Friday, July 21, 2006

பொய்யன் பி.ஜே மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக

பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக.(அல்குர்ஆன்)



அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்..

17-06-2006 -ந் திகதியிலிருந்து 3 மாதங்கள் அவகாசம் குறிப்பிடப்பட்ட நான் அனுப்பிய விவாத அழைப்பிற்கு நீர் உமது இணையத் தளத்தில் அளித்திருக்கும் பதிலிலிருந்து உமது ஞான சூனியம் தெளிவாகத் தெரிகின்றது.

- முதலில் உம்போன்ற பொய்யர் என்னை சகோதரன் என்று கூறியதற்காக நான் வெட்கப்படுகின்றேன். நீர் உலக மகா பொய்யன் என்பதற்கும், மிகப்பெரும் வழி கேடன் என்பதற்கும் உமது அறிக்கையே போதிய சான்றாகும்.

- அடுத்ததாக நீர் வாய்மையானவர் என்றால் நான் உமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அழைப்பிற்கான பதிலை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது எனது தொலை பேசி மூலமோ அல்லது எனது முகவரி ஊடாகவோ தெரிவித்திருக்க வேண்டும் அதுதான் அறிவுடமை. அதனை விட்டுவிட்டு உமது ஆதரவாளர்களை மட்டும் திருப்திப் படுத்துவதற்காக எனது பெயருக்கு விலாசமிட்டு வெட்கமின்றி உமது இணையத்தளத்தில் இட்டுள்ளமை உமது கோழைத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டுகின்றன.

- நான் அரபு நாட்டுப்பணத்திற்காக கூலி வேலை பார்ப்பவன் என்று நீர் ஏளனமாகக் கூறியுள்ளீர். ஆம் நான் அரபு நாட்டுப் பணத்திற்காக எனது உழைப்பை செலுத்தி அதற்கான கூலியினைப் பெறுவது உண்மையே. நீரோ என் போன்று அரபு நாட்டுப்பணத்திற்காக தனது காலத்தையும், சிரமத்தையும் தியாகம் செய்து உழைக்கும் அப்பாவிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுகின்றீர். இதை எண்ணி இஸ்லாமியன் என்ற வகையில் நான் வெட்கப்படுகின்றேன்.

- விவாதம் நடாத்துவதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அது சவூதி அரேபியாவில் இல்லை என்றும், அது இந்தியாவில்தான் உள்ளதென்றும் கூறியுள்ளீர். அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிப் புரியும் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் இஸ்லாத்தினைப் பற்றி பேச முடியாமல் அந்நிய மதத்தவர்கள் ஆட்சி புரியும் ஒரு நாட்டில்தான் இஸ்லாத்தை பேச முடியும் என்று நீர் கூறியதிலிருந்து உமது முட்டாள்தனம் தெளிவாகின்றதோடு நீர் பேச வருவது இஸ்லாத்தைப் பற்றித்தானா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

- அரபு நாட்டு அறிஞர்கள் எனது கருத்திலேயே இருப்பதாகவும் அவர்களை நடுவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளீர். அல்லாஹ்விற்காகவும் இறையச்சத்துடனும் மார்க்கம் பேசுபவர்கள்தான் அரபு நாட்டு அறிஞர்கள். உம்மைப்போன்று தலைக்கனம் பிடித்து கிறுக்குத்தனமாக இஸ்லாம் பேசுபவர்கள் அல்லர் அவர்கள். (கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை)

- விவாதத்திற்கு இருதரப்பும் சம்மதத்தின் பின்புதான் விவாதத்திற்கான தலைப்பு பற்றி தீர்மானிக்கப்படும் எனும் அடிப்படை கூட தெரியாதவராக உம்மையே காணுகின்றேன்.

- உமது பதிலில் ஒப்பந்தம் செய்யப் பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளீர். அதே கடிதத்தில் விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகின்றீர் என்று முன்னுக்குப்பின் முரணாகவே பேசுவதில் புலமை வாய்ந்தவர் என்பதனை நிரூபித்து காட்டுகின்றது.


- நீர் இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் நான் மறுத்ததாக என்மீது அபாண்டமான பொய் சுமத்தியுள்ளீர். அவ்வாறு நீர் என்னை விவாதத்திற்கு அழைத்து நான்
மறுத்தது எப்போது என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்படியில்லையென்றால் நீர் உலக மகா பொய்யன் என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.



இப்படிக்கு
முனாப் நுபார்தீன் ஜே.பி
தொடர்புகளுக்கு:0094252247374, 252247353, 724589459, 776617610
அல்லது nufardeenjp@yahoo.com

No comments: