Saturday, August 05, 2006

பாரத் பிதா பி.ஜே கீ ஜே! ஆதாரங்களுடன் ஓர் அலசல்

بسم الله ألرحمنا الرحيم
Important Note : This is an article based on Facts, to view the evidence please click the appropriate links highlighted. If any one wants to recive it by mail please send mail to tmpolitics@gmail.com
முக்கிய குறிப்பு : இந்த கட்டுரை ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது ஆகவே குறித்து காட்டப்பட்டுள்ள இடங்களில் சொடுக்கி ஆதாரங்களை படிக்கவும். ஆதாரங்களை மின்னஞ்சலில் பெற விரும்புபவர்கள் tmpolitics@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.

(1736)وَلاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولـئِكَ كَانَ عَنْهُ مَسْؤُولاً

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ
அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக(மறுமையில்)செவிப்புலனும்,பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன்17:36)

وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال” كفي بالمرء كذبا أن يحدث بكل ما سمع” رواه مسلم

எவன் ஒருவன் தான் கேட்டதை எல்லாம் பரப்பக் கூடியவனக இருக்கின்றனோ, அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சாட்சியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி)ஆதாரம்: முஸ்லிம்


அன்பு சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுவாக ததஜ-வினர் தன்னை எதிர்ப்பவர்களை நோக்கி வீசும் குற்றசாட்டுக்கள், பெண்கள் தொடர்பு அல்லது பொருளாதார மோசடி இந்த இரண்டையும் சேர்த்தோ தனித்தியாகவோ எதிரியின் மீது வீசுவது வழக்கம். தற்போது இதற்க்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டாதால் இந்த இரண்டு குற்றசாட்டுகள் மக்கள் மத்தில் எடுபடவில்லை. அதனால் தற்போது ததஜ-வை எதிர்க்க கூடியவர்களை எதாவது ஓர் இயக்கத்தில் இணைத்துவிடுவது இவர்களின் வாடிக்கையாக மாறிவறுவது கண்டு நமட்டு சிரிப்புதான் வருகின்றது. தங்களை விமர்ச்சிக்கும் விமர்ச்சனங்களுக்கு பதில் சொல்லமுடியாமல் விமர்ச்சனம் செய்பவர்களை எதாவது இயக்கத்துடன் தொடர்புபடுத்தி விமர்ச்சனத்தினை தாக்கத்தை குறைப்பதற்காக இந்த வழிமுறையை பின்பற்றிவருகின்றார்கள் இன்ஷாஅல்லாஹ் இதுவும் அவர்களுக்கு கைகூடாது.

இதன் தொடர்ச்சியாக நம்மை தமுமுக-வென்றும், சகோ. ரைசுத்தீன் அவர்களை விடியல் வெள்ளி என்றும் பறைசாற்றுகின்றனர். இதை அவர்கள் நிருப்பிக்க தயாரா? நிருப்பிக்க முடியுமா? சகோ. ரைசுத்தீன் அவர்களுடன் ததஜ கிழக்கு மண்டல தலைவர் முனீப் அவர்கள் கொஞ்சி குலாவிகொண்டிருந்த காலத்தில் அவருக்கு தெரியவில்லையா?
அல்லது மிக மிக படு இரகசியமாக நடத்தப்பட்ட பாக்கரின் தம்மாம் மற்றும் அல்-ஜுபைல் விஜயத்தின் போது ரைசுத்தீன் அவர்களை உடன் வைத்திருந்தீர்களே! அப்போது அவர் விடியல் வெள்ளியென்று தெரியவில்லையா?
ஏன் பணம்கொழிக்கும் 'டான்' டிவி நிகழ்ச்சிக்கு விளம்பரம் மற்றும் எடிட்டிங் வேலைகளை காசு வாங்காமல் இலவசமாக செய்து கொடுத்தாரே அப்போது தெரியவில்லையா? அவர் விடியல் என்று.
தொடர்ந்து இவ்வாறு அவதூறுகளை வெளியிடுவிர்கள் என்றால் பொறுமையாக இருங்கள் பாக்கர் சௌதி விஜயத்தில் இரகசியமாக நடத்திய கூட்டங்கள் அந்த கூட்டத்தில் சௌதி அரசாங்கத்திற்கும் இந்த மன்னர் குடும்பத்தினருக்கும் எதிராக பேசிய பேச்சுக்களையும், ஜாலியாத்தையும அதன் முதிர்களையும் பற்றிய அவரது கீழ்த்தரமான விமர்சனங்களையும் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு பரிந்துரைப்போம் என்பதனை தாங்களின் கணிவான கவணத்திற்க்கு வைக்கின்றோம். (இப்படி நாம் செய்தால் அதனால் பாக்கர் எந்தவகையிலும் பாதிக்கபடமாட்டார் - பாதிக்கப்படுவது ததஜ-வின் குஞ்சுகள் தான் எனவே அந்த காரியத்தை இதுவரை நாம் செய்யாமல் இருந்து வருகின்றோம்)

சமீப காலமாக ததஜ வின் சில விசிலடிச்சான் குஞ்சுகள் களவாடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தங்களது எழுத்து திறமையை பறைசாற்றும் விதமாக முகமூடியனிந்து கொண்டு தங்கள் தலைவரைப்போல் ஆதாரங்களற்ற வீர வசனங்களை அள்ளி வீசி வருகின்றார்கள் அவ்வாறு நமக்கு வந்த மெயிலில்,

//இவர்கள் பொய்யர்கள்தான் என்பதற்க்கு இவர்களே ஆதாரம். இதோ இவர்களின் பதிவிலிருந்து... இந்தியாவில் எங்கேயாவது குண்டு வெடித்தாலோஇ ....... அது சம்மந்தமாக யாராவது கைது செய்யப்பட்டாலோ அதற்க்கும் சகோ.பிஜெ அவர்களுக்கும் தொடர்பு என்று இவர் கற்பனை செய்து ஒரு கதையை உண்டாக்கி அதை வெளியிட்டு ஆனந்தமடையக் கூடியவர். இவர் ஒரு வகையான சைக்கோ என்று கூட சொல்லாம்.// என்று எழுதியுள்ளார்கள்.

மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி நாம் எந்த பதிவுமிடவில்லை அதற்க்கு பிஜெ காரணம் என்று எந்த பதிவுமில்லை நாம் சைக்கோ இல்லை என்பதனை தகுந்த மருத்துவரைக்கொண்டு நிருப்பிக்க தயாராக இருக்கின்றோம் இவர்கள் பொய்யர்கள் இல்லை என்பதனை நிருப்பிக் தயாரா? நாம் சொல்வது முஸ்லிம்களை மையப்படுத்தி சதி முறியடிப்பு, வெடிகுண்டு கைப்பற்றபட்டது என்ற செய்திகளுக்கு பின்னால் பிஜெ உள்ளார் அதேபோல் நீண்ட நாட்கள் போலிஸினால் தேடபட்டுவந்த ஏர்வாடி காசிம் உள்பட பலர் கைது செய்யப்பட்டதற்கு பி.ஜே அவர்களின் தொடர்பு உண்டு என்று நாம் கூறவில்லை பிஜெ அவர்கள் வெடிகுண்டு வழக்குளை விசாரித்த சிறப்பு புலானாய்வு பிரிவு காண்காணிப்பாளார் (DSP) யிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தான்தான் இவர்களை காட்டி கொடுத்ததாக. (CLICK HERE)

இதைக் கண்ட பின்பும் நம்பாமல் பி.ஜே வாழ்க என்று கத்தினால் ...? இவர்கள் மூளை கழுவி-விடப்பட்டவர்கள் என்பதற்க்கு இதைவிட மிக பெரிய ஆதாரம் என்ன இருக்கமுடியும். பிஜெ வருடம் முழுவதும் உதவிசெய்வதாகவும் அதற்காக பொருளாதாரத்தை திரட்ட சிறைவாசிகள் சிறைவாசிகளின் குடும்பத்தினர் ஆகியோர்களிடம் கடிதம் வாங்கி அதை வைத்து பல இலட்சங்கள் வசூல் செய்தார் அதற்க்கு இந்த நாள்வரை கணக்குகளை யாரிடமும் காண்பிக்கவில்லை அதுமட்டுமல்ல சில மாதங்கள் உதவி செய்துவிட்ட அந்த குடும்பங்களை அப்போவென்று விட்டவிட்டார் என்று எழுதினால் மிகபெரிய அறிவாளி போன்று சிறைவாசிகளுக்கு உதவிசெய்தற்கு ஆதாரம் தந்துள்ளார் என்றும் நாம் வைத்த வாதம் நமக்கு எதிராக திரும்பியுள்ளது என்றும் எழுதியுள்ளார். இவர்கள் தமிழைப்படித்து அதைகூட புரியமுடியாத அளவிற்க்கு உள்ளனர் என்பதனை நினைத்து வியப்புக்குள்ளாகிறோம். நாம் எழுதியதற்க்கு கணக்கை எங்கு காண்பித்தார்? இப்போதும் கேட்கின்றோம் தொடர்ந்து செய்த இரகசிய வசூலின் கணக்குகளை மக்கள் மன்றத்தில் வைக்க தயாரா? அதன் செலவுகளையும் வைக்க தயாரா? ததஜ-வின் மாநில தலைவர் தயாராக இருக்கின்றாரா?

தானைத்தலைவன் பிஜெயும் தன்மானத் தளபதி பாக்கரும்....
பாக்கர் ரத்னசபாபதியை கோவையில் சந்திக்கவில்லை என்பதனை பத்திரிக்கையாளார்கள் குழுமத்தில் அறிவிக்க தயாரா? பாக்கரும் பிஜெயும் நெருக்கமாக உள்ளனரவாம் அதனால் சாத்திமில்லையாம், கடந்த கால வரலாற்றை திரும்பிபாருங்கள். ஹாமித் பக்ரி கைதின் போது பக்ரி அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பின் மேலாண்மை குழுவின் உறுப்பினர் அதாவது பிஜெக்கு சரிசமான பதவி அவரும் மேலாண்மை குழுவின் உறுப்பினர் தான். மேலாண்மை குழு என்றால் அது மாநிலத்தலைமை நிர்வாகிகள் செய்யும் தவறுகளை கண்டிக்கும் மற்றும் நடவடிக்கை ஏடுக்கும் அதிகாரம் கொண்டு குழுவாகும். ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டவுடன் அவருக்கும் நமக்கும் எந்த தொடர்பில்லை என அன்றைய தினம் அனைத்து பத்திரிக்கைகும் அறிக்கை வழங்கினார்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாத் மாநிலத்தலைவர். மூலமாக.


ஹிட் லிஸ்ட்டில் பிஜெ பெயர்வர காரணம் சைதை அஹமது அலி எழுதியது காரணம் அல்ல உண்மையான காரணம் என்னவென்று இந்த பதிவை முழுமையாக படித்து முடிக்கும் போது தெரிந்துகொள்வீர்கள்.

ததஜவின் தானைத்தலைவரால் ஏவிவடப்பட்டவர்கள் எழுதியுள்ளார்கள், நாம் ஏசி அறையிலிருந்து கதை எழுதுகின்றோமாம், என்ன அருமையான கண்டுபிடிப்பு நாம் கதை
எழுதவில்லை சகோதர சமுதயத்தை தட்டியெழுப்ப கூடிய கடந்த கால வலாற்று சம்பவங்களை டாக்குமெண்ட் ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில வைக்கின்றோம் இனி வரக்கூடிய காலங்களில்
மூதரிஞரின் முகமூடி கிழிக்கப்படும வகையில் மேலும் ஆதாரங்கள் வைக்கப்படும். மக்கள் மத்தியில் நமது எழுத்துக்களுக்கு உள்ள தாக்கம் என்னவென்று ததஜவின் முனீப் போன்ற சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்கள் அவர்கள் வசூல் செய்ய செல்லுமிடங்களில் நேற்றும் இன்றும் எப்படியென்று...


பொதுவாக நாம் எது எழுதினாலும் ஆதாரம் அல்லது நமது நம்பகமானவர்கள் தரும் செய்தியினை தீரவிசாரித்து அதற்குரிய ஆதாரங்களுடன் தான் எழுதுவோம். நமது ஆக்கங்கள் அனைத்துமே அவ்வகையைச்சார்ந்ததே.

மேலும் கருணாநிதியின் கடந்த ஆட்சியில் காவல் துறையினர் முஸ்லிம் பெண்களிடம் 'பர்தாவை' நீக்கி பார்த்து சோதனை போட்டது (இதை எந்த காலத்திலும் ஜீரணிக்க முடியாதவை மறக்க முடியாதவை) நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன் அதற்க்கு காரணம் என்ன தெரியுமா? அண்ணன் பிஜெ அவர்கள் சிறப்பு புலன் ஆய்வு அதிகாரிகளின் பிடியில் உள்ள போது பாஷh பாய் 'பர்தா' அணிந்து கொண்டு மூன்று முறை கொடுங்கையூர் சென்று வெடிக்குண்டுகள் தயாரிக்கும் வீட்டிற்க்கு சென்று வந்துள்ளார் என்று தெறிவித்தது தான். அதன் காரணமாகவே தமிழகமெங்கும் நமது முஸ்லிம் சகோதரிகளின் கண்ணியம் கழங்கப்படுத்தப்பட்டது. புர்தா அணிந்த பெண்களை சோதனையிட வேண்டும என்ற ஐடியாவை காவல்துறைக்கு கொடுத்ததே ஐயா பி.ஜே அவர்கள் தான் அதற்கு ஆதாரம் கொடுங்கையூர் சம்பவத்திற்க்கு பிஜெ-யின் தொடர்பு கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3328வது பக்கம், இது 24-3-1999ம் ஆண்டு சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 24வது பக்கதிலிருந்து. (CLICK HERE)


இது போன்று தனது பேச்சை கேட்டு குண்டு வைத்தவர்களைம், கொலைகள் செய்தவர்களையும் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக காவல்துறயில் காட்டி கொடுப்பதற்கு மூதறிஞர் பி.ஜே என்றுமே தயங்கியதில்லை அதுபோலவே தன்னை எதிர்பவர்களுக்கு எதிராக எந்த வகையான குற்றசாட்டையும் கூறுவதற்க்கு பிஜெ தயங்கமாட்டார் என்பதற்க்கு கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3331வது பக்கம், இது- சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 27வது பக்கதிலிருந்து..பாஷா பாய் கொள்ளையடிப்பவர், அப்பாவிகளையெல்லாம் கொலை செய்யக்கூடியவர் என்று கூறியது.(CLICK HERE).

கோவை குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பு போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தனது இன்பார்மர்கள் மூலம் காட்டி கொடுத்தது. இன்பார்மரை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கொண்டுபோய் வாக்குமூலம் கொடுக்க ஏற்பாடு செய்தது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3339 மற்றும் 3343 வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 35வது பக்கம் (CLICK HERE FOR PAGE 35) மற்றும் 39வது (CLICK HERE FOR PAGE 39) பக்கதிலிருந்து. ஆச்சரியப்படுவீர்கள் யாரையெல்லாம் இன்பார்மர்களாக பயன்படுத்தினார்கள் என்று.

இராஜ உசேனை மற்றும் ஏர்வாடி காசிமை காட்டிக்கொடுத்தது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3347 மற்றும் 3348 வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 43 வது பக்கம் (CLICK HERE FOR PAGE 43) மற்றும் 44வது பக்கதிலிருந்து (CLICK HERE FOR PAGE 44).

