Saturday, July 07, 2007

தம்மாம் இஸ்லாமிய கருத்தரங்கம் செய்திகள்


தம்மாம் மாநகரில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா சென்டரில் 06.07.2007 வெள்ளிக்கிழமை அன்று அரை நாள் இஸ்லாமிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. I.D.G.C ஏற்பாடு செய்திருந்த இந்த இஸ்லாமிய கருத்தரங்கத்தில் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும் தமிழகத்தில் தவ்ஹீத் என்ற ஏகத்துவம் காலூன்றுவதற்கு முக்கிய காரணகர்த்தாவுமான ஜம்மியத்துல்அஹ்லுல் குர்ஆன் வ அல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் தலைவருமான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களும் மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞரான அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள்.

நிகழ்ச்சியை இலங்கையை சோந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க் உவைஸ் மெளலவி அவர்கள் துவங்கி வைக்க தம்மாம் IDGC யின் தற்போதைய துனைத்தலைவரும் சவுதியில் உள்ள பல இஸ்லாமிய சென்டர்கள் உருவாவதற்கு வழிகாட்டியவரும் ஜம்மியத்துல்அஹ்லுல் குர்ஆன் வ அல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் தலைவருமான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களின் சக வகுப்பு தோழரும் (மதினா பல்கலைக்கழகம்) ஆன மறியாதைக்குறிய அஷஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்கள் சிறப்பு விருந்தினர்களான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி மற்றும் அஷஷேய்க் ரஹ்மத்துலு்லாஹ் இம்தாதி அவர்களையும் மற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.

அஷ்ஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்களின் அரபியல் அமைந்த உரையை IDGC யின் அழைப்பாளர் அஷ்ஷேய்க் நூஹ் மெளலவி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து சொன்னார்கள். அஷ்ஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்கள் தனது உரையில் தனது தாய் நாடு சவுதியாக இருந்தாலும் தமிழகம் தனது இரன்டாவது தாய்நாடு என்றும் தான் அங்கு 9 முறை விஜயம் செய்துள்ளதையும் மற்றும் அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி உடனான தனது மாணவ கால நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்க்ள. இன்னும் 20 வருடங்களுக்கு மேல் கழித்து சவுதி அரேபியாவிற்கு வருகை புறிந்துள்ள மார்க்க அறிஞரான அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களை பல வருடங்களுக்கு முன்னர் கூடிய அனைத்து தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில் ஏகோபித்த முடியவாக குர்ஆன் மற்றுமு் ஹதீஸை எடுத்தும் சொல்லும் அமைப்புகளுக்கு அமீராக தேர்வு செய்ததையும் அதை அவர்கள ஏற்க மறுத்ததையும் பின்னர் அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களை வற்புருத்தி அப்பொருப்பை ஏற்க வைத்ததையும் அஷ்ஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்கள் தனது உரையில் நினைவு கூர்ந்தார்கள் இன்னும் அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்கள் தமிழகத்தில் ஆற்றி வரும் சமுதாய அரும்பணிகளையும் அதை தான் பல முறை தமிழகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதையும் விவரித்தார்கள்.


அடுத்தபடியாக உரையாற்ற வந்த தமிழகத்தை சேர்ந்த பிரபல மார்க்க அறிஞரான அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் "பாவமண்ணிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அவர்களின் உரையில் பெருகி வரும் பாவங்களை பற்றியும் முஸ்லிம்கள் எவ்வாறு பாவங்களில் இருந்து மீண்டு தவ்பா எனும் பாவ மண்ணிப்பு தேடுவது என்பது பற்றியும் மிகச் சிறப்பாக விளக்குவதாக அமைந்திருந்தது.

இறுதியாக உரையாற்ற வந்த ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வ அல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் தலைவருமான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்கள் "ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில் தாங்கள் எப்படி ஆரம்ப கால கட்டத்தில் அதாவது 1980 களில் தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரத்தை ஆரம்பித்தனர் என்றும் இன்று ஏகத்துவ கொள்கை தமிழகமெங்கும் பரவி வயாபித்து நிற்பதற்காக தானும் தனது சகாக்களும் எவ்வளவு கஷ்ட்டப்பட்டோம் என்பதையும் அதனால்தான் இன்று ஏகத்துவம் தமிழகத்தில் காலூன்ற முடிந்தது என்பதையும் விளக்கினார்கள்.

1980 களிள் தான் ஜம்மியத்துல் குர்ஆன் வல்ஹதீஸ் இயக்கத்தை ஆரம்பித்து ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும் நீண்ட கஷ்ட்டங்களுக்கு பின்னர் 1995 வாக்கில் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டிருந்த சமயத்தில் இன்னும் 5 வருடங்களில் தமிழகத்தில் 50 சதவிகித முஸ்லிம்க்ள ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலைமையில் சுய ஆதாயத்திற்காக சாத்தானிய சக்தி ஒன்று ஒன்று பட்டிருந்த இஸ்லாமிய இயக்கமும் தாய் இயக்கமுமான ஜம்மியத்துல் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பை உடைத்து தனி அமைப்பு கண்டதையும் பின்னர் அதே சாத்தானிய சக்தி தான் ஜாக்கில் இருந்து உடைத்து சென்று அமைத்த இயக்கத்தையும் உடைத்து வெளியேறி தவ்ஹீத் பெயரில் புதிய அமைப்பு கண்டதையும் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் பிரித்து துன்டாடிய அந்த சைத்தானிய சக்தியின்ட சதியையும் தளிவாக விவரித்து அந்த சைத்தானிய சக்தியை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

இஸ்லாத்தில் இமாமை அல்லது அமீரை பின்பற்றுவதன் அவசியத்தையும், இமாம் அல்லது அமீர் தவறு செய்யும் நேரத்திலும் கூட அவரது தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் ஆனால் எந்த ஒரு நிலையிலும் அந்த அமீரையோ அல்லது இமாமையோ பிறிந்து சென்று விடக்கூடாது என்பது பற்றியும், எந்த ஒரு இஸ்லாமிய காரணமும் இல்லாத நேரத்தில் தனது சுய புகழ் காரணமாக ஒன்று பட்ட பல முஸ்லிம் அமைப்புக்களை உடைத்து தமிழக முஸ்லிம்களை துன்டாடி பிரிவினைக்கு வித்திட்டு இன்று தமிழக முஸ்லிம்கள் பல அமைப்பக்களாகவும் குழுக்கலாகவும் பிறிந்து நின்று தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் அடித்துக் கொள்ளும் அவல நிலைக்கெல்லாம் காணமான அந்த ஒரே சைத்தானிய சக்தியை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் எனவும் வலியுருத்தினார்கள்.


அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள் தனது உரையில் பல இடங்களில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு நேர் எதிராக தான் இருந்த அமைப்போ அல்லது அந்த அமைப்பின் தலைமையோ எந்த ஒரு இஸ்லாத்திற்கு எதிரான செலையும் செய்யாத நிலையில் (இஸ்லாமிய கோட்பாடென்பது எந்த ஒரு சூழ்நிலையிலும் அமீரை (தலைவரை) பின்பற்ற வேண்டும் அந்த தலைவர் வெளிப்படையாக சிர்க் செய்கின்றார் என்ற நிலையில்தான் அவரை விட்டு விலக வேண்டும்) தனது சுய லாபங்களுக்காக வேண்டி அந்த சைத்தானிய சக்தி வெண்னை திரன்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக அமைப்பை உடைத்து மாற்று அமைப்பு கண்டதையும் பின்னர் அந்த அமைப்பையும் உடைத்து புதிய அமைப்பு கண்டதையும் கூறி "பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் காஃபிர்கள்" ஆகவே முஸ்லிம்களிடம் பரிவினையை ஏற்படுத்துவதற்காக வேண்டி மற்றவாக்ள் மீது பொய்க் குற்றங்கயை சுமத்தி, பல கேவலமான வேலைகளையும் செய்யத் தயங்காத இந்த சைத்தானிய சக்தியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுருத்தினார்கள்.


அத்துடன் கடந்த இருபது வருடங்களில் தலைமையை உடைத்து பிரிவினை செய்து இந்த சைத்தானிய சக்தியால் தனி ஜமாத்தக்களாக பல அமைப்புக்களாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம்கள் அனைவரையும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுருத்தியும் இந்த சைத்தானின் சதி்ச்செயலால் எப்படி பல அமைப:பக்களாக தமிழக முஸ்லிம்கள் பிளவு பட்டார்கள் என்பதையும் மீண்டும் அந்த சைத்தானிய சக்தியின் சதிச் செயலுக்கு பலியாகாமல் தமிழக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சைத்தானிய சக்தியால் தாய்க் கழகத்திலிருந்து விலகி பல அமைப்புக்களாக பிளவுன்டு கிடக்கும் அனைத்து முஸ்லிம்களும் மீண்டும் ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழகத்தில் பல வெற்றிக் கணிகளை எட்டுமாறு கோரிக்கை விடுத்தார்க்ள.

தமிழக முஸ்லிம்கள் ஏன் இத்தனை அமைப்புக்களாக உடைந்து கிடக்கின்றார்கள் என்றும் தமிழக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி பல கூறுகளாக ஒற்றுமையின்றி அவர்களை பிறித்தது எந்த சைத்தானிய சக்தி என்று பல காலமாக தமிழ் முஸ்லிம்களின் மனதில் உழன்று வந்த இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அந்த சைத்தானிய சக்தி எது வென்பதை மக்களுக்கு தெளிவாக அடையாளப்படுத்தும் விதமாகவும் இருந்தது அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி அவர்களின் சிறப்புர மேலும் ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை வலியுருத்துவதாகவும் அமைந்திருந்தது.

அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி அவர்களின் உரைக்கு பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் அத்துடன் அஷ்ஷேய்க் உரைஸ் மெளலவி அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழச்சிக்கு ஜீபைல், ரஸத்தநூரா, அப்கைக், ரியாத்ட உட்பட பல நகரங்டகளில் இருந்தும் தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் அருசுவை மதிய உணவும் அத்துடன் மாலை நேரத்தில் தேனீரும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கான அத்தனை எற்பாடகளையம் தம்மாம் I.D.G.C நிலையத்தினர் எற்பாட செய்திருந்தனர்.இலங்கை இந்திய அழைப்பாளர்களும். இலங்கை இந்திய தமிழ் முஸ்லிம் சகோதரர்களும் தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்றியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலதிக தகவல்களுக்கு இந்நிகழ்ச்சியின் வீடீயோ பதிவினை பாருங்கள்.

தம்மாம், அல்கோபர் மற்றும் சுற்றுவட்டார இஸ்லாமிய அழைப்பு நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை காண எப்போதும் இஸ்லாமிய தாஃவா டாட் காம் காணுங்கள். இஸ்லாம்

No comments: