Monday, April 24, 2006

பி.ஜேயின் தாம்பரம் மீட்டிங்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிட்ட தவ்ஹீது தலைவர்

தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஓ. பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், கும்பகோணம் (குடுமி) ரங்கநாதன் போன்ற ஜெயலலிதாவுக்கு வேண்டிய மிகமுக்கிய வேட்பாளர்களையும், மதிமுகவில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்யும் வேட்பாளர்களையும் ஆதரித்து அரசியல் தவ்ஹீதுவாதி பீ.ஜே. பிரச்சாரம் செய்து வருகிறார். பீ.ஜே.யின் போக்குவரத்துச் செலவு, போஸ்டர், மேடை, சவுண்ட் சர்வீஸ் என எல்லாச் செலவையும் அந்த வேட்பாளரைச் சார்ந்தது. இந்த வரிசையில்தான் 15-04-06 அன்று தாம்பரத்தில் மதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய தவ்ஹீது தலைவர் பீ.ஜே. தமுமுக தலைவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் மிகக்கேவலமாக - தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி, தாம்பரம் பகுதி மக்கள் காரித்துப்பும் அளவிற்கு பேசி அல்ல ஏசிவிட்டுப் போனார். தமுமுக பொதுச் செயலாளர் ரியாத்தில் இருக்கும்போது விசா எடுத்துத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று திரும்பத் தரமுடியாமல் தனது குடும்பத்தை ரியாத்திலேயே விட்டுவிட்டு வந்தார், நான்தான் பணம் கிடைக்க உதவி செய்து அவரது குடும்பத்தை இந்தியா வர வழிசெய்து தந்தேன். பேராசிரியர் அப்பனுக்கு சோறு போடாதவர், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரவுடிகள் என்பது போன்ற தனிமனித அர்ச்சனைகள். தவ்ஹீது தலைவர் என்னப் பேசுகிறார் என கேட்கச் சென்ற ஒரு முதியவர், பேச்சின் இடையிலேயே எழுந்து, ''பிறகு எதற்கு புடுங்குவதற்காகவா 10 வருடம் அவர்களுடன் ஒன்றாக இருந்தீர். நாளைக்கு பாக்கரையும் - சைபுல்லா ஹாஜாவையும் இப்படித்தானே பேசுவீர்'' என திருநெல்வேலி பாiஷயில் பேசிவிட்டு எழுந்து சென்றதுதான் கூட்டத்தில் ஹைலைட்.

பீ.ஜே. பேசியதில் உண்மை இருக்கிறதா என்பது இரண்டாவது விஷயம். உண்மையாக இருந்தாலும், ''ஒரு முஸ்லிம் செய்த உதவிகளை ஒருபோதும் சொல்லிக் காட்டக்கூடாது'' என்பது ஊருக்குத்தான் உபதேசமா? மறுமை நாளில் மூன்று பேருடன் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அந்த தண்டனைக்குரியவர்கள் யார்? எனக் கேட்டபோது, அந்த மூவரில் ஒருவர், தான் செய்த உதவியை சொல்லிக் காட்டியவர்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி முஸ்லிம் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ''செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன் கக்கிய வாந்தியை மீண்டும் சாப்பிட்டவன் போலாவான்'' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். நபிகளாரின் இந்தப் பொன்மொழிகள் எல்லாம் மேடையில் கவர்ச்சியாக பேசுவதற்கும், சி.டி. போட்டு விற்பதற்கும் மட்டுமே என பீ.ஜே. நினைத்து விட்டார் போலும். அல்லாஹ்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும். இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள கவலை என்னவெனில், இல்லாத பிரச்சினைகளை இருப்பதுபோல் காட்டுவதில் வல்லவர் பீ.ஜே. அவர்கள். பாக்கரின் ஒய்.கே.மேன்சன் மேட்டரையும், சைபுல்லாவின் மதரஸா பையன்கள் மேட்டரையும், எம்.ஐ. சுலைமானின் காதல் மேட்டரையும் சும்மா விடுவாரா? என்பதுதான்.

செய்யது, தாம்பரம
***************************************************************************
மேலே கன்ட செய்தி மின்னஞ்சல் மூலம் அபாபிலிடமிருந்தும் இளையவனின் இனையத்திலிருந்தும் கிடைக்கபெற்றது
முகவைத்தமிழன்
***************************************************************************

3 comments:

Anonymous said...

this not good for one help to others. the same incident tntj secretary A.S.Alaudden who has having al-noor travels manady that peroid akkur 3 canditae given money to alaudeen for visa still he can not return back. now pj says like that..what a joke.those who teach before first himself do clear.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரரே! அவதூறுகளைப் பரப்பாமல் விடுவோமே! அல்லாஹ் நன்மைளைத் தருவான். இதற்காக என்னை பீஜே குருப் என்று முத்திரை குத்தி விடாதீர்கள். வஸ்ஸலாம்

Anonymous said...

VANKIYA KODIKALUKKU VISUVAASAMAY MADAI THIRUM PAESUM VAIKOVUKKU KALAINGARKUDUMBAM..THAYANITHIMARAN ....NAMMA ANNAN P.J.KKU TMMK YUM, JAAWRHIRULLAH,HIDER ALI, VALARAK ARSIYALTHALAIVARAKL....