Monday, January 29, 2007

MUGAVAI-MNP ஜம்இய்யத்துல் அத்ஃபால் கண்டன பேரணி

காட்டுமிரான்டி செயலான குழந்தைகளின் படுகொலையை கண்டித்து ஜம்இய்யத்துல் அத்ஃபால் கண்டன பேரணி


முகவை MNP மழழையர் அணி நடத்திய கண்டன பேரணி


கடந்த 20.01.2007 அன்று முகவை மாநகரில் மனித நீதி பாசறையின் மழழையர் அணியினர் டெல்லி நொய்டாவில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற காட்டுமிரான்டி செயலான குழந்தைகளின் படுகொலையை கண்டித்தும் இதில் நேர்மையான முறையில் நீதி விசாரனை நடத்த வேண்டியும் மனித நீதி பாசறையின் மழழையர் அணியினரான "ஜம்இய்யத்துல் அத்ஃபால்" கண்டன பேரணியை நடத்தினர்.



பதாகைகள் தாங்கிய பாலகர்கள்

இந்த பேரணியில் பெருந்திரளான குழந்தைகள் மாவட்டமெங்கும் இருந்தும் சுற்றுப்புற கிராமங்களான பெரியபட்டினம், வண்ணாங்குன்டு போன்ற கிராமங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.


அணிவகுத்துச் செல்லும் முகவை MNP யின் மழழையர் அணி


பெருந்திரளான குழந்தைகள் கலந்து கொண்ட இந்த பேரணியில் நொய்டா குழந்தைகள் படுகொலைகளை கண்டித்து மனித நீதி பாசறையின் மழழையர் அணியினரான "ஜம்இய்யத்துல் அத்ஃபால்" குழந்தைகள் கோசங்கள் எழுப்பினர். MNP மழழையர் அணி ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட தங்களின் சக வயது குழந்தைகளுக்காக நடத்திய இந்த போராட்டம் முகவை மாநகர மக்களின் கவணத்தை கவர்வதாக அமைந்திருந்தது.

செய்திகள் மற்றும் புகைப்படம் : முகவை மாவட்ட MNP - சின்னக்கடை

No comments: