Thursday, October 16, 2008

இந்து தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்ய கோரிக்கை!

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைத் தடை செய்யுமாறு ஜம்மா மஜித் தலைவர் சையத் அகமத் புகாரி வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக ஒரிசா மாநிலம் கந்தமாலில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் அவர்கள் குடியிருப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அகில இந்திய முஸ்லீம் மதத் தலைவர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய புகாரி, சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இந்தியா முன்னேற வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், ஆனால், சில தீவிரவாத அமைப்பினர் இதனை சீர்குலைக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாட்டில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவரும் இந்து தீவிரவாத அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் புகார் வலியுறுத்தினார்

No comments: