Thursday, May 01, 2008

இந்துத்துவா -- பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு?

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்து மதத்தை நம்புகிறவர்கள்தான். அந்த மதத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்தான். ஆனால், அங்குதான் இந்து மதத்தின் கலாச்சார சின்னமாக கருதப்படுகின்ற இராமனை, எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்க முடிகிறது.

இது வடநாட்டு பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது எப்பொழுதுமே ஒரு பிடிபடாத ஆச்சர்யம். இந்த ஆச்சர்யத்திற்கு காரணகர்த்தா அல்லது நாயகனின் பெயர்தான் தந்தை பெரியார்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துத்துவா எப்படி காலூன்றுவது. இதற்காக அவர்கள் கடைப்பிடிக்கின்ற உத்திகளில் ஒன்றுதான் கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இரவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.சரி, குண்டு வைத்தது யார்?

சுலபமான பதில் இசுலாமியர்கள் என்பதுதான். இப்படித்தான் மக்கள் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், உண்மை என்ன? ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்.

இந்த செய்தியை உள் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் 1948 ஜனவரி 30க்குச் சென்று திரும்ப வேண்டும்.

நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது.

இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான்.

சரி, இப்பொழுது கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி நடந்த தென்காசி சம்பவத்திற்கு வருவோம். சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகள் முதலில் கைப்பற்றியது முசுலீம்களின் தொப்பிகள் சிலவற்றைத்தான்.

ஆனால், சங்கராச்சாரியை கைது செய்தது போல, தென்காசி சம்பவத்திலும் போலீசார் நேர்மையுடன் செயல்பட்டு இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார், நாராயண சர்மா போன்றோரையும் இன்னும் சிலவரையும் கைது செய்தனர்.

அந்த வகையில் தமிழக அரசு சரியான நிலைப்பாடு எடுத்தது மிகவும் பாராட்டத்தகுந்தது.

குண்டு வெடித்தபோது அலறிய நாளிதழ்கள், குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ். காரர்தான் என்று தெரிந்ததும் பத்திரிகா தர்மம் பேசும் நாளேடுகள் அடக்கி வாசித்தன. இந்து நாளேடு கூட 18.2.2008 அன்று இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

பிப்ரவரி 6, 2008இல் விடுதலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டு வெடிப்பு குறித்து உளவுத் துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஒரு முறை ஏற்படாதவண்ணம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் 2002-ஆம் ஆண்டு, சதுமுகை என்னும் இடத்தில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், முனீஸ்வரன் சிலையை சிதைத்தும் இந்துத்துவாகாரர்கள் செய்த சதிச் செயலை தமிழர் தலைவர் ஞாபகப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமா? முசுலீம்களின் வீட்டு முகவரியை குறித்து வைத்துக் கொண்டு, இந்துத்துவாவாதிகளால் கோர தாண்டவம் நடத்தப்பட்ட மும்பாய் கலவரம் ஆகட்டும், தொலைபேசி கையேட்டை கையில் வைத்துக் கொண்டு, காவல் துறை உதவியுடன் இந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் நடத்திக் காட்டிய மனித நேயமற்ற படுகொலைகளும், இவை எல்லாம் எதைக்காட்டுகிறது என்றால், தென்காசி சம்பவத்தையோ, முத்துப்பேட்டை சம்பவத்தையோ எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைத்தான்.

நடக்கப்போகும் மும்பை போன்ற, குஜராத் போன்ற கலவரங்களுக்கு கால் கோளாகத்தான் கருத வேண்டும். ஆக, கலவரங்களை விதைக்கவும், தூண்டவும், களத்தில் இறங்கி படுகொலைகளை நிகழ்த்தவும் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்றை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் இயங்கி வருவதை இனிமேலாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு, இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடவேண்டும்.

அதற்கான அழுத்தத்தை மதசார்பற்ற அமைப்புகள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தென்காசியில் நடந்த சம்பவத்தின் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரரான குமார் பாண்டியனின் வாக்கு மூலம் நமது கருத்துக்கு மேலும் வளம் சேர்க்கிறது. தனது வீட்டில் 4 பேர் பலியான போதும், இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. குண்டுவெடித்தத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை என்கிறார் கூறுகிறது.

இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது. ஆனால், இது தமிழ்நாடு என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். பகுத்தறிவு பாதையில் இந்த மண் பண்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதை இன்னமும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதை எப்படியாவது மாற்றியமைத்திட வேண்டுமென்று தான் இந்துத்துவாதிகள் இப்படிப்பட்ட தொடர் நிகழ்வுகளை (குண்டுவெடிப்பு, கலவரங்கள்) நிகழ்த்தி வருகின்றனர்.

சில அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இரு சமுதாயங்களுக்கிடையே மத ஒற்றுமை என்பதைக் காட்டிலும் தங்களின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதிலிலேயே குறிக்கோளாக இருந்து வருகின்றன.

அதே போல, இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தத்தின் இடுப்பை முறித்துப் போடுகின்ற வலிமையை, சுயமரியாதை இயக்கங்களுக்குப்பிறகு, பொதுவுடைமை இயக்கங்களுக்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ்.ன் பார்வை சமீப காலங்களில் பொதுவுடைமை இயக்கங்களின் அலுவலகங்களுக்கு குண்டு வைப்பதும், பொதுவுடைமை இயக்கங்களின் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் என்று தனது ஆக்டோபஸ் காரங்களை நீட்ட ஆரம்பிக்கிறது.

பந்தடிக்க துப்பில்லை என்பதால், நன்றாக ஆடுபவர்களின் கால்களைத் தாக்குவது என்ற போக்குதான் இது.

இதற்கு அத்தாட்சிதான் புதுடில்லியிலும், புனே உள்ளிட்ட இடங்களில் மார்க்ஸ்ட் அலுவலகங்கள் மீதும், தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.

இவர்கள் நீட்டி முழக்குகின்ற இந்துத்துவா கொள்கையில் இராமன் பிறந்த இடமென சொல்லப்படுகின்ற உத்திர பிரதேசத்திலே பாபர் மசூதியை இடித்தும்கூட, இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட முடியாமல் தனது கோர பற்களை தென்னகத்தில் காட்ட ஆரம்பித்துள்ளன.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட ஒரு இயக்கம் நடத்திய தென்காசி குண்டு வெடிப்பு நாளேடுகளால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, இதன் பின்னணியைப் பற்றி மக்களும், அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையை, அ.மார்க்ஸ், கோ. ககுமாரன், ரஜினிகாந்த் (வழக்குரைஞர்), உதயம் மனோகரன், சீனி சுல்தான், தமயந்தி, செங்கொடி, அப்துல் ரஹ்மான், ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உண்மை அறியும் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து அதை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

தென்காசி சம்பவத்தில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ரவி பாண்டியனுக்குச் சொந்தமான கேபிள் டி.வி. அலுவலகத்தில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றுடன் 90 பேட்டரியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக் கூடியதாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகள் தயாரிக்கப்பட்டு இரண்டிரண்டாக 7 செட் குண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடையநல்லூர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தன் தேவையான அமோனியம் நைட்ரேட் கொண்டு வந்து தந்துள்ளார்.

இந்த சதித்திட்டத்தை சரியான வகையில் அடக்கி ஒடுக்காவிட்டால் தென்காசி இன்னொரு கோவை ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சிறு நகரம் முத்துப்பேட்டை. சுமார் 10,000க்கும் மேற்பட்ட முசுலீம்கள் இவ்வூரில் வசிக்கின்றனர். பல காலமாக இருதரப்பினரும் ஒற்றுமையாக, பிரச்சனைகள் ஏதுமின்றி அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வந்துள்ளதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனினும் கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது வினாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.

முத்துப்பேட்டை நகரத்திற்குள் நெருக்கடியான சந்துகளில் அமைந்துள்ள முசுலீம் வீடுகள், பள்ளிவாசல்கள் வழியாகவே வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.

நெருக்கமான முசுலீம் வீதிகளில் பட்டாசுகளைக் கொளுத்துதல், துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு இந்து நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு -என்பது போன்ற முழக்கங்கள் இட்டுச் செல்லுதல், பள்ளி வாசல்களில் செருப்பு முதலானவற்றை வீசுதல். இவற்றின் விளைவாக முசுலிம் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு எதிர்வினையாற்றல், அதை ஒட்டி முசுலீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுதல். இவை தொடர் கதையாகிவிட்டது.

இந்த நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு - என்ற முழக்கம் தவிர, ராமர் கோயில் கட்டுவோம் - என்கிற முழக்கம் உட்பட மற்ற அனைத்தையும் அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

(ரிட் எண் 28996/2005) எனினும் தடுக்கப்பட்ட இந்த முழக்கம் உட்பட வழக்கமான இழிவான முழக்கங்களையும் ஊர்வலத்தினர் முழங்கியதோடு பட்டாசுகளையும் வெடித்துள்ளனர்.

இது மட்டுமா, முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் மீதே இந்துத்துவா சக்திகளால் குண்டு வீசப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் சர்வ கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல் துறையும் சேர்ந்து அமுக்க முனைவதையும், பிரச்சினையை பெரிதுபடுத்தினால் இந்துத்துவா சக்திகள் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பார்கள் என அரசியல் பிரமுகர்கள் சொல்லி தமது ஜாதிக்காரர்களான வன்முறையாளர்களை காக்க முனைவதையும்,

முசுலீம்கள் செய்ததாக செய்தியை பரப்பும் நோக்கில் இந்த குண்டு வீசப்பட்டிருப்பதையும் உண்மை அறியும் குழு கண்பிடித்திருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது போன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதற்கு காரணமாக அமைந்து வினாயகர் பொம்மை ஊர்வலம்தான். அது தடை செய்யப்பட வேண்டும்.

தேவையானால், நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமது தர்ஹா ஊர்வலங்களையும் கூட நிறுத்திக் கொள்வதற்கு முசுலீம்கள் தயாராக உள்ளதாக உண்மை அறியும் குழு அறிவித்திருக்கின்றனர்.

ஆகவே, இந்த தென்காசி, முத்துப்பேட்டை சம்பவங்கள் இன்னுமொரு மும்பை, குஜராத், கோவை கலவரப் பிரச்சினை விதம் என்பதை உணர்வைத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அத்தகைய நிலையை எட்ட வேண்டிய மதசார்பற்ற அமைப்புகள் தகுந்த அழுத்தத்தையும், ஆதரவையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதும், அவசரமானதும் ஆகும்.
http://unmaionline.com/20080402/pa-08.html

1 comment:

Anonymous said...

நாட்டுல இப்படி நெறய நடக்குது வாஞ்சூர் ஐயா.