இமாம் அலிக்கு எதிரான வாக்குமூலம். கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3350-வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 46வது பக்கதிலிருந்து(CLICK HERE TO READ). முதல் பாராவை படிக்கவும் இது போன்று தமிழகமெங்கும் இவரது பேச்சை கேட்டு கொலை செய்து விட்டு இவராலேயே காட்டி கொடுக்கப்பட்டு சிறையில் உள்ளவர்கள் ஏராளம் இது குறித்த தகவல்கள் எதிர் வரும் நமது பதிவுகளில் ஆதாரங்களுடன் பதியப்படும் இன்சா அல்லாஹ்.

இங்கு பதியப்பட்டுள்ளவை பானைச்சோற்றில் சில பருக்கைகளே ...விசிலடிச்சான் குஞ்சுகளே நீங்கள் எல்லாம் நேற்று வந்தவர்கள் உங்களுக்கு ததஜ உருவானபின் உள்ள இந்த இரண்டு வருட வரலாறே அறிவீர்கள் உங்கள் மூதறிஞர் பி.ஜே யின் கடந்த கால துரோகங்களை நீங்கள் அறிமாட்டிர்கள் உங்கள் பார்வைக்காக பொதுவில் பதியக்கூடிய சில விசயங்களே பதியப்படுகின்றன. இவற்றை பற்றி உங்கள் தலைமையிடம் கேள்விகள் கேளுங்கள் பதில் வரவில்லையென்றால் உணர்ந்து கொள்ளுங்கள் யார் சமுதாய துரோகி என்று.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து டாக்மென்ட்களும் முறையாக பெறப்பட்டவையாகும். இந்த வழக்கு விரைவாக நடைபெறுவதற்க்கும் தீர்ப்பு விரைவில் பெறப்படுவதற்க்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்-விடம் ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்தனை செய்யுங்கள். எட்டு வருடங்களாக சிறை கொட்டடியில் வாடும் எனது சகோதரனுக்கு கண்ணீர் சிந்தியவானக வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்தவானாக.

குறிப்பு: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்ட எவருக்கும் நான் உதவமாட்டேன் என பிஜெ கொடுத்த வாக்குமூலம் இங்குள்ளது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3350-வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 46வது பக்கதிலிருந்து. இரண்டாவது பாராவை முழுவதுமாக படிக்கவும் பல வருடங்களுக்கு முன்னரே இதைக்குறித்து தெளிவான முடிவெடுத்து விட்டு தேர்தல் சமயத்தில் சிறைவாசிகளை பற்றி ஜெயாவிடம் பேசினேன் என்றும் தீர்மானம் நிறைவேற்றினேன் என்றும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகின்றது. இவர் சொல்வது உண்மையானால் குடந்தையில் நிறைவேற்றப்பட்டு அரசிற்கு அனுப்ப பட்ட தீர்மானத்தின் நகலை வெளியிட சொல்லுங்கள்.

பின்குறிப்பு: ஹசன் என்பவர் பெயரில் சகோ. ரைசுத்தீன் அவர்கள் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் தொடர்புடையவர் என்று மெயில் வந்தது. நமக்கு தெரிந்தவரை அவர் ததஜவுடன் தான் தொடர்பு கொண்டிருந்தார் அது தடைசெய்யப்பட்டுவிட்டதா என்ன? அவர் தொடர்பில் இருந்தவர்கள் ததஜவின் நிர்வாகிகள் தான் அப்படியானால் ததஜ வின் முனீப், தவ்பிக், உஸ்மான் போன்றோர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களா?

ஏசி அறை கதாசிரியர்கள் என்று நம்மை விமர்ச்சிப்பவர்களின் நிலை கடந்த ஜுலை 21-27 உணர்வு (உரிமை10 குரல்-46) வாரஇதழை படித்தால் தெறியும், இந்த உணர்வு இதழில் இஸ்ரேல்-லெபனான் போரின் பிண்ணனி என்ற செய்தி கட்டுரையிலிருந்து மூன்று அரேபிய கைதிகளை விடுதலை செய்தால் மூன்று இஸ்ரேல் வீரர்களை விடுதலை செய்வோம் என்று ஹிஸ்புல்லாஹ்; தலைவர் ஹசன் நஸ்ருல்லா கூறியதாக உள்ளது. அப்படியெனில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ருல்லா அவர்கள் சென்னைக்கு வந்து அரிச்சந்திரர் அலாவுதீனை சந்தித்து பேட்டி கொடுத்து விட்டு ஜிஹாத் பேரரசன் பி.ஜே அவர்களிடம் போர் யுக்திகள் குறித்து ஆலோசித்து சென்றாரா ? அல்லது துப்பறியும் சாம்பு பி.ஜே (உளவுத் துறை நிபுனர் என்பதால்...) தலைமையில் உணர்வு ஸ்பெசல் ரிப்போர்ட் குழுவினர் (யான்பு வை தமாமிற்கு மாற்றி பில் கேட்சை முஸ்லிம் ஆக்கியவாகள்) சென்று பேட்டி எடுத்து வந்தனரா ?

உண்மை: கைதிகளாக பிடிபட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களை விடுதலை செய்யவேண்டும என்றால் இஸ்ரேலின் சிறைகளில் பல ஆன்டுகளாக வாடும் பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவி அரபுச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும என்பது தான் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹமாஸ் ஆகிய இயக்கத்தினரது கோரிக்கை. மூன்று நபருக்கு மூன்று நபர் என்றால் மிக எளிதாக விடுதலை செய்து விட்டு தங்கள் வீரர்களை இஸ்ரேல் மீட்டு சென்றிருக்கும் ஏன் ஒரு நாட்டையே இந்த அளவிற்கு குண்டு வீசி தாக்கி பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவிக்க வேண்டும். குழந்தைக்கு கூட விளங்கிய இந்த விசயம் உளவுத்துறை உணர்வு ரிப்போர்ட்டர்களுக்கு விளங்காமல் போனது ஏன்? தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இந்த செய்தியை தினமும் காண்பிக்கையில் இது போன்று அண்டப் புழகை மீண்டும், மீண்டும் உணர்வு விடாது அடிப்பதன் காரணம் என்ன? ஏசி அறை கதாசிரியர்கள் யார் ? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.
இவ்வளவையும் படித்து விட்டு பி.ஜே என்ன செய்தார்? அவர் தேச பக்தரல்லவா? அதனால்தான் தீவிரவாதிகளை காட்டி கொடுத்தார்...பாரத் மாதா ஜெ.ஜெ கீ ஜே!! வந்தே மாதரம்!! பாரத் பிதா பி.ஜே கீ ஜே!! என்று இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் விரைவில் எழுதுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்..


அன்புடன்
தென்காசி பட்டனத்தான்
இஸ்லாம், முஸ்லிம், லெபனான், சிரியா, பாலஸ்தீன்

1 comment:

சுட்டிப் பையன் said...

இந்துத்துவ சித்தாந்த தலைவர் வி.டி. சாவர்க்கருக்கும், நம் மூதறிஞர் பி.ஜெ அவர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

1. இருவரும் தங்களை நம்பியவர்களை தூண்டி விட்டு வன்முறையில் இறங்குவார்களே தவிர நேரடியாக வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்.
2. தங்களை நம்பியவர்களை காட்டிக் கொடுப்பார்கள்
3. பொய், பித்தலாட்டம், பொய் சாட்சி என மூதறிஞர் பி.ஜெவுக்கு வழிகாட்டி சாட்சாத் வி.டி. சவார்க்கர் தான்.
4. ஒரே ஒரு வித்தியாசம், வி.டி. சவார்க்கர் அந்தமான் சிறையில் பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். பி.ஜெ. இதுவரை சிறைத் தண்டனை அனுபவிக்கவில்லை.