Wednesday, July 02, 2008

'பசுமைத் தென்றல்" செய்தி மடல்! பேரா. வெளியிட்டார்!!

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 'பசுமைத் தென்றல்" செய்தி மடலை மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட்டார். தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.அபு பக்கர், கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்


நிகழ்ச்சியின்போது 'பசுமைத் தென்றல்" ஆசிரியர் லயன் ஐ.முஹம்மது கமாலுத்தீன், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், வி.எம்.ராஜா ரஹிமுல்லாஹ், மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர், கடலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.முஹம்மது முஸ்தஃபா, கடலூர் நகர இளைஞர் அணி செயலாளர் சேக் புர்ஹானுத்தீன், கடலூர் நகர துணைத் தலைவர் அகமது மரைக்காயர், கடலூர் நகர துணைச்செயலாளர் நூர்அலி, விருத்தாசலம் நகர தலைவர் ஹாஜி அப்துல் மஜீது, சிட்டி எம். ஷம்சுதீன், அலங்கார் ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முஹம்மது ரபீக், மாவட்ட துணை செயலாளர் கே.லியாக்கத்அலி, கடலூர் மாவட்ட உலமாக்கள் சபை செயலாளர் ஷபியுல்லாஹ் ஹஜ்ரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த மாவட்ட செய்தி மடல் மாவட்ட இயக்கச் செய்திகளை ஏந்தி பிரதி மாதம் வெளிவரும் என்று இதன் ஆசிரியர் கூறினார்.

No comments: