Wednesday, April 30, 2008

கொடுக்கல் - வாங்கல் -மெளலவி. இபுறாஹிம் பைஜி

"கொடுக்கல் - வாங்கல்"

மெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்

Al-Sheikh. Ibrahim Baiji


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மெளலவி இபுறாஹிம் பைஜி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...

அழைப்பு பணியில் அதிரை (ஜோக்கர்) ஃபாருக்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிரிவினை வாத கும்பலை சேர்ந்த ஃபாருக் என்பவர் இவர் எதை அழைத்தார் என்று தெறியவில்லை தனது பெருக்கு முன்னால் அழைப்பு பணியில் அதிரை ஃபாருக் என்று போட்டு கொள்கின்றார். பெரும்பாலும் இவரது மின்னஞ்சல்களை ஏதாவது ஒரு பென்னின் பெயரில் தான் ஃபார்வர்ட் செய்து வரும் (கவர்ச்சிக்காக இவர்களின் செட் அப் ஐடி) அதிராம் பட்டினத்தை சேர்ந்த இவர் கடந்த 20-04-2008 அன்று எப்போதும் போல் தனது பெயரிலும், கவாச்சிக்காக கிரியேட் செய்து வைத்துள்ள பென்கள் ஐடிகளிலும் இருந்தும் இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் நமது பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. (இங்கு கிளிக் செய்து அந்த மின்னஞ்சலை டவுன்லோட் செய்யவும்)

கோவில்களுக்கு செல்லும் இஸ்லாமிய பென்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலில் நமது இணையத் தளத்தில் இருந்து திருடப்பட்ட பல தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் புகைப்படங்களும், சில அமைப்புகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. சரி கோவிலுக்கு செல்லும் இஸ்லாமிய பென்களுக்கும் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப்போய் ததஜ வின் ஏவி விடப்பட்ட புதிய "அது" வான் "அழைப்பு பணியில் அதிரை ஃபாருக்கின்" மின்னஞ்சலை வாசித்தபோது அதில் குறிப்பிட பட்டிருந்த சாரம்சம் இதுததான்.

அதாவது அவர் இணைத்திருந்த புகைப்படத்தில் இருந்த அணைத்து தலைவர்களும், மார்கக் அறிஞர்களும், அமைப்புகளும் குராபிகளோடு பைஅத் செய்து கொண்டு ஏகத்துவத்தை பரப்ப தவறிவிட்டர்கள் என்றும் இன்று இஸ்லாமிய பென்கள் கோவில்களுக்கு செல்வதற்கு காரனம் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, சவுதி அரேபியாவில் அழைப்பாளராக பணிபுறியும் பிரபல மார்க்க அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, மற்றாரு மார்க்க அறிஞர் ஹாமித் பக்ரி, முஸ்லிம் லீக்கை தனது வீட்டு கொல்லையில் கட்டிபோட்டு யுனானி மருந்து கொடுத்து வளர்க்கும் ஹக்கிம் டாக்டர் செய்யது சத்தார், மனித நீதி பாசறை என்ற அமைப்பினர் என தமிழகத்தில் தான் சார்ந்திருக்கும் ததஜ என்ற கலகக் கும்பலை தவிற அணைத்து அமைப்பினரும்தான் என்றும் எழுதியிருந்தார்.

இதில் பெருங்கூத்து என்னவென்றால் தமுமுக வினர் சந்தனக்கூட்டுக்கு நோட்டிஸ் அடித்தார்கள் என்று நடந்து முடிந்து விள்கம் தரப்பட்ட ஒரு பழைய விசயத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விசயத்திற்கு தமுமுக வினர் தங்கள் அமைப்பின் சார்பில் நேரடியாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்திவிட்டார்கள் அதைக்கூட வாசிக்க மறந்து விட்டார் இந்த அதிகம்படித்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக்.

கட்டுரையின் முடிவில் ஒரு ஜோக்கடித்திருந்தார் பாருங்கள் அதுதான் தாங்க முடியல, உலகிலேயே ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் ஒரே அமைப்பு ததஜ தான் என்பது பூல் முடித்திருந்தார் அதைப் படித்துவிட்டு நானும் எனது நன்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். இறுதியில் இந்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக் ஜோக்கர் ஃபாருக் ஆகியதுதான் மிச்சம்.

சரி, இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால், தமுமுக வினரை குறிப்பிட்டிருந்தது போல் தமிழகத்தில் தருதலை ஜமாத் தலைவர் பி.ஜே என்று ஏகத்துவம் ஆரம்பமாகியது என்று சொல்கின்றாரோ அன்றிலிருந்து ஏகத்துவத்தை சொல்லி வரும் தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரும், சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல இஸ்லாமிய அழைப்பு மையங்களில் பணி புறிந்து தற்ச்சமயம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மைத்தில் சேவையாற்றி வருபவருமான மெளலவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புகைப்படத்தையும் போட்டு அவரும் தமிழகத்தில் குராபிகளுடன் அக்ரிமென்ட் செய்து கொண்டு இஸ்லாமிய பென்கள் கோயில்களுக்கு செல்வதற்கு காரனமாகிவிட்டார் என்று எழுதியிருந்தது இந்த ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.

இவர் குறிப்பிட்டிருந்த மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் நான் வசிக்க கூடிய அல்கோபர் என்ற பகுதியிலேயே தங்கியிருந்து இஸ்லாமிய ஊழியம் செய்்து ஏகத்துவத்தன் பால் மக்களை அழைத்து வருவதால் அவரிடமே நேரில் இது குறித்து கேட்டு விடுவோமே என்று ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.எழுதியதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு சென்று மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை அவரது இல்லத்திற்கு வெளியே சந்தித்து இது பற்றி கூறி விளக்கம் கேட்டோம்.

அதை வாசித்து விட்டு நம்ம ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக் போன்ற ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட ஜெனமங்களுக்காக வருத்தப்பட்டவர், இது போன்ற எதையும் சொன்னால் நம்பக் கூடிய, கேள்வியே கேட்காமல் பனிபற்றக் கூடிய சிலர் இருப்பதால்தான் இந்த மனிதர் பி.ஜே எதையும் அடித்து விடுகின்றார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கூட்டங்களும் பி.ஜே சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பி விடுகின்றது இது போன்றவாக்ளுக்கு பி.ஜே வைப்பற்றின பல உண்மைகள் தெறிய வாய்ப்பில்லை எது தற்போது உள்ளதோ அதை மட்டுமே பார்க்க்கூடியவர்களாக இவர்கள் உள்ளார்கள் தற்போது பி.ஜே சொல்பவற்றிற்கும் கடந்த கால நிகழ்வுகளையும் இவாக்ள் என்றும் ஒப்பிட்டு நோக்கியதில்லை. இவர்கள் திருத்தப்பட வேண்டும். இன்று எங்களிடம் இருந்து பி.ஜே தனியாக பிரிந்து சென்று விட்டாலும் பி.ஜே யோடு ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்றாக இருந்தவன் என்ற நிலையில் இவர்களின் அறிவிற்காக பி.ஜே வைப் பற்றிய சில தகவல்களை (ரகசியங்களை???) நான் இவர்களிடம் எடுத்து வைக்கலாம் என்றுள்ளேன் நான் அவற்றை கட்டுரையாகவே எழுதித் தருகின்றேன் வெளியிட்டு விடுங்கள் என்று கூறினார்.

அதிரை ஃபாருக் என்பவர் எழுதியுள்ள அனைத்துமே அவரது தலைவர் பி.ஜே விற்கு முற்றாக பொருந்தி போகக்கூடியவை என்பது எனது பதில் கட்டுரையை படித்த பிறகு இவர்கள் விளங்கி கொள்வார்கள் என்று கூறினார்.

விரைவில் எதிர் நோக்குங்கள்...சில நாட்களிலேயே .....பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும், உண்மைகளை அம்பலப்படுத்தும், ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.



விரைவில் எதிர் நோக்குங்கள்...உண்மைகள் என்றும் உரங்குவதில்லை....
பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது...
மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்...

இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???


கைப்புள்ள கமென்ட்:
ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க....

Tuesday, April 29, 2008

மக்கா - மதீனா வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

மக்கா - மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
- சவூதி அரசாங்கம்



உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் புனித மக்கா நகரத்தினை பற்றியும் மற்றும் மதீனா நகரத்தினை பற்றியும் வரலாற்று சிறப்புகளையும், மற்றும் இரு புனித நகரங்களில் உள்ள கலை பண்பாடு, எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருக்கும் அழகான கலாச்சாரத்தினை பற்றியும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு சவூதி அரசாங்கம் புதியதொரு இணையத்தளம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. மாஷா அல்லாஹ் .. அதன் முகவரி


இந்த இணையத்தளமானது புனித இரு நகரங்களை பற்றிய முழு விவரங்களையும், அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், ஐங்கால நேரத்தில் அங்கு நடைபெறும் தொழுகை பற்றியும், தொழுகை நேரத்தினை பற்றியும், அங்கு மக்கள் எவ்வாறு தொழுகையினை நிறைவேற்றி வருகிறார்கள். மற்றும் ஏழைகளின் பெரு நாளாகிய வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் தொழுகையினை பற்றியும், தொழுகைக்கு முன் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நேரில் காணும் போது எப்படி உணர்வர்களோ அத்தகைய உணர்வுகளை இணையத்தில் காணும் போது உணரக்கூடிய அளவில் இருக்கும் என்று மக்கா - மதீனா தலைமையகம் அறிவித்து உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 45,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி ஒளிப்பேழைகள் இந்த இணையத்தில் உள்ளன என்பதும் இதன் சிறப்பாகும்.

மக்கா மதீனா தலைமையகமானது தனது இரண்டாவது கட்ட மார்க்க பணியாக, மின்னனுவாக்க கல்வியினையும் (E. Education service) துவங்க உள்ளது. இதன் மூலமாக பல அரிய தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இணைய சேவையானது தற்போது ஆங்கிலத்தில் உள்ளது பிற்பாடு மற்ற நாட்டு மொழிகளிலும் வெளியிடு செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறது.

இந்த இணையத்தளத்தில், எவ்வாறு ஹஜ் மற்றும் உம்ரா செய்வது பற்றி அரேபிய மொழியிலும் உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் உள்ளது. இந்த இணையத்தில், அரேபிய, உருது, இந்தோனிஷியா மொழியில் உள்ள குர்ஆன் வானொலி சேவையும் உள்ளது. தர்ஜீமா குர்ஆனும் இந்த இணையத்தில் உள்ளது உலக மக்கள் அவர்களுடைய தாய் மொழியில் அதனை கேட்கலாம். மற்றும் மின்னனுவாக்க நூலகம் (E. Library) என்ற பகுதியில் மக்கா மற்றும் மதீனாவின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் துவங்கிய இந்த இணையத்தியத்தின் சேவை எப்படி உள்ளது என்பதினை பற்றி மக்களிடம் கருத்துக்களை அறிய உள்ளோம் என்றும், இந்த இணையத்தின் மூலமாக இஸ்லாம் மற்ற மக்களிடம் இன்னும் பலவாறாக பரவ வாய்ப்புள்ளது என்று முதன்மையாளர் ஷாலே அல் ஹீசேன் (Saleh Al Hosain – Head of the Presidency) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த இணையமானது ஹஜ் மற்றும் உம்ரா பற்றி அறியாத மற்ற மதத்தினருக்கு அதனை பற்றி தெரிந்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். அத்துடன் ஹஜ் மற்றும் உம்ரா எவ்வாறு செய்வது பற்றி இஸ்லாமியர்கள் இதன் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தில் கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா என்ற துணியினை பற்றிய வரலாற்று சம்பவங்களும், இந்த துணியினை தயாரிக்கும் மக்காவில் உள்ள கிஸ்வா தொழிற்சாலையினை பற்றிய தகவல்களும் அடங்கி உள்ளன.

சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா தலைமையாகமானது, (The Supreme Commission for Tourism) ஐந்து வருட காலத்திற்குள் 6 புதிய அருட்காட்சியகத்தினை (Museum) சவூதி அரேபியாவின் பல மாகாணாங்களில் துவங்குவதற்கான பணிகளை செய்ய உள்ளது. மற்றும் 12 க்கும் மேற்பட்ட பழைய அருட்காட்சியகத்தினை புதுப்பிக்கவும் உள்ளது என்று சுற்றுலா தலைமையகத்தின் பொது செயலாளரான அரசர் சுல்தான் பின் சல்மான் (Prince Sultan bin Salman) அவர்கள் கூறினார்கள். ஒரு வருடத்திற்கு சவூதி அரேபியாவிற்கு புனித யாத்திரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது 10 மில்லியானகும். இவர்கள் அனைவரும் புனித பூமியினை பற்றிய பல சிறப்புகளை பற்றி அறிந்து பயன் பெறும் வகையில் இந்த அருட்காட்சியகம் செயல்படும். புனித யாத்திரை வருவோருக்கு தேவையான அனைத்து செய்திகளும் ஒருங்கே அமையப் பெற்றதாக இருக்கும் இந்த அருட்காட்சியகம். அத்துடன் சவூதி அரேபியாவில் பல இடங்களில் சுற்றுலா கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினையும் அரசாங்கம் செய்ய உள்ளது.

நன்றி : Khaleej Times – Page – 16 – Dated April 24 and 27. 2008

தமிழாக்கம் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

அல்கோபரில் நடந்த இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி


அல்கோபர் மாநகரில் அக்ரபியாவில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சார மையத்தின் தமிழ் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழச்சியில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞரும் மற்றும் இலங்கையில் இருந்து வெளிவரும் " உண்மை உதயம்" பத்திரிகை ஆசிரியருமான மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள்.

சரியாக இரவு 8.30 அளவில் அக்ரபியா இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சார மையத்தின் தமிழ் பிரிவு அழைப்பாளராக பனியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் நிகழச்சியை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்கள்.


அதன் பின்னர் சிறப்புரை ஆற்ற வருகை தந்திருந்த மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் "குழந்தை வளர்ப்பும், இஸ்லாமிய கல்வியும்" என்ற தலைப்பில் மிக அருமையான, அவசியமான உரை ஒன்றை ஆற்றினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் கிழக்கு மாகான தமிழ் தஃவா கமிட்டியின் துனைத் தலைவர் மெளலவி உவைஸ் பாக்கவி அவர்கள் நிறைவுரை நல்க நிகழச்சி இனிது நிறைவுற்றது.


இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆன்களும், பென்களும், குழந்தைகளுமாக தம்மாம் அல்கோபர் பகுதிகளில் இருந்து இந்திய, இலங்கையை சோந்த தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அணைவருக்கும் சுவையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகான தமிழ் தஃவா கமிட்டி அக்ரபியா சென்டருடன் இணைந்து செய்திருந்தது. தமிழ் தஃவா கமிட்டியின் தன்னார்வ தொண்டர்கள் வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறுதல் முதல் அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : சகோ. அபு இஸாரா & முகவைத்தமிழன்

குறிப்பு : இந்நிகழ்ச்சியின் வீடியோ நமது தமிழ் முஸ்லிம் மீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Monday, April 28, 2008

NCHRO செய்தி அறிக்கை

1. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி சதாசிவா கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசின் சார்பாக நிவாரணத்தொகை அளிக்கப்பட்டதில் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர்.

மேலும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டு தொகை அளிக்கப்பட வேண்டும் என்றம் வன்கொடுமைகள் செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 20.04.2008 அன்று மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், சோகோ டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மகபூப்பாட்ஷா, மனித உரிமைக் குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சோ. இராசன் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதர மனித உரிமை இயக்கங்களின் சார்பாக சத்தியமங்கலத்திலிருந்து சென்னை வரை நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நடைபயணம் சத்தியமங்கலத்தில் தொடங்கிய உடனேயே தமிழக அரசு அந்தப் போராட்டத்திற்கு தடைவிதித்துள்ளது. மேலும் நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன், சோக்கோ டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மகபூப் பாட்ஷா, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சே. இராசன் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் தமிழக அரசின் செயலை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் அனைவருக்கும் இழப்பீடு வழங்கி தவறு செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டுமென NCHRO தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

2. திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போடச் சென்ற நான்கு குழந்தைகள் இறந்தது மிகவும் பரிதாபத்திற்குரியது. நோய்வராமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இத்தகைய தடுப்பூசிகள் உயிர்க் கொல்லியாக மாறுவது சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கினையும் மக்களின் மீதான அக்கறையின்மையையும் காட்டுகின்றது.காலாவதியான தட்டம்மை தடுப்பூசி மருந்தினைப் போட்ட அரசு மருத்துவர், செவிலியர் மற்றும் அசிரத்தையாக செயல்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல காலாவதியான தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டு அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்பதையும் NCHRO கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
தி. லஜபதிராய். M.L
தலைவர்,
NCHRO தமிழ்நாடு
Mobile 98432 51788

T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்? - மெளலவி.ஜமால் முஹம்மத் மதனி

"T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்?"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani..


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Sunday, April 27, 2008

யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF)


யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 20.04.2008 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் A.M ஷாஃபி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் A.M. அன்வர் அறிமுக உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அ. முஹம்மது யூஸுஃப் சிறப்புரையாற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கல்வி வளர்ச்சி, மாணவர்களின் மேம்பாடு, யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் வளர்ச்சி ஆகியவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27%இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் ஒரு மைல்கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனையாக வைக்கா மல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனைக் கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக, உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.

2. இந்த 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும், இன்னும் இதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு இடஒதுக்கீடு கிடைக்க அழுத்தம் தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் யு.எஸ்.எஃப். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. நமது தேசத்தில் முஸ்லிம்கள் கல்வி, சமூக பொருளாதார ரீதியாக மிகவும் கீழான நிலையில் இருப்பதாகவும், முன்னேற்றப் பட வேண்டிய சமூகத்தில் மிகமுக்கிய பங்கை இந்த முஸ்லிம் சமூகம் வகிக்கின்றது என்றும் சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. வல்லரசு என்ற ஸ்தானத்தை எட்ட பீடுநடை போட்டுக் கொண்டி ருக்கும் நமது தேசத்தின் குடிமக்களில் ஒரு பகுதியினராகிய முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருப்பது நமது தேசத்தின் பயணத்தில் ஊனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஆகவே இந்த நிலையைக் களைய மத்திய அரசு உடனடியாக 15% தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கி இந்த தேசத்தில் ஏற்பட்டுள்ள ஊனத்தை சரி செய்ய வேண்டும் என யு.எஸ்.எஃப். மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

4. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு மாவட்டந்தோறும் முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகளை (HOSTEL) கட்டித்தர வேண்டும் என்றம் அதில் முதற்கட்டமாக சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் வரும் 2008 2009 கல்வியாண்டு முடிவிற்குள் கட்டித்தர வேண்டுமென்றும், முஸ்லிம் மாணவ, மாணவியரின் இந்தக் கல்வி நலத்திட்ட அபிவிருத்திப் பணியில் சுணக்கம் காட்டாமல், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டு
ம் என்றும் யு.எஸ்.எஃப். தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

5. மாணவ சமுதாயத்தின் எதிர்கால இலட்சியத்தை வளமாக்கும் விதமாக, பத்தாவது மற்றும் +2 வுக்குப் பிறகு என்ன படிப்பது? என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூலை ரூ 3/ நன்கொடையில் வழங்குவது என்றும் சிறந்த கல்வியாளர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்டு மேற்படிப்பு வழிகாட்டி முகாம்களை மாவட்டம்தோறும்நடத்தி அதில் இந்த நூலை வெளியிடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


இப்படிக்கு,
அ. முஹம்மது யூஸுஃப்,
மாநிலத் தலைவர்,

யு.எஸ்.எஃப்

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு, பின் பல நாடுகளில் தன்னுடைய ஆதிக்கசக்திகளின் கோர தாண்டவத்தினை அமெரிக்கா செய்துக்கொண்டு இருக்கிறது. இதனால் பல பாதிப்புசேதங்களை பல நாடுகள் அடைந்துக்கொண்டு வருகின்றன. அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாவற்றிகும் காரண காரிய இருப்பது அமெரிக்கா தான் என்பது உலகவியலாளர்களின் கருத்தாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் மட்டுமின்றி பசி பட்டினி அதனால் ஏற்படும் துயர சம்பங்கள் அதிகம் பல நாடுகளில். குறிப்பாக பல தேசங்களில் அரிசி தட்டுப்பாடுக்கள் அதிகரித்து வி்ட்டன. வளைகுடா நாட்டிற்கு, இந்தியாவிலிந்து ஏற்றுமதியாகும் அரிசியினை இந்தியா அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதனால் வளைகுடா பகுதியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலைவாசிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிவி்ட்டது. அத்தியாவசிய விலைகள் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே வருகிறது. மற்றொரு பக்கம் உலக சந்தைகளில் எரிபொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது.

இரட்டை கோபுர தாக்குதலில் 3,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. ஆனால் அந்த தாக்குதல்களில் இறந்து போனவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள், எந்த இனத்தை சார்ந்தவர்கள், எந்த மொழியினை சார்ந்தவர்கள், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி அமெரிக்காவினால் வெளியிட முடியுமா..? சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்..? அமெரிக்கா அரசாங்கம் எனக்கு அனுமதி தரவில்லை. இருந்தாலும். அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்து இருந்தார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை முன்பு விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டிற்கு செல்லவில்லை.

உலக நாடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். தற்போது ஈரான் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்துறை, அரசியல் துறை, வாணிபத்துறை, இராணுவத்துறை என்று பல துறைகளிலும் நாங்கள் முன்னெறிக்கொண்டு வருகிறோம். ஆதிக்கசக்த்திகளை எதிர்த்து பேராடக்கூடிய மனப்பக்குவதில் ஈரான் நாடானது தயாராகி விட்டது என்று ஈரான் அதிபர் தைரியமாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாடு திரும்பிய 300,000 அமெரிக்க போர் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆம்.. அவர்கள் மனக்கஷ்டம், மன அழுத்தம், மன வேதனை, மன பாரம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். நாடு திரும்பிய போர் வீரர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, அவர்களின் மூளையானது பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 320,000 போர் வீரர்களுக்கு Traumatic Brain என்ற மூளை நோயானது பரவி விட்டது. 18.5 சதவீத போர் வீரர்களுக்கு மன அழுத்தம் (Stress Disorder) போன்ற நோய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. ஐந்தில் ஒரு போர் வீரர் என்ற விகிதாரம் படி நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வானது கூறுகிறது. இதற்கு காரணம் யார்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஸா பகுதி, பாலஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவி பொது மக்கள், சிறு குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்.. கணவனை இழந்த மனைவிமார்கள் எத்தனை பேர்..? மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்..? இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அனைத்திற்கும் யார் காரணம்..?

போர் மூலம் ஒரு பக்கம் ஆபத்துக்கள் தினமும் வந்த கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் ஊடகத்துறைகளும் ஆதிக்கசக்திகளுக்கு அடிமையாகி விட்டது. டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் ஊடகத்துறைகளை தூண்டி விட்டு அதன் மூலம் வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. இஸ்லாம் ஒரு தீவிரவாதம் என்று மக்களிடம் சொல்லும் பொய் பிரச்சாரங்கள் எடுபட வில்லை. இஸ்லாம் ஒரு புனித மார்க்கம்.. ஒரு எளிய மார்க்கம் ..இனிய மார்க்கம் என்பது மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இஸ்லாம் ஆழமாக பதிந்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் மக்களை சிந்திக்கக்கூடிய அளவிற்கு மாற்றி விட்டது. இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா.

ஒரு மனிதன் இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தம் கூட வெளியரங்கத்தில் செழிப்பும் அமைதியும் அவனை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் இது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு அளிக்கப்படும் அவகாசம் ஆகும். அதன் பிறகு இறைத்தண்டனையின் கசையடிகள் விழக்கூடும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வும் அமைதியும் தான் உண்மையானவை ஆகும்..

தகவல் தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா செய்திகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் - அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் - அல் கூஸ் - துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.

ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Saturday, April 26, 2008

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் நகர செயற்குழு கூட்டம் 20.04.2008 ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நகர த.மு.மு.க.அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாளை ளு.ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் முன்னிலை வகித்தார். நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன், நகர செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணை தலைவர் மு.மு.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் உட்பட அனைத்து வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சொத்து வரியை உயர்த்திய நெல்லை மாநகராட்சியை வன்மையாக கண்டிப்பது.

2. தொடர் மின்வெட்டை சரி செய்யாத மின் வாரியத்தை வன்மையாக கண்டிப்பது.

3. விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

4. ரேசன் கார்டு பெயர் திருத்தம் செய்யும் நடைமுறையில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பாளையங்கோட்டை வட்ட வழங்கல் துறையை கண்டிப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு சரி செய்ய கோருவது.

5. ஹாமீம்புரம் 12 தெருக்கள், ஞானியரப்பா நகர் 8 தெருக்கள், பங்களப்பா நகர் 5 தெரு, ரஹ்மானியாபுரம் 2 தெரு, ராஜா நகர், தாய் நகர், அமுதா நகர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு அடக்கஸ்தலம் (மயானம்) தான் உள்ளது. எனவே, மேலும் ஒரு அடக்கஸ்தலத்திற்கு அரசு ஒரு இடத்தை ஒதுக்கி தர அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. மே 10 அன்று மேலப்பாளையத்தில் த.மு.மு.க. தலைவர் ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் நன்றி கூறினார்.

செய்திகள் : K.S.ரசூல் மைதீன்

Friday, April 25, 2008

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். .

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்'தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்

இறைவனின் திருப்பெயரால்

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.

கொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.

சிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.

இப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்....?

சகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.


சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM)
தமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு

குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி








துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான்,ஜமால் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் புகைப்படங்களுக்கு

www.muduvaihidayath.blogspot.com
www.muduvaibasheersaitalim.blogspot.com

Thursday, April 24, 2008

மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் உரை (VIDEO)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.

.

"மருத்துவர் இராமதாசு அவர்களின் உரை"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மருத்துவர் இராமதாசு அவர்கள்

Wednesday, April 23, 2008

ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் - உலக முஸ்லிம்களுக்கு படிபினையான ஒரு சிறந்த சரித்திரக் குறும்படம் இதோ தமிழில் உஙகள் முன்

ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் - உலக முஸ்லிம்களுக்கு படிபினையான ஒரு சிறந்த சரித்திரக் குறும்படம் இதோ தமிழில் உஙகள் முன்

www.tamilmuslimtube.com இல்
மேலும் பரங்கிப்பேட்டை மானுட வசந்தம் மருத்துவர் ஹபீப் முஹம்மது கேள்வி / பதில்
Part 9 - விலங்கினம் மனிதனுக்காக என்றால், மனிதன் யாருக்காக?
Part 10 - வணிகம் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?
Part 11 - தலித் முஸ்லிம் என்று இல்லாதபோது, முஸ்லிம் சவரத் தொழிலாளர்களை சில இடங்களில் ஒதுக்கி வைத்திருப்பதேன்?
Part 12 - அண்டை வீட்டாரை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
Part 13 - மானுட வசந்தம் இவ்வுலகில் கிடைக்காதபோது மறு உலகில் கிடைக்கும் என்பது அறிவியலுக்கு பொருந்துமா?
Part 14- இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்கின்றபோது மனிதனை வணங்குவதில் என்ன தவறு?

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்


நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்

இணைந்து நடத்தும்

"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"

நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரை

தலைப்பு

"இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்"

முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்
4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான
ஆதாரங்கள் தரப்பட வேண்டும்.


நாவல்

முதல் பரிசு: ரூபாய 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,
நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும்
சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8
பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான
பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/
ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது
மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்
உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த
ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு
அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்
தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை
வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;
அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்
மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்
அனுப்பிவைக்கப்படும்.

9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,
மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட
வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்
குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட
ஆக்கங்களையும் அனுப்பலாம்.


எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001


டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
(ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ''தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி''

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ''தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி'' மற்றும் ''குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு''

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-04-2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணி இரவு 9:30 மணி வரை குவைத், சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3, ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் 'தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி' மற்றும் 'குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு' நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் ஏ. முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் M.A., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் செயற்பாடுகள், கடந்து வந்த பாதை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார்.
கடந்த மார்ச் (2008) மாதம் சங்கம் செய்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர், எழுத்தாளர், நூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் மீலாது மற்றும் குவைத் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் அடங்கிய ஒலி / ஒளிப்பேழைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையி டுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http: //groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.K-Tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கல்யாணத்துக்கும் கடனுதவி வழங்கும் வங்கி !

கல்யாணத்துக்கும் கடனுதவி வழங்கும் வங்கி !

வீடுகட்ட, கார் வாங்க, உயர்கல்வி படிக்க என்பனவற்றிற்குத் தான் வங்கிகள் கடனுதவி வழங்கி வருவதைப் பார்த்திருக்கிறோம்.

துபாயில் செயல்பட்டு துபாய் இஸ்லாமிய வங்கி கல்யாணத்துக்கும் கடனுதவி வழங்கி வருகிறது.

இக்கடனுதவி பெற குறைந்த பட்சம் 21 வயதுடையவராகவும், குறைந்த பட்சம் 2000 திர்ஹம் மாதந்தோறும் சம்பாதிப்பவராகவும் இருத்தல் அவசியம். இதுதவிர பல்வேறு தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொடர்புக்கு 800 4008

இணையத்தளம் : www.alislami.ae

சத்திய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் டென்மார்க் மக்கள்

எழுதியவர்/உரை:அபூ அரீஜ்

ஒரு சில விசமிகளால் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச்சித்திரங்களை வரைந்த டென்மார்க் நாட்டில், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இறைவனருளால் அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவதாக டென்மார்க்கைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.இவர் கூறுகையில் இந்த மாதிரியான கேலிச்சித்திரங்களை வரைந்தது மிகச் சொற்பமானவர்களே! நாம் எங்கு சென்றாலும் இது போன்ற இஸ்லாத்தின் எதிரிகளைக் காணமுடியும்!

இறைவன் அவர்களின் இத்தைகய கீழ்த்தரமான சூழ்ச்சிகளை முறியடித்து முஸ்லிம்களுக்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துக் கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும் இவர் கூறுகையில், இஸ்லாத்தின் எதிரிகளான இவர்களின் திட்டங்களை விட அல்லாஹ்வின் திட்டம் மிகப் பெரியது என்றார்.

இதன் விளைவாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் முன் எப்போதும் பார்த்திராத அளவிற்கு இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பதாக இவர் கூறுகிறார். இவர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்னால் தாம் இஸ்லாத்தைத் தழுவும் போது டென்மார்க்கைச் சேர்ந்த குடிமக்களாகிய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பத்து அல்லது பதினைந்து நபர்கள் இருந்ததாகவும் இறைவனருளால் தற்போது அந்த எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் பெருவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் நான்கு பேர் தம்முடைய அலுவலகத்திற்கு வந்து ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்.நபி (ஸல்) அவர்களைக் கேலிச் சித்திரம் வரைந்து, இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிடப் -பட்டிருந்த அவர்களுடைய சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் அல்லாஹ்வின் உதவியால் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து விட்டதாகக் கூறுகிறார்.

இவர் கூறுகையில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஒவ்வொரு நாட்டில் வாழக்கூடியவர்களின் மொழிகளில் இஸ்லாம் எடுத்துரைப்பட வேண்டும் என்றும் இது மிக மிக இன்றியமையாத ஒன்றாக நம் முன்னே இருக்கின்றது என்றும் கூறினார்.

அண்ணன் திருமாவளவன் உரை (VIDEO) IDMK கட்சி துவக்கவிழா

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ மருத்துவர். இராமதாசு அவர்கள் உட்பட பலர் பேசிய பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்..

.

"அண்ணன் திருமாவளவன் அவர்களின் உரை"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அண்ணன் திருமாவளவன் அவர்கள்

Tuesday, April 22, 2008

லால்பேட்டை குறித்த வலைத்தளம்

லால்பேட்டை குறித்த வலைத்தளம்

மார்க்கப் பணிகளில் தலைசிறந்த ஊராக விளங்கி வரும் லால்பேட்டை குறித்த இணையத் தளத்தை வடிவமைத்துள்ளார் எம்.ஜே.எஃப். தீன்.

லால்பேட்டை குறித்த தகவல்கள் உலகத் தமிழ் மக்கள் பயனுறும் வகையில் முயற்சி எடுத்துள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வலைத்தள முகவரி

http://www.lalpet.com/

மின்னஞ்சல் முகவரி

mjfdeen@gmail.com

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது




துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.


சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.


'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.


பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநிலச் செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் நிருபர்களிடம் கூறியது:

சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத பாதிப்புகள் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்பில் ரோஸ்டர் முறை என்கிற சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கிறிஸ்தவர்கள் 14-வது இடத்திலும், முஸ்லிம்கள் 28-வது இடத்திலும் உள்ளனர்.

முதுகலை மருத்துவப் படிப்பில் இரண்டு சமுதாயத்துக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் விண்ணப்பிக்கவே முடியாத நிலைக்கு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

பொறியியல், மருத்துவம் கவுன்சலிங்கிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு கடுமையாக இருக்கும்.

தமிழக அரசின் இடஒதுக்கீடு இல்லாமலேயே அரசுப் பணிகளில் 3.2 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். பலதுறைகளில் 4 முதல் 9 சதவீதம் வரை இரு சமுதாய மக்களும் பணியில் இருந்ததை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சிறுபான்மை மக்களுக்கு உதவுவதாக் கூறி அளிக்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீடு முற்றிலும் ஏமாற்று வேலையாக இந்தக் கூட்டம் கருதுகிறது.

அண்மையில் நியமிக்கப்பட்ட 2.5 லட்சம் அரசுப் பணியாளர்களில் கிறிஸ்தவர்கள் 2.5 சதவீதமும், முஸ்லிம்கள் .5 சதவீதமும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

ரோஸ்டர் முறைக்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அரசின் தவறான சட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில் 10 ஆயிரம் அரசுப் பணிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்று திரட்டிப் போராட உள்ளோம்' என்றார் அவர்.

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல்

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல்

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல் வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் தேரா ஃபாத்திமா மஸ்ஜிதில் நடைபெற்று வருகிறது.

தமிழில் நடைபெற்று இந்நிகழ்ச்சியினை துபாய் தமிழ் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து குறித்த மேலதிக விபரம் பெற 04 2716049 / 050 703 1059

IDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.

.

"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மேடையில் தலைவர்கள்

Monday, April 21, 2008

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

தமிழகத்தில் இந்தோ - ரஷிய மருத்துவமனை தொடங்க வேண்டும்

டாக்டர் மீர் முஸ்தபா உசேன் வலியுறுத்தல்

ரஷியாவில் மருத்துவம் படித்து விட்டு தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்தோ - ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று டாக்டர் மீர் முஸ்தபா உசேன் கூறினார்.

கருத்தரங்கு

ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனம் மற்றும் ரஷியாவில் உள்ள ஸ்டவராபோல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ரஷியாவில் மருத்துவம் படிக்க மாணவர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஏ.ஜே. அறக்கட்டளை சார்பில் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்வி படிப்பது குறித்து கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அபுபேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவன தலைவர் ஏ. அமீர்ஜஹான் தலைமை தாங்கினார். ரஷிய நாட்டின் ஸ்டவரோபோல் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் ஸ்டோயனா வி சமன்ஸ்கயா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

அங்கீகாரம்

உயர்கல்வி, வேலைவாய்ப்புக்காக மேற்கத்திய நாடுகளையே சார்ந்திருந்த இளைஞர்களின் பார்வை தற்போது ரஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்கத்திய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் ரஷியாவில் உள்ள 3 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற 10 பல்கலைக்கழகங்கள் தற்போது ரஷியாவில் உள்ளன.

வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், அந்த பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளதா ? என்பதையும், ஆங்கில வழிக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படுகிறதா ? என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு வருபவர்களுக்கு இங்கு சரியான மரியாதை தரப்படுவதில்லை.

முன் வர வேண்டும்

அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக இந்தோ - ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும். அங்கு படிப்பு முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு வேலை கொடுப்பதற்கும், பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனை உபயோகமாக இருக்கும். இதற்கு ரஷியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் முன் வரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் ரஷிய மருத்துவ கல்லூரிகளில் பயிலும் தமிழக மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
A J TRUST EDUCATIONAL CONSULTANCY
Crescent Court Building
No 963 Poonamallee High Road
Chennai 600 084
Tel / Fax : 044 2661 4485 / 3295 9991
Mobile : 93 828 62393 / 98 406 52729 / 93800 05652
ajtrustchennai@yahoo.com
najeerul2003@yahoo.co.in
www.medicaleducationindiarussia.org

துபாயில் தலைமைப் பண்பை வளர்க்க ஒரு பயிற்சி முகாம்

துபாயில் தலைமைப் பண்பை வளர்க்க ஒரு பயிற்சி முகாம்

Center for Information & Guidance India (CIGI) is a non-profit, non-governmental organisation working for the educational and social upliftment of the community. We conduct various programmes for chidlren and adult which are aimed at comprehensive development of our community and the socity in general. One such programme which is being organised by CIGI is "Career Clinic" and "Differential Apptitute Test" (DAT) for Children. We receive our mentors and trainers from CIGI Headquarters in India to be part of these programmes.

Dr. P.T.Abdul Aziz a well known Orator and Trainer who is 'the person' behind the successful grassroot level programmes like 'Vijayabheri' which has changed the face of Malapuram district in the educational front, is currently in Dubai.

He has agreed to do a special session for the CLP in the upcomming CLP session. Due to his presence we are delighted to annonce this session as a SPECIAL CLP without any of our regular modules. It will be worth listening to Dr. Aziz who is famous for his ' The Common Man' approach through his wit and vigour.

Date: Wednesday, 23rd April 2008
Venue: Flora Hotel Apartments, Nasser Square, Deira
Time: 8:00PM

Please come early and be part of this wonderful session which will impart knowledge and training of how to make our community better and brighter!


CIGI CLP - Creating Responsible Leaders for the Community...

For CLP Implementation Team
Ashraf Thayyil
Tel: +9714 282 2890
Fax: +9714 282 5535
Mobile: +97150 453 4427

ashraf.thayyil@gmail.com

மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை

மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை


புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.





http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_newsbulletin.shtml

ஏர்வாடியில் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்.



நெல்லை மாவட்டம், ஏர்வாடி மெயின் ரோட்டில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள செலக்ட் சப்பல் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இத்தெருவில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பெண்கள் கடை வீதிக்கு செல்லும்போது இம்மதுபான கடையில் மது அருந்திவிட்டு, குடிகாரர்கள் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகள் கூறுவதோடு அப்பகுதி போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு செய்கின்றனர்.

இக்கடைய அகற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உரிய நபர்களிடம் பலதரப்பினர் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இக்கடையை அகற்றிட வலியுறுத்தி ஏர்வாடி த.மு.மு.க. இக்கடையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏர்வாடி கிளைத் தலைவர் மாஹின் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், வட சென்னை மாவட்ட தலைவர் ஹமீது, நெல்லை மாவட்ட துணை செயலாளர்கள் அன்சர் மற்றும் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் சர்வ கட்சி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர். மதுபானக் கடைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி: நெல்லை உஸ்மான்

சவுதி அரேபியாவில் கிரஸெண்ட் பள்ளி உடனடி சேர்க்கை

Dear Brothers, (Assalamu Alaikkum)

An excellent opportunity for those who seek to provide the best education for their sons including Islamic teachings.

Crescent School offering international teaching methodology. You can make on-spot admission with the delegation visiting Riyadh on 21st and 22nd April at Ramad East Hotel - Batha.

Consult with your family members right now and decide instantly.

Anbduan,
Jafar Sadiq


FOR YOUR SON ONLY ……!

Please spend a few minutes in the interest of your son and answer the questions below!

1. Do you have a school going son?

2. Do you aspire to provide a quality education to your son?

3. Is it your desire to make him an all rounder – Equally good in academics, games & sports, extra-curricular activities, above all a good human being?

4. Are you eager to see that your son grows in a religious atmosphere?

5. Do you feel that you have no time to look after your son?

6. Do you think that you have to pay a huge fee to put your son in a residential school?

If the answer is “YES” to all the above questions,
please read further……….

 Crescent School, Vandalur, Chennai, India is a forty year old, fully residential, Matriculation, Higher Secondary, IGCSE school.

 It is an International school where children from all over India and abroad stay and study together in a student friendly atmosphere. The school is the recipient of British Council’s International School Award.

 Well-trained and experienced staff members with innovative teaching methodologies, world-class teaching and learning programmes and facilities, special arrangements for academically weak boys and good results – All these features provide good academic atmosphere.

 Swimming, Tennis and facilities for all games; Spare time activities like car driving, martial arts etc; Various Clubs, Youth Movements like N.C.C, N.S.S, Scouts, Duke of Edinburgh Award – All these programmes will make your son an all rounder

 Prayer, Fasting, Qur’an Reading and Value education are part of our system and thus facilitate religious atmosphere

 Comfortable hostel, Well balanced & Nutritious food, 24 hour Medical center and caring resident teachers

 This is a “put and forget” school where we look after the academic, physical, mental and spiritual well being of your son

 All these facilities are available to your son at an affordable cost – a sum which is more or less equal to what you spend for a day school at Emirates

*********

Interested ..????

Contact us

for Spot Admission
RAMAD EAST HOTEL
AL BATHA
RIAYDH
DATED: 21 & 22/04/2008
CONTACT MBL: 0551038810


For Further Details Contact:
Crescent School
Vandalur, Chennai – 600 048 . India

Phone: +91-44-22750350, 22750351 Fax: +91-44- 22750391
Email: crescentschool@vsnl.com Website: www.crescentschools.info

*******

Sunday, April 20, 2008

துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி

துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி

துபாயில் சென்னை கிரஸ்ண்ட் பள்ளி நிர்வாகத்தினர் 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தாவூத்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். சென்னை கிரஸண்ட் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

மேலும் விபரம் பெற 050 644 04 15 / 050 51 96 433

துபாயில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

துபாயில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

MR. M.S. JALEEL,
Chief Career Consultant &
Resident Counselor,
CIGI –HQ,
Career Presenter in TV Channels and Radios
[Asianet [edutime], Kairali [career pulse],
Asianet Radio- Dubai, AIR-Kannur and Kozhikode]
Will be available on-air at
Asianet Radio
to answer your queries


On 24th April 2008 (Tuesday at 11.15 am -UAE time)
--------------------------------------
Mr. Jaleel will also available
at
Career Expo 2008
At Sharjah Indian Association (on 25th April 2008)
&
Karama Centre Dubai (on 26th April 2008)
&
DAT Assessment Test and Counseling (on May 02nd & 03rd 2008)
At Sharjah Indian School
Mr. Jaleel is………………..
(MSc Applied Psychology, MA History, B.Ed, PG in Journalism)
(Teacher –Trainer- Counselor-Media presenter)
Trainer for Higher Secondary Teachers under department of Higher Secondary Education, Govt. of Kerala;
Career Presenter in TV Channels and Radio [Asianet [edutime], Kairali [career pulse], Asianet Radio- Dubai, AIR-Kannur and Kozhikode]
Author - Career Guidance Training Manual for Rajiv Gandhi National Institute for Youth Development [RGNIYD], Chennai. [a UN funded Project to train teachers in Tamilnadu]
Author - Career Handbook for the Department of Higher Secondary Education, Govt. of Kerala.
Trainer for Career Guidance for VHSC teachers under VHS Department, Govt of Kerala.
Trainer for Career Guidance for college teachers under NSS Calicut University.
Script Designer and Career Program head for PRESS4 [CD Magazine]
Trainer and Designer of Career Module for RGNIYD, Chennai.
Trained in TA, MBTI and TCI. Teacher, Editor & Writer
Regular contributor to Career Columns.

துபாயில் தொழிலாளர் பிரச்சினை தீர்க்கும் நடுவம் துவக்கம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்டு நிறுவனம் துவக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள நிறுவனங்கள் தான் (Contracting Companies). இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது குறைந்த சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு தருகிறார்கள். சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் அல்லது 14 மணி நேரங்கள் பணிபுரிகிறார்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிக மிக குறைவாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களிலும் வேலை செய்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியினை தருகிறது. அத்துடன் தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடங்களும் அடிப்படை வசதி இல்லாத அளவிற்கும் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் செய்யும் இத்தகைய தவறுகளால் பல பிரச்சனைகளை இங்குள்ள தொழிலாளர்கள் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது. சென்ற சில மாதங்களாக துபாய், அஜ்மான், ஷார்ஜா போன்ற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை வசதி இல்லை, ஆறு மாத சம்பள பாக்கி, அறைகளில் மின்சாரம் இல்லை, தங்கி இருக்கும் பகுதிகளில் சரியான தண்ணீர் வசதி இல்லை மற்றும் இன்னும் பல காரணங்களை காட்டி சாலைகளில் இறங்கி போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டது துபாய் அரசாங்கம்.

அடிப்படை தொழிலாளர்கள் இல்லை என்றால், துபாயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி விடும் என்பதினை கருத்தில் கொண்ட துபாய் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி சோனாப்பூர் பேருந்து நிலைய பகுதியில் நிரந்தரமாக தொழிலாளர்கள் குறை தீர்க்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினை (Permanent Committee for Labour Affairs (PCLA) 18.4.08 வெள்ளிக்கிழமை மாலை அன்று பல தொழிலாளர்கள் முன்னிலையில் துவங்கியது. இந்நிகழ;ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மேஜர் ஜெனரல் முஹம்மது அஹமது அல் மாரி அவர்கள் (Major - General Mohammed Ahmed Al Marri - Director of the Dubai Naturalisation and Residency Department and Chairman of PCLA) அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை எற்பட்டாலும் எங்களிடம் முறையிடலாம், வேலை நேரம் அதிகம் நிறுவனங்கள் தருகிறது, சம்பள பாக்கி, அடிப்படை வசதி குறைவு இது போல் என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம் (Relevant Department) கூறுவோம். ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை சரிப்படுத்த எங்களின் இந்த நிறுவனமானது முயற்சியினை மேற்கொள்ளும். தொழிலாளர்களின் வசதியினை கருத்தில் கொண்டு மாலை நேரத்திலும் எங்கள் தொண்டு நிறுவனம் பணி செய்யும். அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து குறை சொல்வது போன்றவைகளை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அடிப்படை தொழிலாளர்களுக்கு கற்றும் தரும் பணியிலும் இந்த நிறுவனமானது செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது சோனாப்பூரில் துவங்கி இருக்கிறோம் அதன் பின் ஜெபல் அலி, அல் கூஸ் போன்ற பகுதியிலும் மிக விரைவில் துவங்க உள்ளோம் என்றும் சொன்னார்.

இந்த துவக்க நிகழ்ச்சியில் இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சார்ந்த அரசுத்துறை (Government Diplomats) அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பாகிஸ்தான் தூதரகத்தினை சார்ந்த முஹம்மது வாஷின் (Mohammed Waseen – Welfare Consul at the Pakistani consulate in Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிறுவனமானது தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காகவும், மற்றும் மகிழ்வுடன் தொழிலாளர்கள் துபாயில் இருப்பதற்கான அனைத்து வசதி வாய்ப்பினை தரும் என்றும் கூறினார்.

நன்றி : கலீஜ் டைம்ஸ் 19.4.2008 முதல் பக்க செய்தி

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Saturday, April 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி


துபை மண்டல இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சோனாப்பூர் கிளையின் சார்பாக, சோனாப்பூர் பலிதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.4.08 வெள்ளிக்கிழமையன்று அஸர் முதல் இஷா வரை இஸ்திமா நடைபெற்றது. துபை மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சகோதரர்.கொடுங்கையூர். மொய்தீன் அவர்கள் தலைமையெற்க, சகோதரர். மேலப்பாளையம். மெளலானா அவர்கள் கிராஅத் ஓதினார். இஸ்திமா நிகழ்ச்சியினை சகோதரர். பரமக்குடி. எ.ஏஸ். இப்ராஹீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முதல் அமர்வில் சகோதரர். கொடுங்கையூர். அமீர் சுல்தான் அவர்கள் "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில் துபை முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக 22.2.2008 அன்று நடைப்பெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்த கொடுத்த சகோதரர்களுக்கு, இரத்தம் தானம் செய்ததற்கான அடையாள அட்டையானது சகோதரர். சுலைமான் ஹாஜியார் அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை சோனாப்பூர் கிளை முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி சகோதரர். திருச்சி. நியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


சகோதரர். நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சியானது அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துபை மண்டல முஸ்லிம் முன்னேற்றக்கழக பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சோனாப்பூர் பகுதியில் பல நாட்டை சார்ந்த தொழிலாளர்கள் வசிப்பதால், மொழி தெரியாவிட்டாலும் தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை ஆர்வமுடன் கேட்க வேண்டி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் அல்கூஸ் போன்ற பகுதியிலிருந்தும் ஏராளமான சகோதர உள்ளங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மாணவர்களுக்கு உதவும் இணையதளம்

இணையதள முகவரி: www.educationsupport.nic.in

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம். கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.

அன்புடன்,
மு.சாதிக்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்


<படத்தில் காண்பது றிஷானாவின் வீடும், குடும்பமும்>

சவூதி அரேபியா நீதிமன்றமும் மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்கின் எதிர்காலமும் இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குப்போய் வேலைக்க மர்த்தப்படுவதால் அல்லற்படும் ஏழைப்பெண்களின் துன்பக் கதைகளில் 19வயதுடைய றிஷானா நபீக்கின் கதை மிகவும் பரிதாபமானது என்று அந்த ஏழைப்பெண்ணுக்கு உதவ வரும் இரக்கநெஞ்சங்களுக்குப் புரியும். உண்மையிலேயே 17வயதுடைய (04.02.88) றிஷானா,23வயது என்று பதிக்கப்பட்ட ( 02.02.1982) அடையாள அட்டை கொடுக்கப்பட்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் ஏஜன்சிமூலம் 2005ம் ஆண்டு அனுப்பப்பட்டார். 04.05.2005ல் வீட்டு வேலைகளுக்காக திரு திருமதி அல்- ஒட்டெபி அவர்களின் வீட்டிற் சேர்ந்தார். 05.22.05ல் அந்த வீட்டின்நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

றிஷானாவுக்குத் தெரியாத அரேபிய மொழியில் வாக்குமூலம் எடுக்கப்பட்டு றிஷானா அந்த 4 மாதகுழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக ஆவணம் தயாரிக்கப்பட்டது. றிஷானாவுக்காக ஒரு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. றிஷானவுக்குப் புரியும் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளரும் கொடுக்கப்படவில்லை. குழந்தையை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதால், றிஷானாவின் கழுத்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டு மரணதண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது. போனவருடம் இலங்கையைச் சேர்ந்தவர்களான பல இளைஞர்கள் பகிரங்கமாகக் குழுத்து வெட்டப்பட்டு மரணதணடனைக் கொடுமைக்காளானார்கள்.

றிஷானா என்ற ஏழைப்பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் உலகிற்குத்தெரிய வந்ததும் அகில உலகம் பரந்த மனித உரிமைவாதிகள் றிஷானாவுக்குக் கொடுக்கப்பட்ட மரணதண்டனை நிறுத்தக்கோரிப்போராட அணிதிரண்டார்கள். அப்பீலுக்கான பணம் பல ஸ்தாபனங்கள், சாதாராண மனிதர்களாற் திரட்டப்பட்டது. றிஷானாவின் வழக்கு மேற்கோர்ட்டுக்கு எடுக்கப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி, அந்த விடயத்தைப் பழையபடி றிஷானாவை விசாரித்த கோர்ட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். றிஷானாவுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதியின் கையில் பழையபடி அந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டதும் றிஷானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரைக் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் ஆஜராக வில்லை. இது எப்படியிருந்தாலும், சவூதி அரேபிய சட்டங்களின்படி அங்கு "ஷரியத் சட்டம்" என்ற இஸ்லாமியச் சட்டம்' நடை முறையில் இருக்கிறது. அச்சட்டத்தின்படி இறந்தவிட்ட குழந்தையின் தாயார் மன்னிப்புக் கொடுக்காத வரைக்கும் கோர்ட்டார் எதுவும் செய்து றிஷானாவுக்கு விடுதலை கொடுக்க மாட்டார்கள். வழக்குமன்றத்தால் எடுக்கப்படும் மனித உரிமை விவாதங்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது தெரியாது. 'பழைய குருடி கதவைத்திறடி' என்ற பழமொழிக்கேற்ப, பழைய நீதிபதி பழையகோர்ட் என்று றிஷானாவின் எதிர்காலம் ஒரு பெரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறது. அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், மதிப்புக்குரிய றோஹித பொகலாகமவைச் சந்தித்து, றிஷானாவின் விடயம் பற்றி விசாரித்தபோது, ''இந்த விடயம் பற்றி சவூதி அரேபியாவின் இளவரசருடன் பேசினேன், சவூதி அரேபியாவில் 'ஷரியத் சட்டம்' நடைமுறையிலிருப்பதால், இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காதவரை கோர்ட்டாரால் எதுவும் செய்யமுடியாது. தயவு செய்து, றிஷானாவின் விடுதலைக்காக நீங்கள் செய்யும் பிரசார வேலைகளைத் தொடருங்கள். இறந்த குழந்தையின் தாயிடம் பாவமன்னிப்பைக் கோருங்கள். உலக மயப்படுத்தப்பட்ட உங்கள் பிரசாரம்தான் ஏழைப் பெண்ணான றிஷானாவின் விடுதைக்கு உதவி செய்யும்'' என்று கேட்டுக்கொண்டார். இரக்க மனம் கொண்ட மனிதர்களாகிய நாங்கள் அத்தனைபேரும், ' தாயே, இறந்துவிட்ட உங்கள் குழந்தைக்காக நாங்கள் எங்கள் துக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறோம், கடவுள் பெயரால் பெரிய மனது கொண்டு றிஷானாவை மன்னித்து விடுங்கள்'' என்று அந்தத் தாயை மன்றாட்டமாய் வேண்டிக் கொள்ளவேண்டும். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைச் செலுத்தும் அதேநேரம், வறுமையின் காரணமாக இந்தச் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ஏழைப்பெண்ணான றிஷானாவின் விடுதலைக்கும் போராடுவோம். அந்தக் குழந்தைக்குப்பால் கொடுக்கும் போது, தொண்டையில் பால் சிக்கி இறந்ததற்கு றிஷானாதான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குழந்தைக்குப்பால் தொண்டையில் சிக்கியதும், றிஷானா குழந்தையின் நிலைகண்டு உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டதாகவும் அதற்கிடையில் குழந்தை இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைக்கு ஏற்கனெவே பால் குடிக்கமுடியாத பிரச்சினை தொடர்ந்த ஏதும் வைத்தியச்சிக்கல்கள் இருந்ததா என்று ஒன்றும் தெரியாது. குழந்தையை பிரேத விசாரணை (போஸ்ட்மோர்ட்டம்) செய்யவில்லை. அத்துடன், தாய் தகப்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னை வேலைக்கு அமர்த்தியவீட்டார் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வாக்குமூலம் எடுத்ததாக றிஷானா குறிப்பிட்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. காலை மூன்ற்மணியிலிருந்து இரவு பதினொருமணிவரை தான் வேலை வாங்கப்பட்டதாகவும் தனது பெற்றோருக்கு றிஷானா எழுதியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டு வேலைக்கு என்றுபேசி ஆள் எடுத்து குழந்தை பார்க்கும் அனுபவமில்லாத இளம் பெண்ணிடம் பலவேலைகளையும் குழந்தைப்பார்க்கும் வேலையும் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். மத்திய தரைக்கடல் நாடுகளில் இப்படி எத்தனையோ இலங்கைப் பெண்கள் மிகவும் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களில் றிஷானாவின் துயரும் ஒன்று. அனாதாராவாக அல்லற்படும் இப்பெண்ணுக்கு மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் தயவுசெய்து உதவுங்கள். இறந்த குழந்தையின் தாயின் மன்னிப்பைக்கேட்டு ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதுங்கள். இந்தப் பெண்ணுக்கு உதவுவது உங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் ஆசியைத் தரும். ஒருஉயிரைக் காப்பாற்ற நீங்கள் எழுதும் ஒருகடிதம் ஊன்றுகோலாகவிருந்து இந்தப்பெண் விடுதலையாகும் நற்பணியைச் செய்யுங்கள்.

இறந்த குழந்தையின் தாயிடம் றிஷானாவுக்காக மன்னிப்புக் கேட்கும் கடித்தத்தைப் பின்வரும் விலாசத்துக்கு எழுதவும்.

Clemency for Rizana Nafeek
Mr. Naif Jizijan Khalaf Al-Otebi
c/o Sri Lankan Embassy
PO Box 94360, Riyadh-11693
Saudi Arabia.

சவுதி அரேபிய இந்திய தூதரகமும் தூதர் ஃபரூக்கும் உரங்குகின்றார்களா?



திரு. M.O.H. ஃபரூக் அவர்கள்



வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை

அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி : விமர்சனம் - விளக்கம்