Thursday, August 03, 2006

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி!

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,
நன்றி! நன்றி!!

அநீதிகள் அரங்கேறிய கோட்டையில் நீதியை நிலை நாட்டி சங்க இலக்கியத்தை விஞ்சிய சரித்திர நாயகனே!

நீதியை நிலைநாட்டிய சிலப்பதிகாரத்தை தமிழ் பூமியில் மீண்டும் தட்டி எழுப்பிய தமிழ் ஆய்ந்த தலைமகனே!

ஏழைகளுக்கு, ஆம், முஸ்லிம்களுக்கு நீதி எட்டாக் கனி என்று இருந்த சூழலை மாற்றி விருப்பு, வெறுப்பைத் தூரமாக்கி, காவல்துறையைக் கலங்கப்படுத்திய கருப்பு ஆட்டை, ஆம், பசுத்தோல் போர்த்திய இரத்தின சபாபதியை கோவையில் இருந்து இடமாற்றம் செய்து உண்மையை தமிழ் உலகுக்கு உரக்க முழங்க, வாய்மை வெல்லட்டும் என்று நீதி விசாரணை செய்ய ஆணையிட்ட தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே,

நீதி என்ற வார்த்தை நிமிர்ந்து நிற்கும் வரை உன் புகழ் இருக்கும் என்று வற்றாத வாஞ்சையோடு வாழ்த்துகிறோம்.


சட்டத்தின் ஆட்சி நடக்கட்டும்!
வாய்மை வெல்லட்டும்!!
தீமைகள் ஒழியட்டும்!!!

இவண்
இந்திய மக்கள் பேரவை,
வளைகுடா நாடுகள்
மற்றும்
இந்திய தேசிய மக்கள் கட்சி,
தமிழ்நாடு

No comments: