Monday, May 12, 2008

மதுரையில் USF நடத்திய வழிகாட்டி முகாம்



யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக 10.05.2008 சனிக்கிழமை மதுரை ஃப்ரென்ட்ஸ் மஹலில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் "நாமும் சாதிக்கலாம்" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.



மெளலவி ஜமால் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓத விழா தொடங்கியது USF ன் மாவட்ட தலைவர் திரு. ஃபக்ருதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். USF ன் மாநில தலைவர் திரு. பின்னர் தலைமையுரையாற்றினார்கள். USF ன் மாநில பொது் செயலாளர் திரு.முகம்மது அன்வர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


வழிகாட்டு உரைகளாக வழக்குறைஞர் திரு. ஜின்னா, பேரா. பஷீர் அஹமது, ஆடிட்டர் முகம்மது கான், மருத்துவர் அஹமது கலீல், உள்ப் பலர் மாணவர்களுக்கு எதிர்கால படிப்பு குறித்தும் திட்டமிடுதல் குறித்தும் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியாக சட்டக் கல'லுர்ரி மாணவர் திரு. ராஜா முகம்மது அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

No comments: