Monday, April 24, 2006

பொய்யுறைத்த சத்தியவாதிகள் (த.த.ஜ)!!



பொய்யுறைத்த சத்தியவாதிகள் (த.த.ஜ)!!

வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உன்டாவதாக .தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில பொது செயலாளர் சகோ. எஸ்.எம். பாக்கரின் வருகையில் குஷியாகிப்போன சவுதி த.த.ஜ வினர் ஏகப்பட்ட பொய்களை மின்னஞ்சல்களாக தட்டி விட்டு சகோ.பாக்கரின் வருகையையே கேளிகூத்தாக்கி மக்களின் நகைப்பிற்குறியதாக மாற்றியதை வாசகர்களும் இனைய தமிழ் முஸ்லிம் சமுதாயமும் நன்கறிந்ததே இதில் தீன் முகம்மது என்பவர் உச்சகட்டமாக பக்தி முத்திப்போய் தனது பொய்யை (இஸ்லாமிய அழைப்பாளர் முஜிபுர்ரஹ்மான் உமறி பற்றியது) விமர்சித்தவர்களை எல்லாம்
''இது எந்த வகையான அரிப்போ'' ''லாட்ஜில் விபச்சாரம்
செயதார்'' ''சைட் அடித்தார்'' என்று வார்த்தை சாக்கடையினால்
வசவியருந்தார்.

இப்படி பட்ட ஒரு புணிதமான த.த.ஜ வின் தொன்டனை பற்றி சகோ. பாக்கரிடம் ஜித்தாவிலும் , யான்புவிலும் விளக்கம் கேட்டபோது இவரை பற்றி தனக்கு யாரென்று தெறியாதென்றும் இதுகுறித்து த.த.ஜ வின் அதிகாரபூர்வ இனையதளத்தில் மறுப்பு வெளியிடுவதாகவும் பதில் அளித்துள்ளார் இதைபற்றி மற்ற சவுதி அரேபிய நிர்வாகிகளிடம் கேட்டபோது இந்த தீன் முகம்மது யாரென்று தெறியாதென்றும் த.த.ஜ விற்கும் இவருக்குமு; எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றும் மறுத்து வந்தார்கள். இதின் உச்சகட்டமாக த.த.ஜ விற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேன்டும் என்ற நோக்கில் த.மு.மு.க வினரே தீன் முகம்மது என்ற பெயரிலும் மற்றும் பல பெயர்களிளும் எழுதுகிறார்கள் என்றும் கூறினர் .இதை சகோ. பாக்கர் அவர்களும் நன்றாக அறிவார்.

இதை குறித்து கிழக்கு மாகான த.த.ஜ நிர்வாகி சகோ. முனீஃப் அவர்களிடம் கேட்டபோது இதுபோன்ற தவறுகளை த.த.ஜ ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை என்றும் தீன் முகம்மது செய்தது தவறு என்றும் கூறினார்.

இப்படி பொய்க்கு மேல் பொய்யுரைத்து இவர்களாள் அழைப்பு கொடுக்கபட்டு நிகழ்ச்சிக்கு வந்து சென்ற இஸ்லாமிய அழைப்பாளர் முஜிபுர்ரஹ்மான் உமறி பற்றி நாக்கூசும் அளவுக்கு அவதூருகளை எழுதி (காசிமி விஷயத்தில் எவ்வாறு பி.ஜே நடந்து கொன்டாறோ , காசிமியை அழைத்து சென்றுவிட்டு காசிமி இவர்களுக்கு எதிராக பொய்யுரைத்ததும் அவர் கீழ்த்தரமான காரியம் செய்தது எனக்கு தெறியும் என்று டி.வி யில் கூறியது போன்று) கேவலப்படுத்திய இவர்மீது த.த.ஜ நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது மறுப்பு அறிக்கையோ கொடுக்கவேன்டும் என்று கோரியபோது இந்த த.த.ஜ வினர் கூறிய பதில் :

"யாரென்றே தெறியாத ஒருவர் எங்கள் பெயரில் பொய்யுரைத்து அவதூரு பரப்பினால் அதற்கு த.த.ஜ வும் நிர்வாகமும் எப்படி பொருப்பாகும் என்று பதில்
கேள்வி எழுப்பி மறுத்தனர்."


இந்த தீன் முகம்மதால் இஸ்லாமிய அழைப்பாளர் முஜிபுர்ரஹ்மான் உமறி பற்றி எழுதபட்டசில அவதூருகளை பாருங்கள் இவர்களின் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக இவர்களின் நிகழ்ச்சிக்கு செல்லும் ஆலிம்கள் பின்வரும் வரிகளை படித்து இவர்கள் கொடுக்கும் மரியாதை என்னவென்று தெரிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் :

''இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தில் பணிபுரிந்து வரும் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ததஜவுடன் பல கருத்துவேறுபாடுகளை அன்னார் கொண்டிருந்தாலும், ஜித்தாவில் நடந்த கூட்டத்திற்கு மரியாதை நிமித்தமாக வந்திருந்தார்;. அவர் மேடைக்கு வந்து பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கருத்து வேறுபாட்டைக் காட்டுவதற்காக போஸ் கொடுத்து விட்டு போவார் என்று எதிர்பார்க்கவில்லை.''

''முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அமராதது உண்மையே! கடந்த மாதங்களில் இளையவன் அண்ட் கோவின் அமைப்பான தமுமுக, முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ரோபார்ட்டாக நடத்தி வந்தாலும், நான் அவர்மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாக, வந்தார் அமர்ந்தார் கேமரா மின்னியது சென்றார். என்று எழுதிவிட்டேன்.''

இவ்வார உணர்வை பார்த்த எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது , த.த.ஜவினராலும் அதன் சவுதி நிர்வாகிகளாளளும் யாரென்றே தெறியாதென்றும் , இயக்கத்திற்கு சம்பந்தமில்லாதவர் என்றும் , இயக்கத்தின் பெயரில் பொய்யுரைத்து இயக்கத்திற்கு கெட்ட பெபயரை ஏற்படுத்துவதற்காக எதிரிகளாள் தூன்டி விடபட்டவர் என்றும் வர்னிக்கபட்ட தீன் முகம்மதுவின் பொய்களுக்கு மெருகூட்டி அவரை அங்கீகரிக்கும் விதமாக விதமாக உணர்வில் (குரல் 33 உரிமை 10) அவரது பொய்களை எழுதியிருந்தார்கள். 800 பேர் வரையே கொள்ளளவு உள்ள தளத்தில் 1500 பேர் கூடியதாகவும் இஸ்லாத்திற்கு மாறிய ஓர் இந்து சகோதரர் இஸ்லாமிய ஒழுக்கவியல் தம்மை எவ்வாறு கவர்ந்தது என்பது குறித்து நிகழ்ச்சியில் விளக்கியதாகவும் பிரசுரித்துள்ளார்கள். உன்மையில் என்ன நடந்தது என்பது சகோ. பாக்கருக்கு நன்றாக தெறியும் உன்மையில் அங்கு கூடியது நேர்மையான த.த.ஜ சகோதரர்களின் கருத்துபடி 800 பேருக்குள்ளேயே மற்றும் முஸ்லிமாக மறிய சகோ. சிவா எதுவும் வேசவில்லை கலிமா சொல்லி விட்டு பின்னால் சென்று அமர்ந்துவிட்டார்.

இப்போது கீழ்க்கானும் கேள்விகளுக்கு பதில் அளிக்க சகோ. பாக்கர் அவாகளும் த.த.ஜ நிர்வாகமும் மற்றும் உணர்வு பத்திரிகையும் கடமைபட்டுள்ளனர்:

  • சத்தியத்தை முழங்க வந்த இயக்கம் மறியாதை நிமித்தமாக பொய் செல்வதை அங்கீகரிக்கின்றதா?
  • அப்படியில்லையெனில் தீன்முகம்மதுவின் பொய்களை விசாரிக்காமல் த.த.தஜ வின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வெளியிட்டது எவ்வகையில் நியாயம்? ஓன்று தீன்முகம்மது உணர்வின் செய்தியாளராக இருக்கவேன்டும் அல்லது த.த.ஜ வின் நிர்வாகியாக இருக்கவேன்டும் அப்படி இல்லாத பட்சத்தில் உணர்வில் பொய்கள் பிரசுரமானது எப்படி ??

  • இதுபோன்ற பொய்களை பரப்பக்கூடிய சகோதரர்களை த.த.ஜாவின் தலைமை கண்டிக்குமா?

  • குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட நம்மவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் எதிரணியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பலர் இன்னும் சென்று வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒரு உண்மையை வைத்து சில பொய்களை புனைந்துரைக்கும் த.த.ஜ. சகோதரர்களின் இத்தகைய செயல்பாட்டால் இவர்களின் நிகழ்ச்சிக்கு மற்றவர்கள் வருவதற்கு அஞ்சக்கூடிய நிலையை இவர்களே ஏற்படுத்தி தருகிறார்கள் என்பதை த.த.ஜ. தலைமை நிர்வாகிகள் உணர்வார்களா?

  • பொய்களை எழுதக்கூடிய தீன்முஹம்மது போன்றவர்களை நம்பி அந்த பொய்யை மின்னஞ்சலின் வழியே பரப்பும் த.த.ஜா.வின் பிற சகோதரர்கள் உண்மையை அடையாளம் கண்டு தீன் முஹம்மது போன்ற பொய்யர்களை தனிமைப்படுத்துவார்களா?

  • பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். த.த.ஜ.வின் மின்னஞ்சல் படை, பொய்யர்களா? அல்லது உண்மையாளர்களா?

  • தீன்முஹம்மது போன்ற பொய்யர்களை த.த.ஜ.வின் தலைமை பொதுவில் கண்டிக்க முன்வரவில்லையென்றால் த.த.ஜ. தலைமை மேல் உள்ள குற்றச்சாட்டு உண்மைப்படுத்தப்படும் என்பதை இவர்கள் உணர வேண்டும்

தீன் முஹம்மது என்ற அந்த பொய் பரப்பும் எழுத்தாளரை கண்டிக்கவேன்டும் , இவர் த.த.ஜ வினராக இருக்கும் பட்சத்தில் இவர்மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்கவேன்டும். அப்படி கண்டிக்காவிட்டால், த.த.ஜ.வின் நிழற்படைதான் அந்த பொய் பரப்பும் கும்பல் என்று ஒத்துக்கொண்டதாக ஆகிவிடும்.

மேடைக்கு வந்து அமராத ஒருவரை அமர்ந்ததாக குறிப்பிட்டு தவறான செய்தி பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. அப்படி செய்தி தந்த தீன் முஹம்மதிற்கு கண்டனம் தெரிவிப்பது ஒரு ஆரோக்கியமான செயல்.

த.த.ஜவினராலும் அதன் சவுதி நிர்வாகிகளாளளும் மற்றும் சகோ. பாக்கராலும் யாரென்றே தெறியாதென்றும் , இயக்கத்திற்கு சம்பந்தமில்லாதவர் என்றும் , இயக்கத்தின் பெயரில் பொய்யுரைத்து இயக்கத்திற்கு கெட்ட பெபயரை ஏற்படுத்துவதற்காக எதிரிகளாள் தூன்டி விடபட்டவர் என்றும் வர்னிக்கபட்ட தீன் முகம்மதுவின் பொய்களை பிரசுரித்த உணர்வு மறுப்பு வெளியிட வேன்டும்.
"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகறா 42) என்ற திருமறை வசனத்தை இவர்களுக்கு நினைவூட்ட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்"

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில பொது செயலாளா சகோ. பாக்கர் அவர்கள் அருமையான முறையில் இதுபோன்ற தவறுகள் களையப்படும் என்றும் இயக்கம் குறித்த எந்த ஒரு விமர்சனத்தையும் தனக்கு நேரடியாக அனுப்பி வைத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இது போன்ற தக்லீதுகளின் செயல்களினால் இயக்கம் பாதிக்கபடுவதையும் ஏற்று கொன்டார். இப்படிபட்ட நல்ல ஒரு தலைவர் உண்மைகளை அறியாதிருந்தது எப்படி??

த.த.ஜ வின் சவுதி நிர்வாகம் தனது மாநில பொது செயலாளரிடமே தீன் முகம்மது குறித்த பொய்யான தகவல்களை வழங்கியதா ? விவாதத்திற்கு வழி வகுத்து சர்ச்சைகளை ஏற்படுத்திய செய்தி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வெளி வந்தது எப்படி ?? தெறியாது என்று கூற முடியாது ஏனென்றால் சர்ச்சையை ஏற்படுத்திய முஜிபுர்ரஹ்மான் உமறி மேட்டர் கவனமாக தனிக்கை செய்யபட்டு வெளியிடபட்டுள்ளது.

ஏன் இதே செய்தியை ஜித்தா சகோ. ஷிப்லி பெயரிலோ அல்லது மற்ற அதிகார பூர்வ நிர்வாகிகளின் பெயரிலோ வெளியிட்டிருக்கலாமே !! தீன் முகம்மதின் பெயரிலேயே வெளியிட்டதன் மர்மம் என்ன??

த.த.ஜ கடிவாளத்தை இழந்த குதிரையை போல் செல்கின்றதா ?? மாநில அளவில் முஸ்லிம்களின் நன்மைக்காக செயல்படும் ஒரு இயக்கம் தனது கொன்டர்களையும் , பத்திரிகையையும் நிர்வாகிக்க முடியவில்லை எனில் இது எதில் போய் முடியும் ? சத்தியத்தை சொல்லும் தவ்ஹித் இயக்கம் இன்னும் பொய்களுக்கு வக்காலத்து வாங்கி தீன் முகம்மதுவின் பொய்களை மறைக்க முற்பட்டாலோ அல்லது நியாயபடுத்த முயன்றாலோ வேறு விஷயங்களை கூறி திசை திருப்ப முயன்றாலோ , த.த.ஜ சத்திய மார்க்கமாம் இஸ்லாத்திற்கு கேடு விளைவிக்கிறதென்று அர்த்தம் இதற்கு காலம் பதில் சொல்லும்.

சகோ. பாக்கர் , சகோ. பி.ஜே போன்ற நல்ல தலைவர்கள் தங்களது இயக்கத்தின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும் தொன்டர்களின் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து வைத்து கொள்வது நலம் அதுபோல் தங்களின் முகத்தை பிரதிபளிக்கும் உணர்வு போன்ற மீடியாக்களை அச்சிற்கு போகும்முன் ஒரு முறை சரி பார்ப்பது நலம் அல்லது நல்ல ஒரு நிர்வாகியையும் இதழியல் அறிந்த சகோதரர்களையும் கண்கானிப்பாளிராக இடுவது இயக்கத்தின் வளர்ச்சிக்கு நல்லது.

சகோ. பாக்கர் அவர்களே த.த.ஜ நிர்வாகிகளே , த.த.ஜ தொன்டர்களே தங்கள் இயக்கத்தின் மீதான இந்த விமர்சனத்தை எடுத்து நோக்கி தவறுகளை சரி செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு நல்லது ஏனெனில் விமர்சனங்களே இயக்கங்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் துனைசெய்கின்றன. அல்லது உம் இயக்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் எங்களை எப்போதும் போல் தங்களின் இயக்க விரோதிகளின் பட்டியளில் சேர்த்தாலும் ஒன்றுமில்லை ஏனெனில் நாம் எமது கருத்துக்களை காலத்தின் சுவடுகளிள் பதிகின்றோம் இவற்றை வளர்ச்சியின் பின்னரோ அல்லது வீழ்ச்சியின் பின்னரோ நாமும் நமது சந்ததியினரும் புரட்டி பார்ப்பர்.

குறிப்பு : சகோ. பாக்கர் கிழக்கு மாகானத்திற்கு வருகை தந்திருந்தபோது அவருடன் ஒரு நாள் முழுவதும் கூடவே இருந்து கவனித்ததில் அவர் தன்மீதும் இயக்கத்தின் மீதும் கூறப்படும் குற்றசாட்டுகளுக்கு மிக அருமையான முறையில் பதில் அளித்தார். ஒரு இஸ்லாமிய தலைவருக்கே உறிய முறையில் இஸ்லாத்தை அடிப்படையாக கொன்டே அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் அவர்கள் நிர்வாகிகள் ஊடான பேச்சக்களும் அமைந்திருந்தன . எனது பார்வையில் சகோ. பாக்கரின் பயணம் குறித்து எழுதலாம் என்றிருந்தேன் ஆனால் இந்த வார உணர்வு அதற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டது. சிந்தனைகளை திசைதிருப்பி விட்டது. இன்சா அல்லா, இது குறித்து கூடிய விரைவில் இங்கு மீன்டும் எழுதுவேன்.
மீன்டும் சந்திக்கும் வரை,
முகவைத்தமிழன்

5 comments:

Anonymous said...

நன்றி! நல்ல சிந்தனைகளுடன் கூடிய அருமையான பதிவு.

- இஸ்லாமிய வழிப்போக்கன்

Anonymous said...

பஞ்சாயத்து தலைவர் முக(மது)வைத்தமிழனின் தீர்ப்பிற்கு கீழே நின்ற முஜிபுர்ரஹ்மானை மேடையேற்றி தீன் முஹம்மது கட்டுபட்டுத்தான் ஆகனும். அதுமாதிரியே இளையவனின் பித்னாவையும் பஞ்சாயத்து தலைவர் அய்யா முகவைத்தமிழன்தான் தீர்த்து வைக்கனும். அவரும் பாக்கரின் தலையிலிருந்து கீழே விழுந்து விட்ட முடிகளை தலைக்கு ஏற்றி பொய் வடித்துள்ளார். இதுபற்றி பஞ்சாயத்து தலைவரோட கருத்தென்னானு தெரிஞ்சிக்குலாம்களா..

முகவைத்தமிழன் said...

மலம் தின்னும் பன்றியை பார்த்து அது மட்டும் மலம் திங்குது நானும் திம்பேன் என்பது போலுல்லது ஐயா உங்கள் வாதம் . மீன்டும் எனது வார்த்தைகளை படிக்கவும் ஐயா , ''தவறுகளை திருத்தி கொள்ள முயலுங்கள் அதைவிட்டு இளையவன் செய்தார் அதனால் நாங்களும் அதே தவறை செய்வோம் என்று கூறுவது வாதத்திற்கு மட்டுமே ஒத்து வரும் நடைமுறைக்கு அல்ல .

ஐயா , உங்கள் தலைவரை போல் வழக்காடி விவாதத்தால் மணிதர்களை மடக்கி முட்டாலாக்குவதை விட்டு விட்டு சுட்டிகாட்டபட்ட தவறுகளை திருத்தி நேர்வழியில் நடக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் இப்படி கூறுவீர்கள் என்று முன்னமே எதிர்பார்த்தது தான் ஐயா.

Anonymous said...

என்னய்யா இது அநியாயமா இருக்கு.. இது எந்த வகை அரிப்போன்னு கட்டுரை எழுதிய பஞ்சாயத்து தலைவரா இப்படி மலம், பன்னின்னு பேசுராரு.. நம்ப முடியலையப்பா.. சுட்டிக்காட்டப்பட்ட தப்பை நாங்க திருத்திக்கிறது இருக்கட்டும், பஞ்சாயத்து தலைவரு திருத்திக் கொள்வாரா.. இல்லை இந்த கமெண்டை ரிஜெக்ட் பண்ணப்போறாரா? பொருத்திருந்துதான் பார்ப்போமே..

Anonymous said...

IPPTHU UNARVU NIRVAKAM "KAMISAN"(CUTTING!)PUKAL A.S ALVUDINIDAM ULLATHAKA THRIKIRATHU......AVRAR ULLAVARAI UNARAVU URUPPADAATHU!