Thursday, June 05, 2008

இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

கருணாநிதி (அன்கோ) வின் இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!


30.05.2008 அன்று மீண்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். முன்பு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அர்த்தம் என்ன? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆய்வு செய்ய 9 பேர் அடங்கிய ஜனார்த்தன கமிட்டியில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லாதது கருணாநிதியின் சாதனை. கமிட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திர கமிட்டி அறிக்கையை தூசு தட்டி முஸ்லிம்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியை தள்ளுபடி செய்து, இன்றைய முஸ்லிம்களின் மக்கள் தொகை, கல்வி, பொருளாதாரம், இட ஒதுக்கீடு நிலையை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 4 சதவீதம் முறையாக அங்கு கொடுக்கப்பட்டது. (கவனத்தில் கொள்க) 2 லட்சத்து 81 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்பட்டதாக டாக்டர் கலைஞரின் அரசு விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. அதில் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் என்றால் தலா கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் 10,500 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்திருப்பதோ 0.5 சதவீதம் கூட இல்லை. மேலும் சில உயர் பணியிடங்களுக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிப்பதற்கு கூட தகுதி இல்லாத நிலை உருவாகி விட்டது.

சிறுபான்மையினர் பாதுகாவலர், சமூக நீதி காத்தவர் என்று ஏற்றி போற்றி பாடப்படும் கருணாநிதியோ அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு என்று சாக்கு போக்கு சொல்கிறார். சட்ட மன்றத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருக்கிறது என்று இரட்டை நாக்கை சுழற்றினார். அரசு அதிகாரிகளோ! கிருஸ்துவர்கள் 14வது இடத்திலும், முஸ்லிம்கள் 28வது இடத்திலும் (ரோஸ்ட்டர்) சுழற்சி முறையில் இருக்கிறார்கள், அரசு ஆணைப்படி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் நீங்கள் பொருத்து இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படி பொறுத்திருந்தால் வயது வரம்பு கடந்து பணிக்கு சேரும் தகுதியை நம் சமுதாய இளைஞர்கள் இழந்து விடுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டால் எந்த நம்மையும் இல்லாமல் போய்விட்டது. முன்பு 3.2 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடிம், சட்ட சிக்கலும் இல்லாமல் முஸ்லிம்கள் சில இடங்களைப் பெற்றார்கள். அந்த நிலை இன்று கருணாநிதி அரசால் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது.

அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், அன்பழகனும், நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு குளறுபடிகள் சரி செய்யப்படும் என்றனர். சரி செய்யப்படாத நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தது. ஒரு தலைமுறையே பாதிக்கின்ற மிகப் பெரும் கொடுமை 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. எங்களின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், சட்ட சிக்கல்கள், குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கிருஸ்த்துவ, இஸ்லாமிய அமைப்புகளும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் 30.05.2008 அன்று சென்னையில் மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அவசர அவசரமாக கருணாநிதி (அன்கோ) கூடி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முறையாக மீண்டும் அமல்படுத்தப்படும் என்றனர். இன்று 3 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. முஸ்லிம்களுக்கு அதில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. இனி முறையாக அமல்படுத்த கலைஞர் அன்கோ ஆணை பிறப்பித்து இருக்கிறது. குதிரை போன பிறகு லாடத்தை தேடும் நிலையில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. நன்றி பாராட்டி விழா நடத்தியவர்கள், ரகசியமாகச் சென்று துண்டு போட்டு சிறை நிரப்பு போராட்டத்தின் வெற்றி என வெற்று அறிக்கை விட்டவர்கள் இட ஒதுக்கீட்டு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தவர்கள், சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையையே பாதிக்கும் துரோகத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இதயத்தை இரும்பாகப் பெற்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். இளைஞர்களே! சிந்தியுங்கள்!!.

தவிட்டைத் தங்கம் என்று சொன்னால் பாராட்டுவதா? குப்பையை குண்டு மல்லி என்று சொன்னால் குதித்து ஆடுவதா? அறிவைத் தொலைத்து விட்டு அறுப்பதற்கு ஆடுகள் என்று தலையை நீட்டுவதா?? மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி சுயநலத்திற்கு சமுதாயத்தை அடகு வைக்கும் தலைவர்களை (மன்னிக்கவும்) தலைவலிகளை, ஆம்! சமுதாய ஏஜென்டுகளை, கடல் செத்த மீன்களை ஒதுக்கி விடுவது போன்று அவர்களை ஒதுக்கி விட்டு அரசியலில் இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒற்றுமையை உறுதிப்படுத்தி நம் இட ஒதுக்கீட்டை நாமே தீர்மானிக்க இணைவீர், இன்றே தொடர்பு கொள்வீர்.


இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369

2 comments:

Anonymous said...

ஆள் பிடிகிரமாதிரி தெரியுது ரொம்ப நல்லவர்கள் போல காண்பிக்க முயற்சி செய்கிறிர்கள்..... பாராட்டுக்கள்....
Muji........Dubai

Anonymous said...

First you should go and tell the public and double game of TMMK? why are you sailent on TMMK's double game?