக்கியமாக இலங்கையில் செயற்படும் பிற தஃவா இயக்கங்களுடன் இறுக்கமான உறவினையும் தொடர்பினையும் வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். தப்லீக்கை சர்வதேச பயங்கரவாதிகள் என 'ஜனஉய' சிங்களப்பத்திரிகை தாக்குதல் நடத்திய போது அவற்றுக்கெதிராக போர்க்குரல் எழுப்பியது சகோதர இயக்கங்கள்தான் என்பதை தப்லீக் மறந்திருக்காது.

அடிக்கடி சகல உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து சகோதர இஸ்லாமிய தஃவா இயக்கங்களின் நிகழ்வுகளில் பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் மௌலானாவின் வேணவாபோல் அன்பையும் ஆதரவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தப்லீக் இயக்கத்தின் சமூகமயப்படுத்தலையும், பாமர அங்கீகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து அதற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் தப்லீக் வேடதாரிகளை அதன் இயக்க நடவடிக்கையிலிருந்து முற்றாக இடைநிறுத்துவதன் மூலம் தப்லீக் அதன் பெயரை தக்க வைத்துக் கொள்ள முனைய வேண்டும்.

சமூகப்பணிகள் கல்வி நடவடிக்கைகள் போன்ற பொதுப்பணிகளில் ஈடுபடுவதுடன் கலாச்சார விழுமியங்களை பேணும் கலை நிகழ்வுகளிலும் தப்லீக் தன்பங்களிப்பை செலுத்த முன்வர வேண்டும். தப்லீக் தான் இட்டுக் கொண்ட விலங்கினை உடைத்து புதிய உலகுடன் ஐக்கியமாகி மறுமலர்ச்சிகொண்ட முற்போக்கு இயக்கமாக மாற்றிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

ஷிர்க்கும் பித்அத்தும் மலிந்திருக்கும் மௌட்டீக சமுகத்தை தூய்மையான இஸ்லாமியப் பிரசாரத்தின் மூலம் ஆற்றுப்படுத்த வேண்டிய கடப்பாடும் அதற்குண்டு. அதன் தலைமைத்துவம் சுயநலன் கருதியும் இயக்கவாதம் பேசியும் இத்தகைய மறுமலர்ச்சிக்கு தடையாக உள்ளது குறைந்தபட்சம் சமூகப்புனரமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர இயக்கங்களை எதிர்காமல் இருக்க முடியாதா?

நடமாடும் பல்கலைக்கழகங்கள் என மார்தட்டிக் கொள்ளும் தப்லீக் ஒருநாற்பது நாளில் பயிற்றுவித்த ஆன்மீகப் பயிற்சியினை ஆராயும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெறும் திக்ர், தொழுகை, தியானம் மட்டுமா இபாதத்?

இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காதியாணி, ஷீயா, வஹ்ஜதுல்வுஜுத், கபுறு வணக்கம் முஸ்லிம்களின் கல்விப் பாரம்பரிய வளர்ச்சி, அரசியல் சுரண்டல்கள், சமூக நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய எத்துறையாயினும் அவற்றை தப்லீக் அலட்சியப்படுத்தியே வருகின்றது.

தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் கலைபற்றிய கருத்தரங்குகள், பயிற்சிகள் சமூகத்தொண்டு எதிலும் பட்டுக்கொள்ளாமல் இதுவெல்லாம் இஸ்லாத்தின் கொள்கைக்கு அப்பாற்பட்ட அனுஷ்டானங்கள் என்ற தவறான கணிப்பீடு அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும்.

இன்னும் சில சிந்தனைகளை முன்வைத்து இச்சிறுநூலை முடிக்கலாம் எனக் கருதுகின்றேன். நமது தவறு யாதெனில் மார்க்கத்தை இயக்க ரீதியாக கூறுபோட்டுக் கொண்டதாகும்.

குறிப்பிட்ட இயக்கம் ஒரு குறிப்பிட்ட துறையில்தான் தஃவாச் செய்ய வேண்டுமென்ற விதியினை மீறி முழுமையாக இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திடசங்கற்பம் நமக்கேற்பட வேண்டும்
.
சன்மார்க்கம் என்பது தனிமனிதனினதும் அவன் சார்ந்த சமூகத்தினதும் தியாக சிந்தனையிலிருந்து தான் விரிவடைகிறது. வலியுறுத்த விரும்புவது, தப்லீக்கின் தியாகம் அர்ப்பணிப்பு போன்றவற்றுடன் ஒன்றுபட்டு, பிற இயக்கங்களும் சாதாரண மக்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.

பள்ளியைத் தளமாக கொண்டியங்க தப்லீக் அவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். எனவே தப்லீக் பிற சகோதர இயக்கத்தை அகீதாவில் ஒருங்கிணைந்த ஒரே 'தஃவா வர்க்கம்' என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

சிற்றில் சிந்தனை மாற்றங்கள் கருத்து வேறுபாடுகள் ஒரு சக முஸ்லிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குரிய நியாயமான காரணங்களாகா.

கலிமாவின் கொடியின் கீழ் திரண்டிருக்கும் இம்மாபெரும் உம்மத்தை நமது குறைமதியின் தவறன கணிப்பீட்டினால் தள்ளிவைத்தல் மிகப்பெரிய பாவமாகும்.

கொள்கையினாலும் இலட்சியத்தினாலும் ஒன்றுபட்ட சகோதர இயக்கமொன்றின் உள்ளார்ந்த செயற்பாடுகளை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியமெனக் கருதுகின்றேன்.

மறுமைக்கான நீண்ட பயணத்தில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றைக் குறிக்கோளாக கொண்ட தஃவா இயக்கங்களின் அகவய செயற்பாடுகளை தப்லீக் நிராகரிக்கவோ வன்முறையின் மூலம் அவற்றின் பணிகளை அடக்கி ஒடுக்கவோ அதற்கு எத்தகைய தார்மீகக் கடமையும் கிடையாது.

தீமையாயினும் அதைத்தடுக்கும் அணுகுமுறைகள் குறித்து நபியவர்கள் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்.

பிற இயக்கத்தினரைவிட தன்னை சகல முனைவுகளிலும் மிகப் பெரிய மகானாக ஒருவன் கற்பணித்துக் கொள்வதன் வெளிப்பாடுதான் இயக்க அராஜரகமாகும்.

எனவே, தப்லீக்கின் புத்தி ஜீவிகள், அறிஞர்கள், உலமாக்கள் சகல தரப்பினரையும் தாழ்மையுடன் வேண்டுவது என்னவெனில் "நடுநிலையாக சிந்தியுங்கள்". விமர்சனங்கள் ஆலோசனைகளை அங்கீகரித்து இயக்கத்தை நெறிப்படுத்துங்கள்.

அது ஒன்றுதான் தப்லீக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும். குறுகியவாத சிந்தனைப் போக்கிலிருந்து நெகிழ்ந்து தஃவாப் பணியை பன்முக சிந்தனைத் தெளிவுடன் முன்னெடுத்துச் செல்ல தப்லீக் நீண்ட காலம் உழைக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் வெள்ளிடை மலை.

முஸ்லிம்கள் யாவரும் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத் சமூகமாக வாழவேண்டும என்பதே அல்லாஹ் மற்றும் அவனது தூதர் அவர்களின் கட்டளையாகும். முஸ்லிம்கள் பிளவுபட்டு வேற்றுமையைக் கற்பித்துக் கொள்வதை அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

நல்ல விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடப்பதிலும் நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துழையுங்கள். பாவமான காரியங்களிலும், சண்டை சச்சகரவுகளிலும் நீங்கள் ஒருவர் மற்றவருடன் ஒத்துழைக்க வேண்டாம் (அல்குர்ஆன் 5:2)

அன்பு, பற்று, பாசம் என்பதில்தான் முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். உடலின் ஏதாவது ஓர் உறுப்புக்கு நோய் ஏற்பட்டால் அதன் எல்லா உறுப்புக்களுமே உறக்கமின்றியும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டும் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கின்றன. (அல் ஹதீஸ்)

ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி அதன் மற்றப் பகுதிகளை தாங்கிக் கொள்வதுபோல் ஒரு மூஃமின் மற்ற முஸ்லிமுக்கு பக்கபலமாக இருப்பான் என்று கூறிய நபி ஸல் அவர்கள் தங்கள் விரல்களை இறுக்கமாக கோர்த்துக் காட்டினார்கள்.

மேலே கண்ட நபிமொழிகள் உணர்த்துவது போல புரிந்துணர்வு சகோதரத்துவம், கட்டுப்பாடான அமைப்பு என்பன முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவது அவசியமாகும். இவ்விதமான சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதே இஸ்லாமிய இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றின் தலையாய கடமையாகும்.

ஏனெனில் முஸ்லிம் சமூக அமைப்பும் அதுநிலைப்பதற்கு துணைபுரியும் சூழலும் இல்லாதவிடத்து இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களை பின்பற்றி முழு அளவில் வாழ்வது சாத்தியமற்றது.

நீங்கள் தீனை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பூரணமாக நிலை நாட்டுங்கள் அதில் (பல பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள் என்று இஸ்லாமிய சகோதரத்துவம் ஐக்கியம் என்பன பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் "இவையன்றி இஸ்லாத்தை பூரணமாக பின்பற்ற முடியாது" என்பதை உணர்த்துவதாகும்.

எனவே, சமூக ஒருமைப்பாடு ஐக்கியம் என்பவற்றில் தப்லீக் கரிசனை கொள்ள வேண்டும். மிகப் பயங்கர வீழ்ச்சியையும், தோல்வியையும் எதிர்கொண்டு நீச்சலடிக்கும் தப்லீக் ஜமாஅத் திறந்த மனதுடன், சமூக ஒற்றுமையை பேணிக் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலைப்பாட்டிலிருந்து தப்லீக் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் இதே பிற்போக்குத்தனத்தில் செல்லுமாயின் தப்லீக் என்ற பெயரைத் தவிர வேறொன்றும் வரலாற்றில் எஞ்சி நிற்காது என்ற எச்சரிக்கையை அது கவனத்திற் கொள்ளட்டும்.

பல நூற்றுக்கணக்கான மக்களின் ஆன்மீக வறுமைக்கு தப்லீக்கின் உலமாக்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

ஆதலால் நீங்கள் உங்களுக்கு இட்டுக் கொண்ட விலங்குகளை உடைத்தெறியுங்கள். இயக்கத்திலிருந்து சன்மார்க்கத்தை எடைபோடுவது இருக்கட்டும். தப்லீக்கின் கட்டுப்பாடுகளை தகர்த்தி சற்று உலகை விழித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களால் பரந்த இஸ்லாமிய ஞானத்தை பருக முடியும். இது ஒன்றுதான் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களுக்கு தப்லீக் செலுத்தும் மகத்தான நன்றிக் கடனாகவும் இருக்கும். இறுதியாக ஒரு சிந்தனையுடன் இந்நூல் முற்றுப் பெறுகிறது.

உம்மத்தவரிடையே நியாயமான காரணங்களுக்காகவேனும் எழும் கருத்து வேறுபாடுகளை விசாலமாக்க ஒருபோதும் ஒருவரும் முயற்சிக்கக்கூடாது. ஏனெனில் இவ்வாறு ஏற்படும் ஒரே குடும்ப உறுப்பினர்களிடையே சிற்சில காரணங்களுக்காக அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாட்டைப் போன்றதாகும்.

எனவே ஊர்மட்டத்திலும், மஸ்ஜிதுகளிலும், ஏனைய இடங்களிலும் ஏன் வெளிநாடுகளிலும் கூட இவ்வித பிளவுகளை வளர்க்க முயற்சிப்பது மிகவும் பெரிய கொடுமையாகும்.

முஸ்லிம்களாகிய எங்களுக்கிடையில் இவ்வாறு நிகழ்வது இஸ்லாத்தின் போதனைகளை விளங்கி அது தரும் பயிற்சிகளால் பயனடையாதவர்களும் எம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.

இஸ்லாமாகிய சகோதரத்துவத்தின் இயல்புகள் ஒருவர் தனது சகோதரரான அடுத்த முஸ்லிமைப் பற்றி நல்லெண்ணம் உடையவராய் இருப்பது. இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஆகக்குறைந்த தரமாகும். முஸ்லிம்கள் அனைவருமே ஒரே உடலைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் நலன் காக்கப் பாடுபடவேண்டும்.

இஸ்லாத்தின் எதிரிகளை இனங்கண்டு அவர்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என்பன போன்ற இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே இப்பிரிவுகள் உணர்த்துகின்றன.- ஷெய்க். நாதிர் அந்நூரி . satyamargam.com.
--------------------------------------------------------------------------
தப்லீக் பற்றி உங்கள் கருத்து என்ன? குல்ஜார் அஹ்மத் - ஹாட் அஞ்சலில்

தப்லீக்செய்வதற்காகவே ஒவ்வொரு நபியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்

( وما علينا الأالبللآغ المبين ( 36:17

தெளிவாக தப்லீக் செய்வதை தவிர வேறொன்றும் இல்லை - என்று இறைவன் நபிமார்களை கூற சொல்லி விட்டான். அந்த அடிப்படையில் அது ஒரு தூதுத்துவப் பணி. நபிமார்களுக்குப் பிறகு அந்த பெரும் பணி முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் எந்த அடிப்படையில் இதை செய்ய வேண்டும் என்ற அளவுக் கோலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

(நம்பிக்கையாளர்களே..) உங்களில் ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின் பக்கம் அழைத்து, நல்லதைக் கொண்டு ஏவி தீமையிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டு இருக்கட்டும். இப்படி செய்வோர்தாம் வெற்றிப் பெற்றோராவார்கள். (அல் குர்ஆன் - 3:104) இதே கருத்து குர்ஆனில் 3:110 7:157 9:71 வசனங்களிலும் வந்துள்ளது.

நன்மையின் பக்கம் அழைத்தல் நல்லதை ஏவுதல் தீமையை தடுத்தல் என்று மூன்று விதிகள் அழைப்புப் பணியின் முக்கியக் குறிக் கோள்களாகும். இந்த அடிப்படையில்தான் எல்லா இறைத்தூதர்களும் தங்கள் பணியை செய்தார்கள்.

இதில் எந்த ஒரு விதியையும் விட்டு விட்டு அழைப்புப் பணி செய்ய முடியாது - செய்யக் கூடாது - அப்படி செய்தால் அது இறைவன் விரும்பும் அழைப்புப் பணியாக இருக்காது

நம்மில் பலர் நன்மையை மட்டும் ஏவினால் தப்லீக் நிறைவேறிவிடும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களிடம் மண்டிகிடக்கும் ஏராளமான விஷயங்கள் தீமையானவை என்ற உண்மை இவர்களுக்குத் தெரியும்

தெரிந்தும் அது பற்றி வாய் திறக்காமல் மறைத்து விடுவார்கள். இதையும் இறைவன் கண்டிக்கிறான்.

நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள் நன்கு அறிந்துக் கொண்டே உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல் குர்ஆன் 2:42)

நன்மையை ஏவுவது எவ்வளவு அவசியமோ அதே அளவு முக்கியத்துவம் பெறுகிறது தீமையை தடுக்கும் காரியமுமாகும்.

எவ்வித சமாதானமும் கூறாமல் இந்த அடிப்படையில் செய்யப்படும் தப்லீக் மட்டுமே முழுமையான தப்லீக்காக அமையும்.Idhuthanislam.com
-------------------------------------
தப்லீக் ஜமாஅத்

தப்லீக் தொடர்பாக ஒரு வாசகரால் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுதப்பட்ட பதிலை வாசித்தேன் என் அறிவுக்கு எட்டிய வகையில் அந்தப்பதிலில் எந்த தவைறையும் என்னால் காண முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் தாம் சரியானதையே செய்கின்றோம் என்று வாதிடுவதால் அவர்கள் ஒருபோதும் தம்மை மாற்றிக்கொள்ளவதாகவோ அல்லது மாற்றிக்கொள்ளும் நோக்கம் இருப்பதாகவோ தெரியவில்லை.

எனவே அவர்களை போகிற போக்கில் விட்டு விட்டு அதில் உள்ளவர்களை சிந்தனை ரீதியாகவும் தந்திரமான முறையிலும் பரந்த இஸ்லாம் தொடர்பான விரிவுரைகளையும் ஒலி நாடாக்களையும் பார்க்கத்தூண்டும் நடவடிக்கைகளை எடுப்பது சிறந்த முயற்சி என்று கருதுகின்றேன்

என்னுடன் வேலை செய்யும் ஒரு சகோதரன் தப்லீக் ஜமாத்தில் தன்னை முழுமையாக அஹ்மத் தீதாத், டொக்டர் ஜாகிர் நாயக், யூசுப் இஸ்லாம் போன்றவர்களைப்பற்றி எனக்கு தெரிந்தளவில் விளக்கினேன். பின்னர் அவர் பீ. ஜே அவர்களின் ஒலி நாடாக்களை தேடிஎடுத்து எனக்குத்தராமல் பார்த்தார். எப்படியோ இஸ்லாத்தை உள்ளபடி விளங்க அல்லாஹ் ஒவn;வாருவருக்கும் அருள்புரிய வேண்டும்

சிந்தனைத் தெளிவு மிக்க - இஸ்லாத்திற்காக உழைக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ள சகோதரர்கள் தப்லீக்கில் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தூய இஸ்லாத்தை சுமந்து சென்றால் ஒரு பெரும் மாற்றம் ஏற்படத்தான் செய்யும்.

ஆனால் தப்லீக்கின் மேலிடம் - தலைமைபீடம் குர்ஆன் சுன்னாவோடு இவர்களை நெருங்க விடாமல் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்கின்றன. இந் நிலை மாற்றப்பட வேண்டும்

அதற்கு உங்களைப் போன்றவர்களின் (இவருக்கு விளக்கியது போன்ற) உழைப்பு மிக அவசியமாகும் Idhuthanislam.com
-----------------------------------
விமர்சனம் : சில நாட்களுக்கு முன் தங்கள் வெப் தளத்தில் தப்லீக் பற்றிய கேள்வி பதிலைப் படித்தேன். அது உண்மையான அழைப்பு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது அண்டை வீட்டார் ஒருவர் பெயர் தாங்கி முஸ்லிமாக - இஸ்லாம் அறவே இல்லாதவராக - குடிப்பவராக இருந்தார். 40 நாட்கள் தப்லீக்கில் சென்று திரும்பியவுடன் அவர் வாழ்வே மாறிவிட்டது. இது போல் எவ்வளவோ உள்ளன. நீங்கள் மறைமுகமாக தப்லீக்கை விமர்சிக்கிறீர்கள். தப்லீக் காரர்கள் தவறு செயடபவர்களல்லர். அவர்கள் முதலில் தவ்ஹீதை அறிமுகப்படுத்தியே ஷிர்க்கை களைகிறார்கள். எம்.ஐ.காதர் - ஹாட் மெயிலில்

தப்லீக் ஜமாஅத்தினரின் அயராத உழைப்பின் பலனாக முஸ்லிமகளுக்கு மத்தியில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது உண்மைதான். அதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. தங்களின் சொந்த பணத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து பல ஊர்களுக்கு சென்று தொழவராத, தொழ தெரியாத, பள்ளிவாசல் பக்கம் திரும்பாத மக்களை அழைத்து தொழுகையாளிகளாக ஆக்கி பள்ளிகளை நிறைய செய்த அரும்பணி அவர்களுடையதே!

இப்படி பல நல்லக் காரியங்களில் அவர்கள் ஈடு படுவதால் அவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டவேக் கூடாது என்பது சரியான வாதமல்ல.

மனித சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வட்டி, வரதட்சனை, லாட்டரி, போதைப் பொருட்கள் போன்ற எந்த தீமைகளையும் களைவதற்கு அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. அவை தீமைகள்தான் என்ற சிந்தனைக்கூட இருப்பதாக தெரியவில்லை.

நபிமார்கள் பகிரங்கமாக ஷிர்க் என்ற கொடும் நோயை எதிர்த்தார்கள். நபிமார்களின் பணியை செய்கிறோம் என்று சொல்லக் கூடிய இவர்களில் எத்துனைப்பேர் ஷிர்க்கை - குறைந்த பட்சம் தர்காக்களை - எதிர்க்கிறார்கள்?

தர்காவை ஆதரிக்கக் கூடிய, மௌலீது கத்தம் கந்தூரிகளை ஆதரிக்கக் கூடிய அதில் பக்தி பரவசத்துடன் பங்கெடுக்கக்கூடிய நூற்றுக்கணக்கான தப்லீக் காரர்களை நமக்கு தெரியும்

பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பின் மத வேறுபாடு இன்றி ஏராளமானோர் அதைக் கடுமையாக கண்டித்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் எத்துனை இடங்களில் கூட்டம் போட்டு அதைக் கண்டித்தார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா..? குறைந்த பட்சம் பள்ளிவாசல்களில் நடக்கும் கூட்டங்களிலாவது இது பற்றி பேசியதற்கு அதாரம் உண்டா..?

எது இஸ்லாமிய பணி என்று தீர்மானிப்பதில் அவர்களிடம் மிகப் பெறிய வேறுபாடு தெரிகிறது.

பள்ளிவாசல்கள் தோரும் நடக்கும் தீனியாத் கூட்டங்களில் தஃலீம் தொகுப்பு என்ற புத்தகத்தைத்தவிர குர்ஆனையோ, புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களையோ படிப்பதை பார்த்துள்ளீர்களா..?

அமல்களின் சிறப்புகள் என்று அவர்கள் போதிக்கும் - படித்துக்காட்டும் - சம்பவங்களாவது இஸ்லாத்திற்கு உட்பட்டவைகளாக இருக்கிறதா..?

அமல்களின் சிறப்பு என்ற அந்த தொகுப்பில் குர்அன் நபிவழிக்கு மாற்றமான ஏராளமான கதைகள் மலிந்து கிடக்கின்றன. அதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் எழுதுங்கள் பட்டியலிடுகிறோம்

தொழுகை என்ற ஒரு அழைப்புதான் நபிமார்கள் செய்த தப்லீக்கா?
அதற்கு மட்டும்தான் இறைவன் இவ்வளவு நபிமார்களை அனுப்பினானா..

குர்ஆன் வசனங்கள் அனைத்தும் வெறும் தொழுகையை மட்டும்தான் போதிக்கிறதா..?

இறைவழிப் போராட்டமான ஜிஹாதை அறிந்து வைத்திருக்கக் கூடிய தப்லீக் சகோதரர்கள் எத்துனைப் பேர்..?

நம் சமூகத்திற்கெதிராக நடக்கும் அநீதிகளை தடுத்து நிறுத்த எண்ணமுள்ள சகோதரர்கள் எத்துனைப் பேர்..?

இறைவன் வகுத்துள்ள சட்டங்களுக்கு எதிராக உலகலாவிய மீடியாக்கள் வரித்துக் கட்டிக் கொண்டு இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும் இழிச் சொல்களையும் தொடர்ந்து பரப்பி வந்துக் கொண்டிருக்கும் வேளையில் இறைவனின் சட்டங்கள் நிலையானவை - நிரந்தரமானவை - அறிவுப்பூர்வமானவை என்று விளக்கம் கொடுக்கக் கூடிய துணிவு பெற்றுள்ளவர்கள் எத்துனைப் பேர்..?

பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகிறது என்று நம் நாட்டில் பகிரங்க பிரச்சாரம் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்லாத்தில் உள்ள பெண் உரிமைகளை ஆணித்தரமாக விளக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்கள் எத்துனைப் பேர்..?

இதுவெல்லாம் தப்லீக்கில் அடங்காது என்கிறீர்களா.. அல்லது பிரயோஜனமற்ற வேலை என்கிறீர்களா..?

இப்படி நிறைய நிறைய சொல்லிக் கொண்N;ட செல்லலாம். எந்த ஒரு இயக்கத்தின் மீதும் விழும் விமர்சனங்களை அந்த இயக்கம் பரிசீலித்து தம் தவறை திருத்திக் கொள்வதுதான் அறிவுடமை

அதை விடுத்து இந்த இயக்கத்தில் தவறே கிடையாது என்று கூறுவது தவறு செய்பவர்களை அதிலேயே நிலைப் பெற செய்யும் வாதமாகும்.

நபிமார்கள் செய்துவிட்டு சென்ற தப்லீக்கின் ஒரு சின்னஞ்சிறு பகுதியைதான் இன்றைய தப்லீக் ஜமாஅத்தினர் செய்கின்றனர். இதை கவனித்துதான் இது முழுமையான தப்லீக் அல்ல என்று நாம் எழுதினோம். Idhuthanislam.com
------------------------------------------
அன்றைய ஸூபித்துவமும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தும்

சூபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் –

லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்து விட முடியும்..

இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே அவர்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என அறிந்தோம். அதே சூபித்துவத்திலே வாழையடி வாழையாக வந்துதித்தவர்களே தப்லீக் ஜமாஅத்தின் பூர்வீக காலம் தொட்டு இன்று வரை பொறுப்பு வகிக்கும் தப்லீக்கின் முக்கியஸ்தர்கள் என்பதுதான் ஆச்சரியமிக்க உண்மை

இதனை ஜீரணிப்பது சற்று கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை,.

இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் தப்லீக்கின் உயர் பொறுப்பில் இருக்கும் மௌலானாக்கள், பெரியார்கள் அனைவரிடத்திலும் இதே சூபித்துவக் கொள்கை இருந்தது - இன்றும் இருக்கின்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதே இப்பகுதியின் முக்கிய நோக்கம்

ஆனால் மூன்று நாள் நாற்பது நாள் என்றெல்லாம் வக்துக் கொடுத்து வெளிக்கிளம்பிச் செல்லும் அப்பாவி மக்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரிவதில்லை. அது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதுமில்லை

சூபித்துவவாதிகள் எப்படி தம்மிடம் வரும் முரீதீன்களுக்கு பக்தர்களுக்கு தம்மீது முழு நம்பிக்கை வரும்வரை தமது விசக்கருத்துக்கள் எதையும் வெளியிடுவதில்லையோ அவ்வாறே இவர்களும் சாதாரண ஆரம்ப நிலையிலுள்ள தப்லீக் பக்தர்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

அவர்களுக்குத் தப்லீக்கின் அடிப்படை விதிகளான கலிமா, தொழுகை, இல்முதிக்ரு, இக்ராம் இக்லாஸ், தப்லீக் ஆகியவற்றைப் பற்றி மாத்திரமே பேசப்படும். போதிக்கப்படும்

தப்லீக் இயக்கத்தின் மீது மக்களுக்கு அபிமானம் ஏற்பட வேண்டுமென்பதற்காக செய்யப்பட்ட முயற்சியே இது. இந்த வழிதனிலே பல காலம் ஒருவர் பயிற்றுவிக்கப்பட்டதன் பின் ஒரு வருடம் இருவருடம் என்றெல்லாம் ஒருவர் டில்லி மர்க்கஸ், ட்ரை விந்மர்க்கஸூக்கெல்லாம் சென்றுவந்து

தப்லீக்கின் மௌலானாக்கள், பெரியார்கள் மீது நீக்கமுடியாத ஒரு பிடிப்பு பற்று, அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டதன் பின்பே சூபித்துவக் கருத்துக்களைப் படிப்படியாக அவருக்குக் கற்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்

இதையும் வெறும் கற்பனையாகவோ வாய்ப்பேச்சாகவோ நான் சொல்லவில்லை. ஆதாரப் பூர்வமாக – தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்துக் காட்டவுள்ளேன்.

குர் ஆன் ஹதீஸ் போதனைகள் எப்படியிருந்தாலும் தனக்கு தன் டில்லி பெரியார் - மௌலானா சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு அங்கு அவர்களுக்கு மூளைச் சலவை இடம் பெறும்

சூபித்துவப் போதனைகள் வெளிரங்கத்தில் ஆத்மீக சிந்தனையின் பக்கம் அழைப்பது போல் -- இவர்கள் தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கம் என்று பாமரர்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பம் வரும் போதே தம் சூபித்துவக் கருத்துக்களைப் புகுத்துகின்றனர்.

பொதுவாகக்கூறின் அதிகமான சகோதரர்கள் ஏன் தப்லீக்கை ஆதரிக்கின்றார்கள்?. அதில் வெளிக்கிளம்ப விரும்புகின்றார்கள் என்று ஆராயும்போது இன்றைய பஸாதுகளும் குழப்பங்களும் நிறைந்த இந்த பித்னாவுடைய ஜமானில் குழப்பங்கள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் வாழும் இச்சகோதரர்கள் இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள பற்றின் காரணமாகவும் நபிவழிப்படி நடக்க வேண்டுமென்ற ஆர்வ மேலீட்டாலும் தமக்கு இஸ்லாமிய வழிகாட்டலை வழங்கக் கூடிய ஒருவரைத் தேட இவர்களின் மனம் விரும்புகின்றது

மேலோட்டமாகத் தேடிப் பார்க்கின்றார்கள். தப்லீக் ஜமாஅத்துத்தான் 'தீன் என்பது அல்லாஹ் வின் கட்டளையும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழி முறையுமாகும் இதை பூரா மனித சமூதாயத்துக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியில் சொந்த பணத்தை, உடலுழைப்பை, காலத்தைத் தியாகம் செய்து உழைக்கும் ஒரு அமைப்புத்தான் தப்லீக் ஜமாஅத்' என்ற விளம்பரத்தைக் கேட்கின்றார்கள்

அதனையடுத்து கார்க்கூன்களின் விடாமுயற்சியாலும், தொடர்ச்சியான சந்திப்பாலும் 3 நாட்கள் வெளிக்கிளம்பிச் செல்லச் சம்மதிக்கின்றார்கள் அங்குள்ள சூழல் அவர்களின் மனதுக்கு இதமளிப்பதாக, மனதிலுல்ல கவலை கஷடங்களை மறக்க ஒரு நன்மருந்தாக, தொழில் மற்றும் குடும்பச் சுமைகளை விட்டுப் பிரிந்து சுதந்திரமாக நேரத்துக்குத் தொழுது கொண்டு வேளாவேளை சாப்பிட்டுக் கொண்டு பள்ளியுடைய சூழலில் இருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். எவருடைய தொந்தரவுமில்லை. செல்லும் இடமெல்லாம் வரவேற்பு அமோகமாயிருக்கின்றது

சண்டை சச்சரவு பிரச்சினைக்குரிய எந்த விடயங்களிலும் தலையிடுவதில்லை. இப்படியான ஒரு சூழல் தப்லீக்கில் கிடைப்பதால் இதையே எதிர்பார்த்திருந்த அதிக வேலைப்பளுமிக்க வாழ்க்கையால் விரக்தியுற்றிருந்த பாமர சகோதரர்கள் இதை நேசித்து இதன்பால் லயித்து விடுகின்றனர் இதனால் இந்த அமைப்பில் உள்ள மார்க்க முறண்பாடுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தவறி விடுகின்றனர்

இதில் அதிகம் பேர் மார்க்மென்றால் என்னவென்று பெரிதாக அறியாத நிலையிலேயே -- அறிந்து கொள்ளும் நோக்கிலேயே தப்லீக்கில் காலடியெடுத்து வைக்கின்றனர்.

எனவே இதிலுள்ள குறைகளை அறிவது ஒருபக்கமிருக்க அவைதான் இஸ்லாம் என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதால் அப்படியே அவற்றை ஏற்றுக் கொள்கின்றனர்

அதன் முக்கியஸ்தர்கள் கூட அடிக்கடி தமது பயான்களில் 'இந்த வேலையில் குறை பிடிக்க முற்படுபவர் வேலையை விட்டும் தூரமாக்கப்படுவார். பின்னர் தீனிலிருந்தே தூரமாக்கப்பட்டு விடுவார் என்று அடிக்கடி எச்சரிப்பதால் பயம் காட்டுவதால் அதிக அப்பாவிப் பாமர மக்கள் இதைப் பற்றி ஆராய்வதற்கே அச்சம் கொண்டு தானும் ஒரு வேளை அவர்கள் சொல்வது போல் தீனை விட்டும் தூரமாகி விடுவோமோ எனப் பயந்து 'தலைவன் எவ்வழியோ தானும் அவ் வழியே ' என்ற கோஷத்துடன் நடை பயில ஆரம்பித்து விடுகின்றனர்

அதனால் யாரேனும் இதைப்பற்றி இதன் குறைகளைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை

இதனாலேயே இன்று தப்லீக் அமைப்பு பாமர மக்களின் ஹீரோவாகச் செல்வாக்குப் பெற்று பல நாடுகளிலும் வியாபித்துக் காணப்படுகின்றது

அறபுக்கள் கூட இதற்கு ஆதரவளிப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அரபுக்கள் என்ன மலக்குகளா ? நபிமார்களா ?

அவர்களும் மனிதர்களே. . எம்மை விடவும் மார்க்க அறிவில் மட்டமான நிலையிலுள்ள – ஏன்..பாத்திஹா ஸூராவே ஒழுங்காக ஓதத் தெரியாத அறபுகளும் நிறையவே இருக்கின்றனர்..

அறபுக்களில் ஒரு சில சகோதரர்கள் இதில் மும்முரமாக ஈடுபடுவது உண்மை தான். அதனால் அது மார்க்க அங்கீகாரம் பெற்றுவிடுமா ? அப்படியானால் அறபிகளுக்கு எதற்காக அல்லாஹ் நபியை அனுப்ப வேண்டும். ??? அவர்கள்தான் மேதைகளாச்சே

ஆக தப்லீக் அமைப்பு இன்று அகலமாக வளர்ந்துள்ளது, ஆனால் ஆழமாக வளர வில்லையென்பதே உண்மை

இன்று தப்லீக்கில் ஈடுபாடு கொண்டுள்ள எம் சகோதரர்களுக்கு இக்கருத்துக்கள் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் தரலாம். இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால் உண்மையை அறிய விரும்புபவர் நடுநிலையாக இதில் கூறுப்படும் கருத்துக்களை தப்லீக் அமைப்புடன் ஒப்பீடு செய்து ஆராயும் போது இன்ஷா அல்லாஹ் உண்மை புலப்படும்

உண்மைக்கு உறக்கம் கிடையாது. ஆனால் அதை விரும்பாதவர்க்கு அது எளிதில் புலப்படாது.

அதற்காகத்தான் தப்லீக் ஜமாஅத்தின் வெளிப்படையான, ரகசியமான அனைத்து நடவடிக்கைகளையும் -- அவற்றில் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பாடு எந்த விதத்தில் உள்ளன என்பதையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டுகின்றேன்

இன்னும் ஒருசிலர் 'தப்லீக்கில் குறைபாடு இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். எதில்தான் குறைபாடு இல்லை. குறைகளை விட்டு விட்டு நிறைய நல்ல விடயங்கள் இருக்கின்றன அவற்றை எடுத்து நடப்போமே' என்று நடுநிலைவாதம் பேசுகின்றனர்

இவ்வாதமும் அர்த்தமற்ற வாதமே. உலகிலுள்ள எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலே அவற்றில் சமூகத்துக்கு நன்மை தீமை இரண்டுமே இருக்கத்தான் செய்கின்றன. மது பானத்தில் கூட நன்மையும் இருப்பதாகவே அல்குர்ஆன் சொல்கின்றது

'நபியே நீங்கள் சொல்லுங்கள் அதிலே (சாராயத்தில்) அதிகம் தீங்கிருக்கின்றது, அத்துடன் அதில் மக்களுக்கு நன்மையுமிருக்கின்றது. அதனால் ஏற்படும் தீமை அதன் நன்மையை விட மிக அதிகமாகும்' எனக் கூறுகின்றது. (ஸூரத்துல் பகரா 219).

எனவே நன்மை இருக்கின்றதென்பதால் ஒரு விடயத்தை நல்லதென நியாயப்படுத்த முடியாது

அதனால் ஏற்படும் விபரீதம் தீமை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும்.

அந்த வகையில் நான் சூபிகளிடம் இருப்பதாகக் கூறிய இஸ்லாத்தைத் தகர்த்தெறியும் ஷிர்க்கான- இஸ்லாமிய அகீதாவைக் குழிதோண்டிப் புதைக்கும் குப்ரான விடயங்கள் அனைத்துமே இதன் ஸ்தாபகர்களான ட்ரைவிந் மர்கஸ் மௌலானாக்களிடமும், டில்லிப் பெரியார்களிடமும் இருக்கின்றன. அதையும் ஆதாரப் பூர்வமாக நிரூபித்துக் காட்டவுள்ளேன்.

அதே போன்று ஆறு நம்பருடைய வாழ்க்கை பூரா மக்களிடமும் வரவேண்டுமென்பதில் ஒரே குறியாக இருக்கும் இப்பெரியார்கள் அந்த ஆறு நம்பர்களையும் மாத்திரம் எடுத்து ஏனைய இஸ்லாமிய விடயங்களை எவ்வளவு சாதூர்யமாகப் புறந்தள்ளுகின்றனர் என்பதையும் ஆறு நம்பரிலுள்ள விடயங்கள் வெளிப்படையில் நல்லவைகளாகத் தோன்றினாலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் எந்தளவு குறுகிய வட்டத்தில் உள்ளது என்பதையும் முடிந்தளவு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவுள்ளேன்.

அது மட்டுமின்றி சூபிகளின் கொள்கைகளை அப்படியே அச்சொட்டாகப் பின்பற்றும் இவர்களிடம் இபாதத்களாகக் கருதப்பட்டு வரும் ஏராளமான மார்க்க விரோத விடயங்களையும் முடிந்தளவு சுருக்கமாகத் தெளிவு படுத்த விரைகின்றேன்.

தப்லீக் சகோதரர்கள் அனைவரினதும் ஒருமித்த வாதம் என்னவென்றால் சில வழி கெட்ட கூட்டத்தினர் இந்த நபிமார்கள் செய்து வந்த மகத்தான வேலையைப் பற்றி இல்லாதது பொல்லாதததையெல்லாம் சொல்லுவார்கள். அவையெல்லாமே அவர்களின் பொறாமையின் வெளிப்பாடு

இந்த ஹக்கான வேலையின் பரக்கத்தால் எத்தனை லட்சம் பேர் நேர்வழி பெற்றிருக்கின்றார்கள். குடியும் போதையுமாக இருந்த எத்தனை பேர் நல்ல மனிதர்களாகியிருக்கின்றார்கள். ஒரு கையில் வெட்டரிவாளும் மறுகையில் சாராய போத்தலுமாக அலைந்த ஆயிரக் கணக்காணோர் இன்று ஒரு கையில் தஸ்பீஹ் மணியும் மறுகையில் மிஸ்வாக் குச்சியுடனும் காட்சி தருகின்றார்கள். எத்தனை ஆயிரம் பூட்டிக்கிடந்த பள்ளிகள் உயிர்ப்பிக்கப்பட்டு இன்று இபாதத்களால் ஜொலிக்கின்றன. முஸ்லிம் பெண்களிடத்தில் பர்தாவுடைய வாழ்வு வந்திருக்கின்றது

கலிமாச் சொல்வதற்கே தெரியாத எத்தனையோபேர் இன்று திருந்தி இஸ்லாமிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது அல் லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு இதன் தீவிர வளர்ச்சியே சான்றென்று அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

உண்மையில் இவையெல்லாம் நல்ல விடயங்கள் என்பதிலும் தப்லீக் இயக்கத்தின் முயற்சியே இதற்கு முக்கிய பங்கு என்பதிலும் சந்தேகமேயில்லை

ஆனால் இந்த நன்மைகளைக் கூட விஞ்சி விடக் கூடிய இஸ்லாமிய கோட்பாட்டுக்கு எதிரான நச்சுக் கருத்துள்ள கொள்கைகள் ஒரு பக்கமும்,

இஸ்லாத்தைக் குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி அது கூறிய பலவற்றைக் கத்தரித்து விட்டு

அது கூறாத நிறைய விடயங்களை இஸ்லாமியச் சாயம் பூசி விளம்பரப்படுத்தும் போக்கும் இவர்களிடம் காணப்படுவதனாலேயே இதனை விமர்ச்சிக்கும் நிலை ஏற்படுகின்றது

இது பற்றி பின்னர் விபரமாகச் கூறவுள்ளேன். அதே போன்று ஒரு இயக்கத்திற்குக் கிடைக்கும் தீவிர வளர்ச்சியும் பெரும்பான்மை மக்கள் ஆதரவும் சமூக வரவேற்பும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு ஒரு போன்றும் சான்றாக ஆகாது

பத்ர் யுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நபிகளாருடன் 313 பேர். காபிர்கள் 1000 பேர். மூஸா நபியுடன் ஒரு சிறு கூட்டம். பிர்அவ்னிடம் ஒரு பெரிய பட்டாளம். எண்ணிக்கையை வைத்துச் சொல்வதென்றால் குரைஷிகளும் பிர்அவ்னும் சத்தியத்தில் இருந்ததாகவே சொல்ல வேண்டும்.

இன்றும் கூட உலக மக்கள் தொகையில் முஸ்லிம் களின் எண்ணிக்கையை விட கிருஷதவர்களின் எண்ணிக்கையே அதிகம். உலகச் செல்வத்தின்; பெரும்பகுதி அவர்களிடம் இருக்க அனேக நாடுகள் அவர்களை ஆதரித்து அவர்களின் உதவிக்காகக் கையேந்திக் காத்திருக்கின்றன.

எனவே எண்ணிக்கையை வைத்தே சத்தியமா அசத்தியமா? என்று தீர்மானிப்பதாயின் இஸ்லாத்தை விடக் கிருஸ்தவ மதமே மிக உண்மையானது. அல்லாஹ்வின் அருளைப் பெற்றது என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்ல முடியுமா? என்று தப்லீக் சகோதரர்கள் சிந்திப்பார்களாக

எனக்கும் தப்லீக் ஜமாஅத்துக்கும் கூட ஒரு காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அப்போது தப்லீக்கின் பெரியார்கள் மார்க்க விரோதக் கருத்துக்கள் சிலவற்றைக் கூறும் வேளை அதனை நானும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருந்தேன்

தப்லீக் மீதிருந்த அபார பக்தியும் அபிமானமும் அதிலுள்ள குறைகளைக் கண்டுகொள்ளக் கூடிய மனோநிலையை என்னில் இல்லாமலாக்கி விட்டன என்றே கூற வேண்டும்

இதே போன்று இதை வாசிக்கும் தப்லீக் அபிமானிகளுக்கும் இந்த மனோபாவம் இருக்கும் என்றே நம்புகின்றேன். இருப்பினும் உண்மை கசத்தாலும் அதை ஏற்றே ஆகவேண்டியிருக்கின்றது.

நபிவழிக்கு மாற்றமாக யாரின் செயல் இருப்பினும் அதனைப் புறக்கணித்தே ஆக வேண்டியுள்ளது.

அது ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய, மற்றும் தார்மீகக் கடமையாகும். எனவே குர்ஆன் ஹதீஸின் ஆதாரத்துடன் தப்லீக்கில் தவறு இருப்பதாக நீரூபித்தால் அதனை ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதியுடன் இதனை வாசிக்க ஆரம்பியுங்கள்.

இது தவிர தனிப்பட்ட வகையில் எனக்கு தப்லீக்குடனோ தப்லீக் சகோதரர்களுடனோ எவ்வித காழ்ப் புணர்ச்சியோ கசப்புணர்வோ கிடையாது. இன்று வரைக்கும் நான் அவர்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடனேயே பழகி வருகின்றேன்.

ஒரு முஸ்லிம் தான் விரும்புவதை தனது சக சகோதரனுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்ப வேண்டுமென்ற நபிமொழிக்கேற்ப இதிலுள்ள விடயங்களை தப்லீக் சகோதரர்கள் படித்ததன் பின் அது பற்றிச் சிந்திக்கத் தலைப்பட வேண்டு மென்பதே எனது அவா

அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். இன்றும் கூட குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பல கோணங்களில் முரண்படுகின்றது என்ற ஒரே காரணத்துக்காகவே நான் தப்லீக்கை விட்டு ஒதுங்கியுள்ளேன். இன்றும் கூட டில்லி, ரைவிந் மர்கஸ் தொடர்புகளைக் கத்தரித்து விட்டு அல்குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் செயற்படுவது என்ற நிபந்தனைக்கு கார்க்கூன்கள் சம்மதித்தால் இன்றிலிருந்தே நான் என் ஆயுளைக் கொடுத்து தப்லீக்கில் இணைந்து செயற்படக் காத்திருக்கின்றேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்

நான் மட்டு மல்ல குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கும் அனைத்து சகோதரர்களும் இதற்கு சம்மதிப்பார்கள் என்றே நம்புகின்றேன்.

நாம் அனைவருமே நிச்சயம் என்றோ ஒரு நாள் மரணிக்கக் கூடியவர்கள். அதன் பின் கப்ரில் புதைக்கப்பட்டு விடுவோம். அங்கே எமக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு மலக்குகள் விசாரிப்பார்கள். நபி (ஸல்) அவர்களுடைய உருவத்தைக் காட்டப்பட்டு இந்த மனிதரைப்பற்றி நீ என்ன சொல்கின்றாய் ? என்பார்கள்

அப்போது நபிவழியில் நடந்தவர்களே சரியான பதிலைக் கூற முடியும். நபிவழியைப் புறக்கணித்து நடந்தவர்களின் நிலை அந்தோ பரிதாபம் !! நாளை மறுமையில் அல்லாஹ் நம்மனைவரையும் மஹ்ஷர் வெளியில் ஒன்று கூட்டுவான் விசாரணை செய்வான். நபிவழிப்படி செயற்பட்டிருந்தால்த்தானே அல்லாஹ்வின் விசாரணையிலிருந்து வெற்றி பெற இயலும்.

நபியவர்களை நாம் மறுமையில் கவ்தர் எனும் ஆற்றின் பக்கம் சந்திக்க இருக்கின்றோம். அவ்வேளை நபிவழி நடந்தவர்களுக்கே நீர் புகட்டப்படும். அதற்கு மாற்றமாக நடந்தவர்களை நபியவர்களே மலக்குகளிடம் கூறி 'இவர்களைத் துரத்துங்கள் துரத்துங்கள் என்று விரட்டுவார்கள் எனஹதீஸில் உள்ளதே

நமக்கு இந்த நிலை ஏற்பட்டால் நம் கதி என்ன ? என்பது பற்றிய சிந்தனையுடன் தொடர்ந்து வாசியுங்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக நாம் அனைவருமே வாழ்ந்து மரணிக்க வேண்டுமென்று அவனைப் பிரார்த்திக்கின்றேன்

தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம்.

இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி (றஹ்) என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு – அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த தப்லீக் அமைப்பின் கேந்திரஸ்தலம் இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது.

தேவ்பந்த் எனப்படுவது அங்குள்ள ஹனபி மத்ஹப் போதிக்கும் மத்ரஸாக்களில் மிகப் பழைமை மிக்கதும், பெரியதுமாகும். மத்ரஸத்து தாருல் உலூம் என்பது இதன் பெயராகும்.

முஹம்மத் காஸிம் நானூத்துவியின் மேற்பார்வையில்; நபி (ஸல்) அவர்களே இதனை ஆரம்பித்ததாகவும்,

இந்த மத்ரஸாவுக்கு அடிக்கடி முஹம்மது நபியவர்கள் தமது கலீபாத் தோழர்களுடன் வருகை தந்து மத்ரஸாவின் வரவுசெலவுக் கணக்குகளைச்

சரிபார்ப்பதாகவும் தப்லீக் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர்
. ஆதாரம்: : (தோ ரூஹானிய்யத் அறபு பெயர்ப்பு ப:434)

இந்த மத்ரஸாவில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்கம் (அகீதா ) இஸ்லாத்துக்குப் பல்வேறு கோணங்களில் முரண்படும் மாத்துர்திய்யா பிரிவினரின் கொள்கையின் படி போதிக்கப்படுகின்றது

மார்க்கச் சட்டங்கள் ஹனபி மத்ஹபின் ஊடாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்த மத்ஹபு நபிவழிக்கு மாற்றமான ஆயிரக் கணக்கான சட்டங்களைப் போதிக்கின்றதென்பது தனி விடயம். அப்படியானால் அல்லாஹ் கூறிய கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகளும்,

நபியவர்களின் போதனைகளுக்கு மாற்றமான சட்டங்களும் போதிக்கப்படும் மத்ரஸா ஒன்றை எப்படி நபியவர்களே தொடங்கி வைக்க முடியும் ?

அடிக்கடி வருகை தந்து கணக்குகளைச் சரிபார்க்க முடியும் ? அவர்களுக்கே வெளிச்சம் இப்படி நிகழ்வது சாத்தியமா ? என்பது தனி விடயம்.

இது ஒருபக்கமிருக்க இந்த தப்லீக் பெரியார்கள் அனைவருமே ஜிஸ்த்திய்யா தரீக்காவின் ஷேக்மார்கள் - தர்ம கர்த்தாக்களாவார்கள் என்பதுதான் ஆச்சரியமான விடயம். இந்தத் தரீக்காவைத் சேர்ந்தவர்கள்; ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்;தி அவர்களைத் தமது ஆத்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள்

இவர்களிடம் 'ஜிஸ்திய்யா தரீக்காவின் ஷேக்மாரின் வரலாறுகள்' எனும் பெயரில் ஒரு புத்தகம் உண்டு. இதில் அந்த தரீக்காவின் முக்கிய ஷேக்மார்களின் வாழ்க்கைத் தொகுப்பு உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

இதில் முதலாவது இடத்தில் நபி (ஸல்) அவர்களுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கின்றார்கள்.

என்னவோ நபியவர்களே ஜிஸ்த்திய்யாத் தரீக்காவை ஆரம்பித்து அதன் முதலாவது ஷேக்காக இருந்து நடத்தியது போன்ற ஒரு பிரமையைப் பாமரர்களுக்குப் போதிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்கள்.

அடுத்து வரும் ஜிஸ்த்தியாத் தரீக்காவின் ஷேக் மார்களாக அபூபக்ர், உமர்,உதுமான், அலி ரலியல்லாஹ- அன்ஹூம் அவர்களது பெயர்களை இடம்பெறச் செய்து இஸ்லாத்தின் வரலாறே ஜிஸ்திய்யா தரீக்காவிலிருந்தே தோற்றம்பெற்றது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.

அது மட்டுமின்றி நபியவர்கள் தமது மரணத்தில் கப்ருடைய வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். மரணித்தவர்கள் திரும்ப மறுமையில் தான் எழுப்பப்படுவார்கள் என்பது இஸ்லாமியப் போதனை.

அவர்கள் சொர்க்கவாசிகளாயின் அங்குள்ள இன்பங்களைக் கண்ணுற்றதும் உலகிற்கு வரவே விரும்ப மாட்டார்கள். உயிர்த்தியாகம் செய்த ஷஹீத் மாத்திரம் மீண்டும் உலகுக்கு வந்து 10 தடவைகள் போரில் கொல்லப்பட வேண்டுமென விரும்புவார் என்பது நபிமொழி. (புகாரி 2606 முஸ்லிம் 34)

இதற்கு மாற்றமாக மரணத்தின் பின்னும் ஒருவர் உலகிக்கு மீண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்ய முடியுமென்ற வழிகெட்ட சூபிகள் கூறும் இந்துக் கொள்கையினையே இவர்கள் கொண்டிருக்கின்றனர்

நபியவர்கள் தேவ்பந்து மத்ரஸாவின் கணக்கு வழக்குகளைச் சரிசெய்யத் தோழர்களுடன் அடிக்கடி வருவதாக இவர்கள் கூறுவதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம்.

தப்லீக் ஜமாஅத் சூபித்துவம் பிரசவித்த குழந்தை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் மாத்திரமே போதும்.

இல்யாஸ் மௌலானா (றஹ்) அவர்களைப்பற்றிச் சொல்வதானால் இவர்கள் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள். சூபித்துவப் பாதையில் தன்னை முன்னர் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் மார்க்க அறிவில் போதிய தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது.

அதாவது அவர் சார்ந்திருந்த, சரிகண்டிருந்த சூபித்துவ தரீக்காவின் பக்கம் மக்களை ஒன்று சேர்ந்த்து நேர் வழிப்படுத்த வேண்டுமென்ற ஆதங்கத்துடன் இருந்தார்கள். றஸீத் அஹ்மத் கான்கோஹி, அஷ;ரப் அலி தானவி போன்ற ஷேக் மார்களிடமும் பைஅத் - குருஞான தீட்சை பெற்றுக் கொண்டவராயிருந்தார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8)

குருமார்களிடம் சென்று ஞான தீட்சை – பைஅத் செய்வது இஸ்லாத்துக்கு முறனான விடயமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது ஊரான மேவாத்தியிலுள்ள மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமான நிலையில் -- விக்ரக வழிபாடு நடத்தும் இந்துக்களின் கலாச்சாரத்தை முற்றிலும் தழுவிய நிலையிலே, எவ்வித வணக்க வழிபாடுகளோ இபாதத்களோ இன்றி வயலும் வாழ்வுமாக இருந்த அந்த அறியாமைக் கூட்டத்தைக் கண்டு இவர்களை நேர்வழிப் படுத்த எண்ணிய ஷேக் அவர்கள் தனது குருமார்களிடம் இது பற்றிப் பேசி தனது திட்டத்தைத் தெரிவித்த போது அவர்களும் அதற்குச் சம்மதிக்கவே இவர்கள் தமது இந்த அமைப்பைத் தொடங்கி தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கமென அதை அறிமுகப் படுத்தினார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8).

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் ஷேக் அவர்களின் இஸ்லாமியப் பற்றும், மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், பட்ட சிரமங்கள் அனைத்தும் பாராட்டத்தக்கதே. ஆனால் அவர்கள் எதன் பக்கம் மக்களை அழைத்தார்கள் என்பதே கேள்வி ?.

சூபித்துவத்தைப் பற்றியும் அதன் கொள்கைகள் கோற்பாடுகள் பற்றியும் ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கின்றேன். அந்த தரீக்காக்களின்; பக்கம்தான் மக்களை அழைத்தார்கள். அதாவது அன்று அவர்களுக்குத் தெரிந்த இஸ்லாம் அதுதான். இதற்காக அவர்களைக் குறைகூறவும் முடியாது. காரணம் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது

இஸ்லாம், குர்ஆன் ஹதீஸின் விளக்கங்களெல்லாம் ஆலிம்களுக்குக் கூடத் தெரிந்திருக்காத காலமது. மத்ஹபு நூல்களை மார்க்க ஞானமெனவும், சூபித்துவக் கருத்துக்களை மெஞ்ஞானமெனவும் நம்பி பாமர முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். குர்ஆன் ஹதீஸ் போதனைப்படிதான் மக்கள் வாழவேண்டுமென ஆங்காங்கே ஓரிரு உலமாக்கள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களெல்லாம் குழப்பவாதிகள், வஹாபிகள் என்று பட்டஞ் சூட்டப்பட்டு சமூகத்திலிருந்தே ஒதிக்கி வைக்கப்பட்ட காலம்

எனவே ஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்களிடமும் இஸ்லாத்தின் அகீதா அறிவுகள் அதன் தூய வடிவில் சென்றடையவில்லை. அவர்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிய அவா ஓங்கியிருந்த போதும் கூட அதனைச் செயற்படுத்துவதற்காக அவர்கள் தெரிவுசெய்த வழிமுறை சூபித்துவ வழிமுறையாகவே இருந்தது. அவர்களும்கூட சூபித்துவ தரீக்காவின் ஷேக்மார்களிடம் குருதீட்சை பெற்றிருந்தார்கள்.. அவர்களுக்குப் பின் வந்த தப்லீக்கின் முக்கியஸ்த்தர்களும் அதே ஞான வழியில் நடை பயில்பவர்களாகவே இருந்தார்கள்.

எனவே சுருங்கக் சொல்வதானால் ஒரு இயக்கத்தின் ஸ்தாபகர் தன்னகத்தே கொண்டிருந்த நற்குணங்கள், பக்தி, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீதிருந்த ஈடுபாடு போன்வற்றைக் கொண்டு அவரது இயக்கத்திற்கும் நல்ல இயக்கம் என்று சான்றுவழங்கிட முடியாது

உதாரணமாக நூஹ் நபி லூத் நபி ஆகியோர் நல்லடியார்கள் என்றபடியால் அவர்களின் மனைவிமக்களும் நல்லவர்களென வாதிடுவது எப்படி அபத்தமானதோ அது போன்று தான் இதுவும்

நபியவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய கூட்டமெனப் பிரகடனம் செய்த கவாரிஜ்களைப் பாருங்கள் ஸஹாபாக்களையே மிஞ்சி விடுமளவுக்கு அதிக இபாதத்தாளிகளாக இருந்தார்கள். குணசீலர்களாயிருந்தார்கள். இதை வைத்து அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிட முடியுமா ?

எனவே ஒரு இயக்கத்தை இஸ்லாமிய இயக்கமென்று சொல்வதானால் அது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றது, எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதை எடை போட்டுப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும்.

எனவே தப்லீக் இயக்கம் உருவாக்கியுள்ள அடிப்படைகள் சட்ட வரையறைகள் கொள்கைகள் பற்றியெல்லாம் சற்று விரிவாக விளக்க வேண்டியது அவசியம்

எனவே தப்லீக் சகோதரர்கள் தயவு செய்து பொறுமையுடன் பின்வரும் விடயங்களையும் வாசிக்க வேண்மென்பதே எனது எதிர்பார்ப்பும் வேண்டுதலுமாகும் safa marva, SATYAMARKAM.COM
--------------------------------------------------------------
'தப்லீக்' சேவையின் நன்மைகள்; சீர்திருத்தங்கள் பற்றி யாரும் மறக்கவும் இல்லை- மறுக்கவும் இல்லை. ஆனல், தற்பொழுது 'பயான்களில்' த அலீம்' களில் துறவறம் தூண்டப்படுகின்றது. அதற்கு காரணம்: 'பக்குவமற்றவர்கள்' 'உலகப் பொது அறிவுப் பற்றாக்குறையுள்ளவர்கள்' ஆகியோரின் பயான்களின் பின்விளைவுகளே

இவற்றை களைய வேண்டும் என்பதாலே அபூஅப்துல்லாஹ், 'பீஜே' போன்றோரெல்லாம் அமீர்களாக இருந்து இருந்தும் அதிலிருந்து விலகி அங்கு காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டத் தலைப்பட்டனர்

இங்கு வெளியாகியுள்ள 'தப்லீக் அன்றும் இன்றும்'கட்டுரை ஆசிரியரும் ஓர் இமாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

விமர்சனங்களைத் தாங்கும் 'பக்குவம்' இல்லாதவர்கள் 'தப்லீக்' இயக்கத்தில் நிறைய பேர் உளர் என்பதும் நான் கண்ட உண்மை

அதனால் தான் ஹதீஸ்களின் ஆதாரங்களைக் கூறுவதையோ கேட்பதையோ மறுக்கின்றனர்

படிப்பைத் துறந்த மாணவர்கள்; வணிகத்தை மறந்த வியாபாரிகள்;
மனைவி மக்களை மறந்து விட்ட குடும்பத் தலைவர்கள்-
இப்ப்டியாக 'மூளைச் சலவைக்கு'ப் பலியாக்கப்பட்டு

பின்னர் உண்மையான 'தீன்' எது வென்று உணர்ந்து அவர்களே அனுபவத்தால் திருந்தி

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாகவும்;
அதிகம் செல்வம் ஈட்டி தான தர்மம் செய்யும் வியாபாரிகளாகவும்;
மனைவிக்கு உரிய மகத்தான சுகத்தைத் தரும் கணவாணகவும்-
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகப்பனாகவும் வாழ்த்
துவங்கிவிட்டனர்
என்பதும் ஊர் தோறும் நாம் காணும் உண்மைச் சம்பவங்கள். kalam shaick abdulkader SATYAMAKAM.COM

1 comment:

Anonymous said...

Bro ur article is good and please don't I read this web book and realized sorry 4 misunderstanding u !!!

http://tableq.wordpress.com