Wednesday, December 31, 2008

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்


கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவில் அங்கம் வகிக்கும் மனித நீதீ பாசறையின் மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தலைமை தாங்க மனித நீதீ பாசறையின் மாநில செயற்குழுஉறுப்பினர் A. முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட தலைவர்A.காலித் முஹம்மது, மாவட்ட செயலாளர்S.Pமுஹம்மது நஸ்ருதீன், மத்திய பகுதி தலைவர் M.ஹீரா ஜான் கிழக்கு பகுதி தலைவர் M.லத்தீப் சாஹிப், மேற்கு பகுதிதலைவர் M.அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இதில் திரளாக கலந்துகொண்டனர்.

No comments: