Saturday, February 28, 2009

உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்....

பகிரங்க சவாலுக்கு பகிரங்க பதில்


தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் தக்லீத் வளர்க்கப் புதிதாக உருவான ஒரு குழு உண்மை உதயத்தின் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ என்ற கட்டுரை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களது அழைப்புக்கு எமது பதில் இதுதான்.

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا

‘அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், ‘ஸலாம்’ எனக் கூறுவார்கள்.’ (25:63)

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

‘(நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக!’ (7:199)

இந்த ஆயத்துக்களின் அடிப்படையில் நாம் இவர்களுக்கு ஸலாம் கூறி இவர்களைப் புறக்கணிக்கின்றோம்.

இதுவே இவர்களுக்கு எமது பதில். எனினும், இத்துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்ட ஏனைய சகோதரர்களுக்காக சில குறிப்புகள்:

‘உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்’ என்று எழுதியுள்ளனர். உண்மை உதயம் இந்நாட்டில் (இலங்கை) நீண்ட காலமாக குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வெளிவரும் ஓர் இதழாகும். பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக ஒரு கருத்து எழுதினால் இருளை உதயமாக்கும் என விமர்ச்சிக்கின்றனரே! இதன் அர்த்தம் என்ன? இது வரை நாம் எழுதிய குர்ஆன்-ஹதீஸ் அனைத்தும் இருளாகி விட்டனவா?

இது வரை இருளை உதயமாக்கினால் ஏன் அப்போது இந்தப் பகிரங்க சவால் வெளிவரவில்லை? இவ்வாறு சிந்திக்கும் போது பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக யார் பேசினாலும் அவரின் அனைத்துக் கருத்துக்களும் பிழையானவை; பி.ஜெய்னுலாப்தீன் சொல்லும் அனைத்துக் கருத்துக்களும் உண்மையானவை என்ற வெறி உணர்வு இவர்களிடம் மேலோங்கி இருப்பதை அறியலாம்.

அல்லது நாம் இது வரை எழுதிய அனைத்தும் பிழையானவை என்பது அவர்களது கருத்தாயின் மார்க்கத்துக்கு முரணாக எழுதினாலும் பரவாயில்லை; பொறுத்துக்கொள்வோம். பி.ஜெய்னுலாப்தீனுக்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற பி.ஜெய்னுலாப்தீன் பித்து தான் அவர்களை அப்பொழுது இப்படி சவால் விட வைத்துள்ளதோ?

அடுத்து, ‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை எவராலும் செய்யவும் முடியாது. இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்’ என்று எழுதியுள்ளனர்.

நாமும் தவ்ஹீத் ஜமாஅத்துத்தான; அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், IAT , ஸபாப், IIRO போன்ற அனைவரும் தவ்ஹீத்வாதிகள்தாம். இன்றோ, நேற்றோ சிலர் இணைந்து ஒட்டுமொத்த தவ்ஹீத்வாதிகளும் நாம்தாம் என்ற தோரணையில் எழுதுகின்றார்கள் என்றால் இந்நாட்டின் (இலங்கை) தவ்ஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்கள் எப்படி நியாயமானவர்களாக இருப்பார்கள்?

பி.ஜெய்னுலாப்தீனின் ஒரு கருத்துக்கு முரண்பட்டதால் பொய்களை உதயமாக்கும் என நடுநிலையில்லாது நாகரிகமில்லாது, நியாய உணர்வில்லாது செயல்படும் இத்தகையவர்களைப் புறக்கணிப்பதே வழியாகும்.

தவ்ஹீதின் பெயரில் தக்லீதையும், தனிநபர் வழிபாட்டையும் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழு குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அன்புடன்,
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர், உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்

நன்றி

இலங்கையில் உடனே போர் நிறுத்தம் தேவை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும் டெல்லி செய்தி நிறுவனத்திற்கு. K.M.K.பேட்டி


இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தப்படவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., டெல்லியிலுள்ள ஏசியன் டிரிபியூன் என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.


பேட்டியில் பேராசிரியர் கே.எம்.கே கூறியிருப்பதாவது:இலங்கையில் மிகப்பெரிய மனித இன படுகொலையை தடுக்க உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.


அதற்காக விடுதலைப்புலிகள் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஆயுதங்களை கைவிட்டுவிட்டு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும்.இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.


விடுதலைப் புலிகள் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்.


போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றும் மனித நேயத்துடன் இலங்கை அரசு செயல்பட வேண்டும்.இலங்கையில் வடக்கு மாகாணத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்பாக விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் அகதிகள் முகாமிலிருந்து வெளியேற்றி சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும்.


இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்னவென்றால் உடனடியாக அங்கே போர்நிறுத்தம் நடைபெறவேண்டும் என்பதுதான்.


ஏதோ போர் நிறுத்தத்திற்காக இதை நாங்கள் வலியுறுத்தவில்லை. போர்க்களத்தில் அப்பாவி பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றவே இலங்கை அரசை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் போர்க்களத்தில் சிக்கிக்கொண்டு குண்டடிப்பட்டு இறக்கிறார்கள்.


விடுதலைப் புலிகள் இந்த இனப் படுகொலை குறித்து கொஞ்சம்கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. இரு தரப்பாரும் அப்பாவி பொதுமக்களை தவிர்த்துவிட்டு அவர்கள் போர் நடத்த முடியுமானால் நடத்தட்டும்.


பயங்கரவாதிகளை மட்டும் தனிமைப்படுத்திட முடியுமானால் இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை தொடரலாம் அப்படி என்றால் அது நல்லது.ஆனால், விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி அவர்கள் தலையின் மேலே துப்பாக்கிகளை வைத்து போரில் ஈடுபடும்பொழுது தீவிரவாதிகளை தனிமைப்படுத்தி போர்நடத்த முடியாது.மேற்கண்டவாறு பேராசிரியர் கே.எம்.கே. கூறினார்.


அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:


கே. இலங்கையில் அதி கரித்துவரும் மனித படுகொலை குறித்து உங்கள் கருத்து எனன?


ப. இலங்கையில் என்ன நடக்கிறது என்று பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் கொள்கை என்ன வென்றால் விடுதலைப் புலி கள் ஆயுதங்களைகை விட்டுவிட்டு சரணடைய வேண்டும் அதே நேரத்தில் இலங்கை அரசு உடன டியாக போரை நிறுத்திவிட்டு சமரச பேச்சில் ஈடுபடவேண்டும் என்பதுதான்.


கே. பயங்கரவாதிகளுடன் ஏன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்?


ப. இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன்தான் போர் நடத்துகிறது. ஆனால், அப்பாவி மக்களும் தமிழர்களும் கொல்லப்படுகிறார்கள். இரு தரப்பிலும் வீசும் குண்டுகள் இவர்கள் மீது விழுகின்றன.


ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர்களெல்லாம் இரு தரப்பினரிடையே மாட்டிக்கொண்டு மாய்பவர்கள்தான். அது போக விடுதலைப் புலியினர் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி போர் புரிகிறார்கள்.


எனவேதான் போர் நிறுத்தம் வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதை பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்து கொள்கிறோம். கள நிலவரம் புரியவில்லை. மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்.


போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச் சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.அவர்களுடைய பிரச்சினைகள், உரிமைகள் அரசியல் ரீதியாகவும், அரசியல் சட்டத்திற்கும் உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.


இதைத்தான் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்காமல் அமைதியாக தீர்க்க வேண்டும்.


அப்படி மேற்கொள்ளும் தீர்வானது இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டும் அங்கே உள்ள சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களும், முஸ்லிம்களும் சம உரிமை பெற்று வாழும் வரையிலும் அமையப்பட வேண்டும்.


அனைத்து தரப்பினருக்கும் சம சீராக உரிமைகள் வழங்கப்படும் என்பது மத்திய அரசின் கொள்கை.


கே. இலங்கை பிரச்சினை குறித்தும் விடுதலைப் புலிகள் பிரச்சினை குறித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?


ப. இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக் கிறோம். அதே நேரத்தில் வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் இடப்பெயர்வுக்கு உட்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது நிலைப்பாடாக கொண்டுள்ளது.


கே. கடந்த 19 ஆண்டுகளாக ஏறத்தாழ 1 லட்சம் முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனவே?.


ப. ஆமாம் அவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்.


கே. யாரால் தீர்க்கப்பட வேண்டும்?


ப. இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தீர்க்கப்பட வேண்டும்.


தற்போது விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான நிலப்பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றிவிட்டதால் முஸ்லிம்களை அகதிகள் முகாம்களிலிருந்து வெளிக் கொண்டு வந்து அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்.


கே. தமிழகத்தில் பெரும் பாலான கட்சிகள் விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த கட்சிகளுடன் உங்களுடைய தொடர்பு குறித்தும், உங்கள் நிலை பாடு குறித்தும் சொல்லுங்கள்?


ப. ஆமாம் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்கவில்லை விடுதலைப் புலிகளால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளும் மோதல்களும் அந்த நாட்டின் உள் விவகாரம் ஆகும்.


இந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடும் ஒன்றுபோல் இருப்பதை கவனிக்க வேண்டும்.


இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை பொறுத்தவரை அவர்கள் பிரச்சினையை இலங்கை அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும்.


கே. அதாவது விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்கிறீர்களா?


ப. ஆமாம். அது சர்வதேச அளவில் தெரிந்தது. இந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கை மூலம் நிரந்த தீர்வை ஏற்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறுகின்றேன்.ராணுவ நடவடிக்கை இன்றோ நாளையோ வெற்றி பெறுவதாக தெரியலாம். ஆனால் நாளை மறுநாள் கொரில்லா போர் மூளலாம். மனித குண்டு வெடிப்புகள் நிகழலாம். மீண்டும் பிரச்சினைகள் தொடரும். எனவே, இலங்கையின் அரசும் இலங்கை அதிபரும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு அரசியல் தீர்வுதான் சரியான பதிலாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


கே. சமீபத்தில் மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பேட்டிகளில் இருந்து போர்க்களத்தில் இருந்து தப்பிவரும் பொதுமக்கள் மனநிலை வெளிப் பட்டுள்ளது அவர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளிருந்து விடுதலைப் புலிகள் சுடுவதாகவும் எனவே, வேறு வழியின்றி இலங்கை ராணுவம் திருப்பி சுடுவதாகவும் சொல்லியிருக்கிறார்களே ஆனால் இலங்கை ராணுவம் பொது மக்களை நோக்கி சுடுவதை மறுத்திருக்கிறார்களே இதில் விடுதலைப்புலிகளின் பிரச்சார தந்திரம் இருக்கிறதா?


ப. பொதுமக்கள் பலியாகவில்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதே.இவ்வாறு பேராசிரியர் கே.எம்.கே.காதர் மொகிதீன் பேட்டியளித்துள்ளார்.

Friday, February 27, 2009

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனே நிறைவேற்றி தாருங்கள் முதல்வர் கலைஞருக்கு பேராசிரியர்வேண்டுகோள்


சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனடி யாக செய்து தரும்படியும், பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு அரசு ஊதியத்தை வழங்கி உதவும்படியும் முதல் வர் கலைஞரிடம் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வோம். என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தெரிவித் தார்.


சென்னை புதுக் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மன்றம் துவக்க விழா இன்று (வெள்ளி) நடை பெற்றது.


இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவரு மான பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு வர லாற்று ஆய்வு மன்றத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார்.


அப்போது அவர் குறிப் பிட்டதாவது:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு அளித்த கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் அனை வருக்கும் முதற் கண் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.


இங்கு வரவேற்புரை யாற்றுகையில் கல்லூரியின் தேவைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக கல்லூரி ஆசிரி யர் நியமன பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்கள்.


இன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்களை முஸ் லிம் லீக் சார்பில் சந்திக்க உள்ளோம். அப்போது இந்த பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் நல்ல முடிவு கான வலியுறுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ற சரியான ஊதியங்களை பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியமாக இருக்கின்றன.


பல்கலைக் கழகங்கள் குறிப்பாக சென்னைப் பல் கலைக் கழகம் இந்த விஷயத்தில் இடையூறு அளிக்கும் வகையில் செயல் பட்டு வருவது நமது கவ னத்திற்கு வந்துள்ளன.


அவை விரைவில் சரி செய்யப்பட முதல்வரிட மும் அரசிடமும் வலியுறுத் துவோம்.
ஏற்கெனவே, இது போன்ற பிரச்சினை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூ ரிக்கு ஏற்பட்டது. அதனை கல்லூரி சார்பில் நாம் எதிர் கொண்டு வெற்றி பெற் றோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


நேற்று முன்தினம் பாரா ளுமன்றத்திலே சிறுபான் மையினர் கல்வி திருத்த மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. நான் காண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட இருந்த இந்த மசோதாவில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றையெல் லாம் நாம் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தொ டர்ந்து வலியுறுத்தி வந் தோம்.


இப்போழுது மத்திய அரசு அந்த தவறுகளை குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மசோ தாவை தாக்கல் செய்துள் ளது.


சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இத் துனை காலமும் இருந்து வந்தது.


மாநில அரசுகள் அவ் வளவு எளிதாக என்.ஓ.சி., கொடுப்பது கிடையாது. இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இப் போழுது தாக்கல் செய்யப் பட்டுள்ள புதிய மசோதா வில் சிறுபான்மையினர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே கல்வி நிலையங்களை துவங்கி நடத்திட வலிவகை செய் யப் பட்டுள்ளது என்பதை யும் இந்த நேரத்தில் குறிப் பிட விரும்புகின்றனர்.


இப்பொழுதுள்ள நமது தமிழக அரசானாலும், மத் திய அரசானாலும் இரண்டு அரசுகளுமே சிறு பான்மையினர் நலனை அக் கரை கொண்டு அவர்க ளின் உணர்வுகளை மதித்து நடக்கின்றன.


இத்தகைய நல்லாட் சியில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் ஆசி ரியர் நியமனங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும் பொழுது குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியில் புதுக் கல்லூரி முதல்வர் டாக்டர் அல்தாப் தலைமை தாங் கினார், பேராசிரியர் ஜப ருல்லா கான் வரவேற்புரை யாற்றினார். துணை முதல் வர் நயீமுர் ரஹ்மான், பேராசிரியர் முஹம்மது மன்சூர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிஜா முத்தீன், டாக்டர் சே.மு.மு. முஹம்ம தலி, பேராசிரியர் நத்தர் ஷா, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் அபூபக்கர், மாநில செய லாளர் கமுதி பஷீர், தென் சென்னை மாவட்ட தலை வர் இஸ்மத் பாட்சா, செயலாளர் ப+வை முஸ் தபா, ஒருங்கினைப்பாளர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், ஆலம் கான், கவிஞர் ஷேக் மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை - பழனிபாபா

ஆஸ்கார்......

ஆஸ்கார்......





வந்தது ஆஸ்கார்...
உலகமே வந்ததோ உள்ளே?
அலறுகிறது தொலைகாட்சிகள்!
புல்லரிக்கிறது ஊடகங்கள்!

அருகிலேயே கொத்து கொத்தாய்
விழுகின்றன தமிழனின் பிணங்கள்!
கேட்பார் யாரோ?
கேட்டவன் யாரோ?

பிணத்தின் மீது ஆனந்திக்கும்
ஆஸ்கார் யாருக்கு வேண்டும்?
கொடுங்கள் ஒரு ஆஸ்கார்
இலங்கை அதிபருக்கும்!

- மயிலை கவியப்பா!

இந்தியா இஸ்லாமிய நாடா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பு அமைப்புகளான விஷ்வ இந்து பரிசத் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பினர் தர்ம ரக்ஷ மன்ச் என்ற பெயரில் கூட்டமைப்பு ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்திய நாடு இஸ்லாமியர்களின் நாடல்ல, இந்தியா இஸ்லாத்திற்கு எதிரான நாடு மல்ல, இந்தியா சமாதானத்திற்கான நாடு என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பத்வா வெளியிட வேண்டுமென அந்த இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


1924ம் ஆண்டிலேயே வெள்ளையர் ஆட்சியின்போதே முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இந்தியா சமாதானத்திற்கான நாடு என்பதை வலியுறுத்தி பத்வா கொடுத்துள்ளனர்.


இந்த உலகம் மூன்று பிரிவாக உள்ளது. ஒன்று தாருல் இஸ்லாம். அதாவது இஸ்லாமிய நாடு.


இன்னொன்று தாருல் ஹர்பு. இஸ்லாத்திற்கு எதிரான நாடு.
மூன்றாவது தாருல் அமான். நடுநிலையான சமாதானமான நாடு. இந்த நாட்டில் இருக்கக் கூடியவர்கள் வேதங்களை பின் பற்றுகின்றவர்கள்.


1924-ல் மார்க்கத் தீர்ப்பளித்த இஸ்லாமிய அறிஞர்கள் இந்தியாவை தாருல் அமான் - சமாதானமான நாடு என்று மார்க்க தீர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்கள் புதிதாக ஃபத்வா கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய தேச பற்றில் முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே முன்னணியிலே இருந்து வருகிறது. அது என்றும் தொடரும்.


தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இராமர் கோவிலை கட்டுவோம் என பாரதீய ஜனதா கட்சி செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் பாபரி மஜ்ஜித் இருந்த இடத்தில்தான் இராமர் கோவில் கட்டுவோம் என்பதை முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து சமுதாய மும் ஏற்றுக்கொள்ளாது.


பள்ளிவாசல் திருமண பதிவை ஏற்க வேண்டும்
திருமணங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவல கங்களில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என அண்மையில் உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.


முஸ்லிம்களை பொறுத்தவரை ஒவ்வொரு திருமணமும் பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் முறைப்படி சாட்சியங்களோடு பதிவு செய்யப்படுகின்றன. இந்த பதிவே போதுமானது. இது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பதிவிற்கு இணையானது.

ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள இது தொடரப்பட வேண்டும். இவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நல்ல தல்ல.


இந்த திருமணப் பதிவேடுகளுக்கு அத்தாட்சி வழங்குகின்ற அதிகாரம் பெற்றவர்களாக காஜிகள் உள்ளனர்.


தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களுக்கு காஜிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ள மாவட்டங்களுக்கும் காஜிகள் நியமிக்கப்பட வேண்டும்.


இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லால்பேட்டை இணையதளம்

Thursday, February 26, 2009

நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்
.
.
பைபிளின் மீது முஸ்லிம்களால் வைக்கப்படும் எண்ணிலடங்கா முரண்பாடுளுக்கும் - குழப்பங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு எப்படியேனும் குர்ஆனின் மீது குற்றம் சுமத்தியாகவேண்டும் அதில் எப்படியாவது முரண்பாடுகளைக் கண்டுபிடித்து அவர்களை திணரடித்துவிட (?) வேண்டும் என்ற நோக்கத்துடன் சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷினரிகளால் குர்ஆனில் முரண்பாடு என்று தங்கள் தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. அதில் நோவா (நூஹ் நபி) சம்பந்தப்பட்ட பதிவை உமர் என்ற கிறிஸ்தவர் 'குர்ஆன் முரண்பாடுகள் - நோவாவின் வயது' என்ற தலைப்பில் ஆங்கிலத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருந்தார். அதாவது குர்ஆன் நோவாவின் வயதை சொல்வதில் முரண்படுகின்றதாம்.

இவர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்த - பலவீனமான விமர்சனங்களை குர்ஆனின் மீதும் இஸ்லாத்தின் மீதும் வைக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஒன்றே சரியான சான்று. அவர்கள் கண்டுபிடித்துள்ள அதிபாயங்கரமான - இடியாப்ப சிக்கல் நிறைந்த (?) முரண்பாட்டை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

Quote:

பைபிளிலும் மற்றும் குர்ஆனிலும் சொல்லப்பட்ட நோவாவின் கதையை ஒருவர் படித்தால், கீழ் கண்ட விவரங்களை அவர் காண வேண்டி வரும்.

ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.

சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது

நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது

வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள 'அவர்கள் மத்தியில்' என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள 'அவருடைய சமூகத்தாரிடம்' என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.

என்ன அபாரமான கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எப்படி அலசி ஆராய்ந்து முரண்பாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதை பார்த்தீர்களா? குர்ஆனில் 29:14ம் வசனத்தில் முரண்பாடாம். எங்கே முரண்பாடு வருகின்றது? இந்த வசனத்திற்கு எதிரான - முரண்பட்ட குர்ஆன் வசனம் எது? ஒன்றுமே கிடையாது. 'காமாலைக் கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சல்' என்பது போல, குர்ஆனில் எங்கேயாவது முரண்பாடு கிடைக்குமா? என்று தேடியவருக்கு இந்த வசனம் முரண்பாடாக தெரிந்துவிட்டது போலும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மேலும் திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;. ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்துகின்றான். ஒன்று நூஹ் (அலை) அவர்களின் மொத்த வயது. மற்றொன்று அவர்கள் காலத்தில் நடந்த பெரு வெள்ளம்.
.
.

Wednesday, February 25, 2009

வன்முறை வேண்டாம்! மீலாதை நடத்துபவர்களும் நம்முடைய சகோதர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே, நாம் அனைவர் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இஸ்லாமிய மார்க்கம் வரையறுக்கப்பட்ட மார்க்கமாகும். இதில் ‘லாயிலாஹா இல்லாஹ் முஹம்மதுர் ரசூல்லாஹ்” என்ற திருக்கலிமாவை மொழிந்தவர்கள் முஸ்லிம்கள். அல்லாஹ்வை இலாஹ்வாகவும்,நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும் ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லீம்கள் எனில்- மூமீன்கள் என்பவர்கள் யார்? என்பதை சமுதாய மக்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்வை இலாஹ்வாகவும் , நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும் ஏற்றுக் கொண்டு இறைவன் முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ள கடமைகளை நிறைவேற்றி உலகத்தில் தோன்றிய நபிமார்களை நபிமார்கள் என்றும் இறைவன் எந்த ரசூலை ரசூலாக பறைசாற்றினானோ அந்த நாயகத்தின் மீது பிரியம் வைப்பது ஒவ்வொரு முஸ்லீம்களின் மீதும் கடமை என்பதை நடுமை நிலைக் கொண்ட பகுத்தறிவிற்கு சொந்தக்காரர்களாய் வாழும் உலக முஸ்லீம்கள், மூமின்கள் யாராலும் மறுக்கமுடியாது.இறைவன் தனது திருமறையாம் திருக்குர்ஆனில் இறைவனும் அவனது மலக்குமார்களும் ரசூல் (ஸல்) மீது ஸலவாத்து சொல்வாதாக மார்க்கத்தின் கண்மனிகள் வாயிலாக நாம் அறிய தெரிகின்றோம். இவ்வறாக கண்மனி நாயகத்தை இறைவன் கண்ணியப்படுத்தயிருக்க, நாயகத்தை இறைதூதராக ஏற்றுக்கொள்வோம் ஆனால் நாயகத்தின் மீது பிரியம் வைப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று வாதிப்பவர்களும் சிலர் உலா வருகின்றனர். இவர்கள் நேற்று பெய்த மழையில் இன்று முனைத்த காளன்களைப் போன்றவர்கள். தங்களை மார்க்க மேதைகள் என்றும் தவ்ஹிதிற்கு சொநத்காரர்கள் என்றும் தன்னையே தாங்கள் புகழாரம் சூட்டிக்கொள்கின்றனர். நபி பிறந்த நாளை மீலாது என்று கொண்டாடி வந்த (அல்லது) நாயகம் பிறந்த நாளை மீலாது என்பதை பறைசாற்றுகின்ற மக்களைப் பார்த்து யுதனின் கைகூலிகள் தங்களை தவ்ஹித் வாதிகள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் , வயிற்றை வளர்க்க இயக்கத்தை தோற்றுவித்தவர்களுக்கு கொடிப்பிடித்துக் கொண்டீருக்கின்றவர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


நாயகத்தை கண்ணயப்படுத்தாமல் நீங்கள் எவ்வாறு மறுமையில் கண்ணியப்படுப்படுவீர்கள். நாயகத்தின் மீது ஸலவாத்து கூறாமல் எவ்வாறு நீங்கள் வெற்றியடைவீர்கள் அன்பிற்கினிய தமிழக சகோதரர்களே மீலாது நபி (ஸல்) கொண்டாடுவதினால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? அல்லது மீலாது கொண்டாடுவது பித்அத் என்று சாதாரணமாக விவாதிக்க முன் வருகிறீர்களா? என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது நீங்கள் நடுநிலையாளாய் இருக்க பழக்கப்படவில்லை.


மீலாது கொண்டாடுவதினால் என்ன பயன் என்றுக் கேட்கிறீர்களா? மீலாது என்ற வார்த்தைக்கு பிறப்பு என்று பொருள். நபி பிறந்த நாளை மீலாது என்று தமிழகத்தில் கொண்டாடி வருகின்றனர். சில ஊர்களில் மீலாது மேடைகள் அமைத்து நபிகள் நாயகத்தின் சிறப்புகள் பற்றி பேசப்படுகின்றது .இதனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் அவர்கள் நமக்கு சொன்ன உபதேசங்களைப்பற்றியும் அறிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. ஸவவாத்து சொல்லும் வாய்ப்பும் ஏற்படுபகின்றது. மேலும் சில ஊர்களில் மதரஸா சிறார்களுக்கு நபிகளாரைப் பற்றிய தலைப்புகளில் கட்டுரைப்போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கிராத் போட்டிகள் நடத்துகின்றனர். இவ்வாறு செய்வதினால் சிறார்களின் உள்ளத்தில் நபிகள் நயாகத்தை பற்றிய உணர்வு, பிரியம் அதிகமாகுவது மட்டுமல்லாமல் நாமும் நபிகளாரின் வாழ்க்கையை முழமையாக அறிந்து கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.

மீலாது என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயல்பாடுகள் நடைபெறுமாயின் அவை கண்டிக்கத்தக்கவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. உடன்பாடில்லாத சகோதர்கள் தயவு செய்து நடுநிலையைப் பேணி கொள்ளுங்கள்.

அதை விடுத்து வன்முறையில் ஈடுபடாதீர்கள. மீலாதை நடத்துபவர்களும் நம்முடைய சகோதர்கள் என்பதை உணருங்கள். அல்லாஹ் நாம் அனைவருக்கும் நற்கிருபை செய்வனாக! சத்தியத்தை சத்தயமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் விளங்கி கொள்ள இறைவன் கிருபை செய்வனாக! தமிழக முஸலீம் சமுதாயத்தை ஒற்றுமையாக வாழச் செய்வானாக!

இது jalhira@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக வந்தது.

Tuesday, February 24, 2009

முஸ்லிம்களின் தேசிய அரசியல் மாநாடு



குறிப்பு: இந்த மாநாட்டில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்பதீன் ஐபக் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது.

மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்” என்ற தலைப்பில் நடந்தது.

தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார்.

"உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும்.

அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம்.

15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.

இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

"இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

நன்றி : சத்தியமார்க்கம்

ஷைத்தான் உள்ளத்தை ஊடுருவும் பாதைகளும் அதற்கான நிவாரணங்களும்

அன்பின் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உறுப்புகளால் அழகானவர்கள்...,
உடுப்புகளால் நிறைவானவர்கள்...
இந்த மண்ணிலே மலர்தூவி கௌரவிக்கப்பட்டவர்கள்!..

ஆனால்...
உள்ளத்தில் உயிர் இல்லையென்றால்.. சுவனத்தின் காற்றை சுவாசிக்க முடியாது..!
ஒரு நாவு பொய்யை பேசலாம்... ஆனால்
அந்த அசுத்தம் உள்ளத்தில் இருந்துதான் வருகிறது..!
விழிகளின் விபாச்சாரம்.. அந்த உள் கிணற்றில் இருந்துதான் ஊட்றெடுக்கிறது...!
ஒரு தேசமே அழிந்திருக்கலாம்! ஒரு உள்ளம் தான் காரணமாக இருக்கலாம்!
பாறைகளை விட.. இறுக்கமான கல்லாய் .. இன்று உள்ளங்கள் மாறிவருகின்றன..

எங்கள் இதயங்களை கசியவிடுவோம்..
ஒரு குழந்தையைப்போல் எம்மை தூய்மைப்படுத்திக்கொள்வோம்...
இந்த இரண்டு சிறு உரைகளைக்கொண்டு ஒரு மெல்லிய இரவை நிறைவு செய்வோம்....

"ஷைத்தான் உள்ளத்தை ஊடுருவும் பாதைகளும்..
அதற்கான நிவாரணங்களும்..! "



1. http://www.jamath-circle.com/play.php?vid=513

2.
http://www.jamath-circle.com/play.php?vid=512
நன்றி : SLJI DIGITAL MEDIA LIBRARY

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் - இருக்க கூடாத பண்புகள்

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் / இருக்க கூடாத பண்புகள்
நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன்

தலைமைத்துவத்;தை பற்றி கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் "வலுக்கட்டாயமற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டு செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம்" என்று விவரிக்கிறார். மேலும் இஸ்லாமும் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

"முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்." (புகாரி, முஸ்லிம்)

"மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்" (புகாரி, முஸ்லிம்)

மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினாhர்;கள் "நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை." (ஸ{னன் அத்தாரமி)

தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.

அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)

தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்

1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. "மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்" (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் குர்ஆனின் (26:109,127,145,164,180) வசனங்கள் குறிப்பிடுவது போன்று இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.

2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து ஜாஹிலிய்யாவை அறியா ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

3. உறுதி கொண்ட நெஞ்சம் - "அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே" (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.

4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.

5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். "மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது." (5:8)

6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கல்;களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.

7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் "அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேண்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.

8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்;டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு "சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்" எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.

"முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர்" (அபூதாவூத்)

"நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்." (புகாரி)

9. சேவை மனப்பான்மை - "சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்" (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.

10. ஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். "இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்" (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)

தலைமையிடம் இருக்க கூடாத பண்புகள்

1. பதவிக்கு ஆசைப்படல் - "பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவிக்கு அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.

2. குடும்ப சொத்தாக கருதுதல் - ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது. "முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான்" (புகாரி)

3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை - புகழ் பெறவேண்டும் என்பதற்காக செருக்குடன் பிறரை புறக்கனித்து தன்னை முன்னிலைப்படுத்துபவராக தலைமை இருக்கக் கூடாது "அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்". (முஸ்லிம்)

4. பலவீனமானவர் - அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்" (முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப அப்பொறுப்புக்கேற்ற உடல் உள தகுதியுள்ளவர்களே அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.

5. சொல் வேறு, செயல் வேறு "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை ஏன் ஏவுகின்றீர்கள்" (அஸ்ஸப் 2) எனும் இறைவாக்கிற்கேற்ப தலைவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தங்களால் சாத்தியமானதை மட்டும் சொல்ல வேண்டும்.

6. ஆடம்பர வாழ்க்கை - தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தம் உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கக் கூடாது. சாம்ராஜ்யங்களிலிருந்து சிறு அமைப்புகள் வரையிலான வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். "அன்றி அவர்கள் செலவு செய்தால் அளவை கடந்து விட மாட்டார்கள் உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள் இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்" (புர்கான் 67)

7. கோழைத்தனம் - பிரச்சினைகள் ஏற்படும் போதும் தம் கீழுள்ளவர்களை தவிக்க விட்டுவிட்டு ஒளிந்து கொள்ளக் கூடியவராக தலைவர் இருக்கக் கூடாது மேலும் (8:60) ல் அல்லாஹ் சொல்கிறபடி தானும் எத்தியாகத்திற்கும் தயாராவதோடு தன் சமூகத்;தையும் தயார்படுத்த கூடியவராய் இருத்தல் வேண்டும்.

8. பொறாமை - பொறாமை தலைவரிடத்தில் இருக்க கூடாத பண்பாகும். ஏனென்றால்; அது தான் பிற தீய குணங்களான கோள் சொல்லுதல், குற்றங்களை துருவி ஆராய்தல், புறம் அனைத்திற்கும் முக்கிய காரணமாய் உள்ளது. அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் "உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில் நெருப்பு விறகை தின்பது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது" (அபூதாவூத்) என பகர்ந்தார்கள்.

மேற்கூறப்பட்டவை அடிப்படையில் ஒரு தலைமை அமையும் போது நிச்சயம் அது இஸ்லாத்தை மலரச் செய்யும் ஓர் உன்னத தலைமையாய் மிளிரும். எனவே எத்தலைமையும் அடிப்படையாக

1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், முழுவதும் அவனை சார்ந்திருத்தல்.

2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற தேவையான உள, உடல், அறிவு, ஆற்றல்கள், வலிமை.

3. கலந்தாலோசனை மூலம் முடிவெடுத்து செயல்படுதல்.

போன்ற தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டும். அத்தலைமை மஹல்லா போன்ற சிறிய பொறுப்பாயிருந்தாலும் ஆட்சி தலைமை போன்ற பெரும் பொறுப்பாயிருந்தாலும் சரியே.

நன்றி : தமிழ் இஸ்லாம்

Monday, February 23, 2009

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.


சென்னை, பிப்.23-

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

சினிமா துறையினருக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதினை இந்திய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரண்டு முறை பெறும் சாதனையை படைத் துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதுடன். தமிழக சட்டமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது

உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்சில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஸ்லம் டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சிறந்த இசைக்கான விருது மற்றும் சிறந்த பாடல் ஜெய் ஹோவிற்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆஸ்கர் விருதை பெறும் 4-வது இந்தியர் இவர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

தமிழில் நன்றி கூறினார்

ஸ்லம்டாக் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர்| விருது கிடைத் துள்ளது. விருதுகளைப் பெற்றுக்கொண்ட அவர், ஹஎல்லாப் புகழும் இறைவ னுக்கே| என்று தமிழில் கூறி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எட்டு ஆஸ்கர்

ஸ்லம்டாக் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங், பிலிம் எடிட்டிங், இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளை சேர்த்து மொத்தம் 5 ஆஸ்கர் விருது வழங்கப் பட்டுள்ளது.

மேலும் பின்னனி பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மா னுக்கு ஒரு விருதும் மற்றும் இருவருக்கு தலா ஒரு விருது உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகள் இந்தி யாவுக்கு கிடைத்துள்ளது.

ரஹ்மானுக்கு தலைவர்கள் பாராட்டு

ஹஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த மிக்சிங் சவுண்டு அமைத்த ரசல்ப+குட்டிக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோ கன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள் ளார். இந்தியாவுக்கு பெறுமை சேர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள் ளனர். சபாநாயகர் சோம் நாத் சட்டர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் கலைஞர்

முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப ப+த்து மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்திற்கே சென்று சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்துக்களை பெறுகிற சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்த செல்வம் இன்று ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதின் மூலம் தரணிவாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்று விட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப் பெரிய கீர்த்தி சிறப்பு பெருமை ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதித்துள்ள மாணிக்க மரகதகற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன். தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகக் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து - மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து-தாயாக நின்று வாழ்த்துகின்றபோது- அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது. வாழ்க ரகுமான்! ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சட்டபேரவையில் பாராட்டு

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை மாநாகராட்சி பாராட்டு

இதேபோல், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய திரைத் துறையின் கனவாக இருந்த ஆஸ்கார் விருதை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பெற்றுள்ளதற்கு சிறப்பு பாராட்டு தீர்மானத்தை வாசித்தார்.

பேராசிரியர் கே.எம்.கே. வாழ்த்து

இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்.

பெருமிதத்தில் தமிழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகமே பெருமிதத்தால் விழாக்கோலம் ப+ண்டுள்ளது. விருதினை பெற்று சென்னை திரும்பும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பும் பாராட்டு கூட்டமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

லால்பேட்டை இணையதளம்,

Thursday, February 19, 2009

பாராளுமன்ற தேர்தல்_ கருத்துக்கணிப்பு

பிரபல தொலைக்காட்சி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (CNN-IBN CSDS) இணைந்து நடத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவு முன்னோடி கணிப்பு நேற்று (17/2/09) இரவு 10 மணிக்கு CNN-IBN தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது.

நாளை பாராளுமன்ற தேர்தல் நடந்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று மக்கள் வினவப்பட்டு அதன் அடிப்படையிலான - முன்னோடி கணிப்புகள் தரப்பட்டன.

தமிழகத்தில் அ.தி.மு.க - வலுவடைந்து வருகிறதாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க தனது செல்வக்கை இழந்து விட்டதாம். .

2007ல் 67 சதவிகித வாக்களர்கள் தி.மு.க கூட்டனியின் செயபாடுகள் திருப்திகரமாக உள்ளதாக கூறியதாகவும் ஆனல் தற்போது (2009) 63 சதவிகிதத்தினரே அவ்வாறு கூறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 28 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸ் 13% வாக்குகளை பெறுமென்று கணிக்கப்பட்டிருக்கிறது..

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் 9 சதவிகித வாக்குகளை பெற்று மற்ற கட்சிகளை விட குறிப்பாக பா.ம.க (4%), இடது சாரிகள் (3%) விட முன்னனியில் உள்ளது.

அதிகமாக வாக்குகளை பெறும் என்று எதிர்ப் பார்க்கப்பட்ட ம.தி.மு.க ஒரே ஒரு சதவிகித வாக்கைத்தான் பெறுமாம். வகுப்பு வாத பா.ஜ.க வரும் தேர்தலில் தமிழகத்தில் 6 சதவிகித வாக்குகளை பெறும் என்று இந்த முன்னோடி முடிவுகள் கணித்திருப்பது - அதிர்ச்சிடனும் - துக்கத்துடனும் சற்று சிந்திக்க வைக்கிறது.

அ.தி.மு.க வுக்கு செல்வாக்கு யார் மத்தியில் உயர்ந்திருக்க்கிறது தெரியுமா?

உயர் வகுப்பினர்கள் மத்தியில் 35 சதவிகிதமும்வன்னியர்கள் மத்தியில் 33 சதவிகிதமும் நாடார்கள் மத்தியில் 17 சதவிகிதமும்பெண்கள் மத்தியில் 13 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறதாம்.

தமிழக இஸ்லாமியர் மத்தியிலும் அ.தி.மு.க வின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறதாம்.கடந்த தெர்தலில் அதிமுக வுக்கு வாக்களித்த முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட 10 சதவிகித அதிக தமிழக முஸ்லிம்கள் இந்த முறை அ.தி.மு.க வுக்கு வாக்களிப்பார்களாம்.

இயக்கமின்றி முடங்கி கிடக்கும் அமைப்புக்கள் நிறைய இருந்தும்- நிறைவில்லாமல் - புற்றீசல்களாய் புதுப்புது இயக்கங்களை தொடங்கி வரும் சுயநலமில்லாத (!) 'சமுதாயக்காவலர்களின் (?)' 'அதாபு' தாங்காமல் - தமிழக முஸ்லிம்களே சலிப்படைந்து 'அம்மாவுக்கு' வாக்களித்து விடுவோம் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது..

நன்றி
தோழமையுடன் பிறைநதிபுரத்தான்

ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை க்ஷiடி-னுயவய உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி -
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118ஃ13, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 3.
அலைபேசி, பொதுச் செயலாளர் - 9444165153

Wednesday, February 18, 2009

IDMK பிரச்சார பாடல்கள் (பாடல்கள் DOWNLOAD)

Tuesday, February 17, 2009

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)

கிறிஸ்தவ தளத்திற்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றி தான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தை மிக ஆழமாக ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் அதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களையும் எடுத்துரைத்ததன் மூலம் உலக கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த கட்டுரைகள் பல இன்றைய இஸ்லாமியப் பிரச்சாரகர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை 'கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை' என்ற தலைப்பில் சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டது.

இந்தக் கட்டுரைக்கு எப்படியேனும் பதில் அளித்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், 'உமர்' என்ற கிறிஸ்தவர் அந்தப் புத்தகத்தின் கருத்துக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத, ஒரு கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்து மொழிபெயர்த்து 'அஹமத் தீதாத்திற்கு பதில்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். ஒரு கட்டுரைக்கு 'பதில்' என்று போடுவதற்கு முன் அந்தக் கட்டுரைக்கும் அந்த பதிலுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? அது சரியானது தானா? அந்த பதில் பொருத்தமான பதில் தானா? என்பதை சற்று படித்துப்பார்ப்பது தான் ஒரு மொழி பெயர்ப்பளருக்கு அழகு. அது அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களை எப்படியாவது திருப்தி படுத்தியாக வேண்டும் என்பதற்காக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள நோவா, லோத்து, இயேசு போன்றோர் அருந்தியதாகச் சொல்லப்படும்) திராட்சைரசத்தை (WINE) அருந்தி விட்டு போதை மயக்கத்தில் மொழி பெயர்ப்பது அறிவுடமையாகாது என்பதை சம்பந்தப்பட்ட கிறிஸ்தவருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவர் பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ள கட்டுரை எந்த அளவுக்கு அபத்தமானது, முரண்பாடனது - குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்.

இயேவிடம் ஒரு அடையாளத்தைத் தாரும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் - மத்தேயு 12:39

அஹமத் தீதாத் அவர்கள் தனது புத்தகத்தில், மேற்சொல்லப்பட்டுள்ள இயேசுவின் கருத்தை மிக ஆழமாக ஆராய்ந்து உண்மையில் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் இந்தக் கூற்றுப்படி அவர் மரித்திருக்கவே முடியாது என்பதுடன் 3 இரவு 3 பகல் என்ற கணக்கும் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என்பதை மிகத் தெளிவாக தனது புத்தகத்தில் நிரூபிக்கின்றார்கள். ஆனால் அதை நியாயமான பார்வையுடன் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் எப்படியாவது இதை மறுத்தாக வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் பதில் எழுதத் துணிந்த அந்த கிறிஸ்தவர் தனக்குத் தானே முன்னுக்குப் பின் முரணாக முரண்பட்டு எழுதுகின்றார் :


பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள், பணியாளர்களுக்கு நல வாரியம் நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவிபப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

உலமாக்கள், பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற சமுதாயத்தின் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி வந்தது.

கடந்த 1ம் தேதி சென்னை கலைவானர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் இது பிரதான தீர்மானமாக இடம்பெற்றிருந்தது.

இம்மாநாட்டில் பங்கேற்று நிறைவுறையாற்றிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் உணர்வோடும் உரிமையோடும் இத்தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றி தருவார் அதற்கு நான் துணை நிற்பேன் என உறுதியளித்தார்.

இன்று தமிழக சட்டப் பேரவையில் 2009-10ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்தபோது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை முஸ்லிம் களுக்காக குறிப்பிடப்பட் டுள்ள விவரங்கள் வருமாறு:

சிறுபான்மையினர் நலன்

சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதோடு, சிறுபான்மையினர் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்துவதற்காக, சிறுபாமையினருக்கான தனி இயக்குநரகம் ஒன்றையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையின இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டத்தின் கீழ் சுமார் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும்.

மேலும், மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு பேராசிரியர் க. அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி தெரிவித்துள்ளது.
.

Monday, February 16, 2009

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அபாண்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகடாக்டர் ராமதாஸ் அபாண்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.

ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.

அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
- காயல் மகபூப்.
மாநில செயலாளர்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ம.நே.ம.க வின் முதல் மனித நேயம்??? முஸ்லிம்கள் மீது தாக்குதல்

இந்த செய்தி தொடர்பாக நிறைய மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வருவதால் இந்த தகவல் இங்கு பதியப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களும், நம்பகத்தன்மையும் அறிய விரும்புபவர்கள் சுன்னத் ஜமாத் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை அவரது தொலைபேசி என் : 9841037856 அல்லது 9940320789 என்ற என்களில் தொடர்பு கொள்ளலாம்.

தமுமுக வின் மனித நேயம்??

தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை காவல் நிலையம் வரை எடுத்துச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் வேலைகளில் புகழ்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தற்போது மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" எனற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியினை நிறுவியுள்ளார்கள். இந்த அமைப்பு தமுமுக வின் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு அரசியல் சாயம் பூசி மூடி மறைக்க பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் கட்சியாகவே ஆரம்பிக்கப்ட்டுள்ளது தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் மனித நேயம்??

மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் பரினாம வளர்ச்சி அடைந்த சமுதாயக் காவலர்கள் என தம்பட்டம் அடிக்கும் தமுமுக கட்டப்பஞ்சாயத்து குண்டர்கள் சமுதாயத்தை மீண்டும் படுகுழியி்ல் தள்ளி முஸ்லிம்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கி வயிரு வளர்க்கும் துரோகிகளே என்பதற்கு சமீபத்தில் அம்பத்தூரில் நடந்த இந்நிகழ்வே சாட்சி.

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களால் காயம்பட்ட முகம்மது சித்திக்

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான முகம்மது சித்திக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 21, 2008 அன்று மதுரை, மேலூரை சேர்ந்த ரினோசா பரக்கத் என்ற பென்னை திருமனம் செய்தார். எவ்வித வரதட்சினையோ , கொடுக்கல் வாங்கல்களோ இல்லாமல் நட்நத இத்திருமனம் மேலூர் பெரிய பள்ளி ஜமாத் நிர்வாகிகளால் நடத்தி வைக்கப்பட்டது.

தமுமுக குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் முகம்மது ரபீக்

ஆனால் மனமகனுக்கும், மனமகளுக்கும் ஏற்ப்பட்ட சில மனக்கசப்புக்களால் மனப்பென் சமீப காலமாக தனது தாயர் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நேற்று (15-02-2009) இந்த மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் சிலர் அதன் பிரமுகரான மேடவாக்கம் சிராஜ் என்பவர் தலைமையில் TN 22 BX 6085 (டாடா சுமோ , மெட்டாலிக் கிரே கலர்) மற்றும் TN 07 M 2979 (குவாலிஸ் - மெருன் கலர்) கார்களில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை கார்களில் கட்டிக் கொண்டு திடீரென இன்ஜினியர் முகம்மது சித்திக்கின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர்.

மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்


முகம்மது சித்திக்கின் வயதான தாய் தந்தையரும் இத்தாக்குதலில் தப்பவில்லை, முகம்மது சித்திக்கின் பெற்றோர் காதர் முகைதீன், மற்றும் சகர் பானு ஆகிய இருவரையும் அடித்து உதைத்தனர் அதை தடுக்க வந்த முகம்மது சித்திக்கையும் அவரது தம்பி முகம்மது ரபீக்கையும் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் கூடவே உடனடியாக மேலே கூறப்பட்ட மனித நேய மக்கள் கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்களில் ஏறி இந்த குண்டர்கள் தப்பி விட்டனர்.

தற்சமயம் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் இவர்களிடம் தொலைபேசி வாயிலாக தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மேடவாக்கம் சிராஜ் என்பவனும் தமுமுக வின் ஒரு முக்கிய புள்ளியும் உன் மீதும் உன் அப்பன், ஆத்தா மீதும் நாங்கள் வரதட்சினை கொடுமை படுத்தி பென்னை சித்திரவதை செய்ததாக புகார் கொடுக்க போகின்றோம். நாங்கள் அரசாங்க கூட்டனியில் உள்ளோம், எங்கள் தலைவர் ஹைதர் அலிதான் வக்பு வாரியத் தலைவர், நாங்கள் கூறினால் கலைஞர், முதல் ஸ்டாலின் வரை கால்களில் விழுவார்கள் உங்கள் குடும்பத்தினை ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார்கள்.

ஆரம்பித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் தனது முதல் மனித நேயப் பனியினை செய்த மனித நேய மக்கள் கட்சியின் குன்டர்கள் முஸ்லிம்கள் என்று கூட பாராது மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துக் கொன்டு வண்முறையில் இரங்கி தமுமுக வின் மனித நேயத்தை நிறுபித்துள்ளனர். தமிழகம் எங்கும் இதுபோலவே குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து பன்னி முஸ்லிம் குடும்பங்களையே பிரித்து சமுதாயத்தை கூறு போட்டுக் கொண்டுள்ளனர். தற்சமயம் அரசியலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இன்னுமு் வீரியமாக தங்களின் குண்டர் படையினை வைத்து இது போன்ற முஸ்லிம்களை தாக்கும் மனித நேயப் பணியினை மகத்தாக செய்து வருகின்றார்கள்.

ஜனாப் மேலை நாசர் அவர்கள்

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் தொலைபேசி மிரட்டல்களால் பயந்து போன இக்குடும்பத்தினர் உடனடியாக சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின் அலுவலக்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைத்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளையும் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் அராஜகப் போக்கினை எடுத்துக் கூறி இவர்கள் ஆரம்பி்த்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் முதல்வர், ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை தவறாக பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் போக்கினை விளக்கி கூறி உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுன்னத் ஜமாத்தினர் சென்னையில் மாபெரும் போராட்டத்தினை அரசிற்கு எதிராகவும் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ரவுடிகளுக்கு எதிராகவும் மக்களை திரட்டி நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெறிவித்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே தமுமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்று தமிழகமெங்கும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்தப் பெயரை மாற்றுவதற்காக மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியலுக்கு வந்த தமுமகவினர் முஸ்லிம்களை காப்பற்றுவோம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூச்சலுடன் வந்தனர் ஆனால் தமுமுக பெயரில் மேம்போக்காக கட்டப்பஞ்சாயத்தக்களை செய்து வந்த இவர்கள் தற்சமயம் மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் ஆராவரத்துடன் முஸ்லிம்களை தாக்கி , சமுதாயத்தை கூறு போடம் பனியினை செய்து வருகின்றார்கள். இதற்கு தங்கள் அரசியல் பலத்தினையும் முதல்வர், ஸ்டாலின் போன்றவர்களின் பெயர்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இன்னும் மேலதிகமாக போய் பொதுவாக இருக்க வேண்டிய வக்ஃபு வாரியத் தலைவரையும் அவரது அதிகாரத்தையும் இவர்கள் பயன்படுத்தி தமிழகமெங்கும் கட்டப் பஞ்சாயத்துக்களிலும் ரவுடித் தனங்கிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் சமுதாய துரோகிகள் என்பதை இந்த சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இவர்களை கூட வைத்து கொண்ருக்கும் முதல்வர்கள் அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினரை உங்கள் கூட்டனியில் வைத்திருந்தால் தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒரு ஓட்டை கூட பெற முடியாது என்று உங்களிடம் கூறிக் கொள்கின்றோம்.

அட்டைக் கருப்பாக இருக்கும் ஒருவனுக்கு வெள்ளையன் என்று பெயர் இருக்கும், நோயளியாக இருக்கும் ஒருவனுக்கு ஆரோக்கியம் என்று பெயர் வைத்திருப்பார்கள் அது போல மனித நேயமே அற்ற குண்டர்களை வைத்து நடத்தப்படும் ஒரு கட்சிக்கு மனித நேய மக்கள் கட்சி என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்கள் மனித நேயம் அற்றவர்கள் என்பது இந்த சம்பவத்தில் நிறுபிக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சி கொடி கட்டிய கார்களில் வந்து வீடு புகுந்து முஸ்லிம் குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமக குண்டர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகம் எங்கும் முதல்வரின் பெயரையும், ஸ்டாலின் அவர்களின் பெயரையும், வக்பு வாரியத் தலைவர் பதவி அதிகாரதையும் தவறாக பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்துக்களை செய்து வரும் தமுமுக மனித நேய மக்கள் கட்சி குண்டர்களை தமிழக முதல்வர் எச்சரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டக் கொள்கின்றேன் என்றார்.

செய்தி ஆக்கம் : திரு. மேலை நாசர் அவர்கள் 9841037856 / 9940320789

Sunday, February 15, 2009

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சோனியாகாந்தியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல்லியில் ஆலோசனை

புதுடெல்லி, பிப்.15-

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற உள்ள சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர்சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அண்மையில் நடைபெறவிருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள் ளன.

தேசிய அளவில் புதிய எழுச்சி பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்தியாவிலும் பல தொகுதிகளில் போட்டியிடுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன் முயற்சியாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அளவிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரதிநிதிகள் மாநாடு நடத் தப்பட்டு தேர்தல் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தோழமை நிலைப்பாடு மற்றும் வடஇந்திய மாநி லங்களில் போட்டியிடு கின்ற சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இன்று காலை புதுடெல்லியில் உள்ள தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமதுவின் இல்லத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் குர்ரம் ஹனீஸ் உமர், உ.பி. மாநிலத் தலைவர் மவ்லானா கவுஸர் ஹயாத்கான், உ.பி. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மத்தீன்,
உ.பி. மாநிலச் செயலாளர்கள் நிஸார் மஹமூத், சௌத்ரி ரஸீயுதீன், இன்ஜினியர் அலி ஆரீப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்
தி..மு.க. கூட்டணி...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் வகையில்- அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாநாடுகளை நடத்தி வருகிறது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைக்ப்பட்டுள்ள கூட் டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் வாக்குகளை ஒருமுகப் படுத்தும் நிகழ்ச்சியாக பல்வேறு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சோனியாகாந்தியுடன்
முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு
இதனிடையே நேற்றைய முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்துள்ளனர்.
இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எமது டெல்லி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Saturday, February 14, 2009

நபிகள் படத்திறப்பு விழா தடை செய்யப்பட்டது - IDMK நடவடிக்கை வெற்றி

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அமைப்பின் மூலம் பரமக்குடியில் ஐம்பெரும் விழாவில் நபிகள் நாயகம் படம் திறப்பு என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியேர் உட்னடியாக நடவடிக்கையில் இறங்கி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வேலன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிர்லோஸ்குமார், இராமநாதபுரம் எம்.எல்.ஏ மற்றும் பல அதிகாரிகளை சந்தித்தும் மனு கொடுத்தும் இந்நிகழச்சியினை தடை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுருததினார்கள்.

இதன் எதிரொலியாக உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வேலன், மாவட்ட துனை ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை துனை கான்கானிப்பாளர், தாசில்தார் என பல உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகழச்சியினை தடை செய்தனர்.

சமூக நல்லினக்கத்திற்கு பாதகமாக அமைய இருந்த இந்த நிகழ்ச்சி இந்திய தேசிய மக்கள் கட்சியின் முயற்சியால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல்துறை கன்காணிக்பாளர் திரு. செந்தில்வேலன் அவர்கள் மத நல்லினக்கத்தை காக்கும் வகையில் உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களை நேரில் வரவழைத்தும் நடவடிக்கை எடுத்ததன் பேரில் மாவட்டத்தில் சமூக நல்லினக்கம் காக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில் வேலன் அவர்களுக்கும், உதவி ஆடசித் தலைவர், மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக பாராட்டுக்களை தெறிவித்து கொள்கின்றோம். மத நல்லினக்கத்திற்காக பாடுபடும் மாவட்ட காவல்துற காண்கானிப்பாளர் திரு. செந்தில் வேலன் அவர்களுக்கு விரைவில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியோர் நேரில் சென்று நன்றியினை தெறிவிப்பார்கள்.

இது குறித்த முந்தைய செய்தி

Friday, February 13, 2009

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு மத்திய - மாநில அரசுகள் முயற்சிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும் ஈரோட்டில் கமுதி பஷீர் பேச்

ஈரோடு, பிப்.13-
இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கு மத்திய அரசும் - தமிழக அரசும் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியுடன் துணை நிற்கும் என்று தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் கமுதி பஷீர் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் நடைபெற்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவையின் மாபெரும் பொதுக் கூட் டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியதாவது-
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இன்று நாடு முழுவதும் பேரணியும் - பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தான் சிகிச்சை பெற்று வரும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே தோழமைக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இலங்கை தமிழர்களின் துயர் துடைத்திட மனிதநேயத்தோடும் - தமிழ் இன உணர்வோடும் எடுத்த முடிவின் அடிப்படையிலேயே இந்த நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் இலங்கை தமிழர் பிரச்சினை மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிங்கள அரசை சிந்திக்க வைத்திருக்கின்றது. கடந்த 7-ம் தேதியும், 8-ம் தேதியும் வட சென்னையிலும் - தென் சென்னையிலும் பிரமாண்டமான வகையில் நடைபெற்ற பேரணியும்- பொதுக்கூட்டமும் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சியோடு அமைந்தன.
தி.மு.க. - காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கட்சியின் தொண்டர்களும் மற்றும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியினரும் மடைதிறந்த வெள்ளம்போல் கலந்து கொண்ட மாட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இன்று தமிழகம் இலங்கைத் தமிழர்களுக்காக எழுச்சியோடு அணி திரண்டுள்ளது.

இதற்கு காரணம் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று தமிழகத்தின் வீதியிலே ஒரு சிலர் வேறு விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுயநலவாதிகள் - இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையில்லாதவர்கள் - இரட்டை வேடம் போடும் தீய சக்திகள் என்பதை தமிழக மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.

நம்முடைய முதல்வர் கலைஞருக்கு வயது 85. அவருடைய பொது வாழ்வுக்கு வயது 75. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வயது 53. இந்த வரலாற்று பின்னணியில் சங்கமித்தி ருக்காதவர்கள் - அப்போது பிறந்தேகூட இருக்காதவர்கள் எல்லாம் இன்று கலைஞரை குறை கூறுவது வினோதமாக இருக்கிறது.

1956-ம் ஆண்டு இலங்கைத் தமிழர் தலைவர் தந்தை செல்வ நாயகம் அவர்களும் அவ ரோடு அப்போது இளைஞராக இருந்த நாவலர் அமிர்தலிங்கம் அவர்களும் தந்தை - பெரியாரையும் - பேரறிஞர் அண்ணா அவர்களையும் - டாக்டர் கலைஞர் அவர்களையும் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு - அவர்தம் வாழ்வுரிமைக்கு வழிகாண கோரிக்கை வைத்தார்கள்.

அதுமுதல் திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காண மத்திய அரசின் மூலம் வலியுறுத்தியே வந்துள்ளது.
தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டே வந்துள்ளது.
எங்களுடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பெருந்தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தந்தை செல்வநாயகம் போன்ற மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்காக உரிய நடவடிக்கை களை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

அவர்கள் இலங்கை சென்றபோதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்தும் - இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் - தமிழ் மக்களும் இணக்கமாக வாழ்வது குறித்தும் இலங்கை தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் கவலையோடு ஆலோசனை களை வழங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையிலேதான் இன்றைக்கு இலங்கையிலேயே அமைதி ஏற்பட, இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்பட, அப்பாவி தமிழர்களின் உயிர் - உடைமைகள் காப் பாற்றப்பட இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையின் வாயிலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது.

இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி - வி.பி.சிங், வாஜ்பாயி ஆகியோர் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் இப்போது அன்னை சோனியாகந்தி வழிகாட்டுதலில் நடைபெறும் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசிடமும் வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுக்காக உரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களாகும்.

இரண்டு முறை இதற்காக பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கை சென்று வந்துள்ளார். சமீப காலத்தில் ஒருமுறை வெளியுறவு செயலாளர் இலங்கை சென்று வந்தார். நேற்றுகூட போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை பிரணாப் முகர்ஜி அவர் களும் - ப. சிதம்பரம் அவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதன்வாயிலாக உலக நாடுகளின் கவனம் இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்காக உற்று நோக்கியுள்ளது. முன்பு நார்வே நாடு மட்டும்தான் இலங்கை தமிழர் பிரச் சினையில் கவனம் செலுத்தியது.

இப்போது அமெரிக்கா - பிரிட்டன் - ஜப்பான் - பிரான்சு போன்ற நாடுகள் போர் நிறுத்தம் செய்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று சிங்கள அரசை வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. சபை கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

போப் ஆண்டவர் தன்னுடைய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் - முதல்வர் கலைஞர் அவர்களின் விவேகமான நடவடிக்கைகள்தானே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இதனைப் புரிந்தும் புரியாதவர்களாக ஒரு சிலர் திரிபுவாதம் செய்கிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் அரசும் - மாநிலத்தில் தி.மு.க. அரசும் - பதவி இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களின் நோக்கம் இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவது அல்ல.
உள்நாட்டு அரசியலுக்காக - குறிப்பாக தமிழக அரசியலுக்காக வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக செத்து மடிந்து கொண்டிருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கைத் தமிழர் களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசும் - குறிப்பாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் மேற்கொண்டு வரும் விவேகமான நடவடிக்கைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியாக துணை நிற்கும்.

அதுவே உயரிய வழியாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும்.
இவ்வாறு கமுதி பஷீர் உரையாற்றினார்.

காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

காதலர் தினம்
தமிழாக்கம் - சகோ.அபு இஸாரா

சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...

சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!


அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:

உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.

1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும்.

2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.

3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞி
கள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.


காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.

நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.


عيد الحب

فضيلة الشيخ محمد بن صالح العثيمين حفظه الله
السلام عليكم ورحمة الله وبركاته وبعد
فقد انتشر في الآونة الأخيرة الاحتفال بعيد الحب ــ خاصة بين الطالبات ــ وهو عيد من أعياد النصارى ، ويكون الزي كاملاً باللون الأحمر الملبس والحذاء ويتبادلن الزهور الحمراء ..00
نأمل من فضيلتكم بيان حكم الاحتفال بمثل هذا العيد ، وما توجيهكم للمسلمين في مثل هذه الأمور والله يحفظكم ويرعاكم
بسم الله الرحمن الرحيم

ج / وعليكم السلام ورحمة الله وبركاته
.الاحتفال بعيد الحب لا يجوز لوجوه :
الأول : أنه عيد بدعي لا أساس له في الشريعة .
الثاني : أنه يدعو إلى العشق والغرام
الثالث: أنه يدعو إلي اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة لهدي السلف الصالح رضي الله عنهم
.فــلا يــحـل أن يحدث في هذا اليوم شيء من شعائر العيد سواء كان في المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك وعلى المسلم أن يكون عزيز بدينه ولا يكون إمَّــعَــةً يتبع كل ناعق . أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن وأن يتولانا بتوليه وتوفيقه .

كتبه
محمد الصالح العثيمين
في 5/11/1420هـالتوقيع


VALENTINE’S DAY

Shaykh Ibn Uthaymeen (may Allah have mercy on him) was asked:

Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu…

In recent times the celebration of Valentine’s Day has become wide spread, especially among female students. It is a Christian festival where people dress completely in red, including clothes and shoes , and they exchange red flowers. We hope that you can explain the ruling on celebrating this festival, and what your advice is to Muslims with regard to such matters; may Allah bless you and take care of you.

He replied :

Wa Alaikum Salam Wa Rahmathullahi Wa Barakathuhu…

Celebrating Valentine’s Day is not permissible for a number of reasons.

1. It is an innovated festival for which there is no basis on Islam.

2. It promotes Love and Infatuation.

3. It calls for hearts to be preoccupied with foolish matters that are contrary to the way of the righteous (may Allah be pleased with them).

It is not permissible on this day to do any of the things that are the characteristic of this festival, whether that has to do with food, drinks, clothing exchanging gifts or anything else.
The Muslim should be proud of his religion and should not be a weak character who follows every Tom, Dick and Harry. I ask Allah to protect the Muslims from all temptations, visible and invisible, and to protect us and guide us.

வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
Thanks to : Islamic Call & Guidence Centre - Al Khobar,Saudi Arabia Tel. +96638655557

பரமக்குடியில் நபிகள் நாயத்தின் படத்திறப்பு விழா - தடுக்கும் நடவடிக்கையில் IDMK

நபிகள் நாயகத்தின் படத்தை திறந்து வைப்பவர்


சமூக நல்லினக்கத்துடனும், ஓற்றுமையுடனும், அமைதியாகவும் இருக்கும் தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்கி கலவரக்காடாக்கும் முயற்சியில் மீண்டும் ஒரு கும்பல் இறங்கியுள்ளது. நேற்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு துன்டுப்பிரசுரததில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்ற அமைப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (15.02.2009) அன்று காலை 10.30 மனியளவில் பரமக்குடி நகரில் மகான்கள் மற்றும் இறைத்தூதர்களின் புகைப்படங்களை திறக்கப்போவதாக அறிவித்திருந்தது.

விசம துன்டுப்பிரசுரததின் முதல் பக்கம்


இதில் புத்தர், ஏசுபிரான் (ஈசா நபி), மற்றும் நபிகள் நாயகம் (முகம்மது நபி) ஆகியோரின் புகைப்படங்களை திறக்கப்போவதாகவும் தெறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக நமது கட்சியின் பரமக்குடி நகர் நிர்வாகிகள் மூலம் நமது தலைமையின் கவனததிற்கு கொண்டுவரப்பட்டது.

உடனடியாக செயலில் இறங்கிய முகவை மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீ்ர், பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் இன்று உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வுலன் அவர்களையும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கி்ர்லோஸ்குமார் அவர்களையும் புகார் மனுக்களுடன் நேரடியாக சந்தித்து உடனடியாக இதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் மதமோதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வுலன் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கி்ர்லோஸ்குமார் அவர்களும், அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து நபிகள் நாயகத்தின் புகைப்படம் திறக்கப்படாமலிருக்க செய்யுமாறு கேட்குட் கொண்டார்கள். இன்னும் நம்மிடம் இந்தப்பிரச்சினையை உடனடியாக நடவடிக்கை எடுத்து நான் தீர்த்து வைக்கிறேன். நபிகள் நாயகத்தின் படம் திறப்பது என்பது தவறானதாகும் ஆகவே அவ்வாறு நடக்காமல் இருக்க நான் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகின்றேன் என்று உறுதியளித்தள்ளார்.

பின்னர் மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் உடனடியாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஹசன் அலி எம்.எல்ஏ அவர்களை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்திருப்பது காங்கிரசின் பரமக்குடி எம்.எல்.ஏ திரு. கே.வி.ஆர் இராம்பிரபு என்றும் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கேட்க சொன்னார்கள். உடனடியாக பதில் அளித்த திரு. ஹசன் அலி , நபிகள் நாயகத்தின் படத்திறப்பு பற்றி இராம்பிரபு எம்.எல்.ஏ க்கு தகவல் தெறியாது என்றும் சமய நல்லினக்க விழா என்பதால் ஸ்பான்சர் செய்ததாகவும் இனிமேல் அந்த நிகழ்ச்சியில் கலந்து காள்வதாக இருந்த திரு. இராம்பிரபு எம்.எல்.ஏ கலந்து கொள்ள மாட்டர் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் ரோட்டரி சங்கள் நிர்வாகிகளை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர், உடனே ரோட்டரி சங்கள் மாவட்ட தலைமை பரமக்குடி கிளையினை தொடாடபு கொண்டு இந்நிகழ்ச்சியில் நபிகள் நாயத்தின் புகைப்படடம் திறப்பதாக கூறப்பட்டுள்ளது குறித்தும் அதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என்றும் கேட்டார்கள்.இந்நிகழச்சியில் பங்கு பெறும் யாரிடமும் எந்நதவித முன்கூட்டிய தகவலும் இதுகுறித்து விழாவினை நடத்துபவர்கள் கூறவில்லை என தெறியவந்துள்ளது.

உடனடியாக பரமக்குடி இந்திய தேசிய மக்கள் கட்சியினரை தொடர்பு கொண்ட மாவட்ட நிர்வாகிகள் நிகழச்சியினை நடத்தும் சன்மார்க்க சங்கத்தார்கள் மீதும், பரமக்குடி காமாட்சி ஜீவல்லர்ஸ் அதிபர் திரு. எம்.என். இரவிச்சந்திரன் என்பவர் மீதும் பரமக்குடி காவல் நிலையித்தில் புகார் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பளரிடம் அளித்த புகர் மனு:




இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்த புகர் மனு: